Blogger Widgets

அறிவிப்பு

நிரந்தரமாக இன்பத்தை அனுபவித்தவனும் இல்லை. நிரந்தரமாகத் துன்பத்தில் உழன்றவனும் இல்லை.

நாசாவின் பயமும் :நமது பழமையான பலமும்

இந்தப் பதிவில் இரண்டு முக்கியமான விஷயங்கள் பதிவிடப்படுகின்றன.
1.திருநள்ளார் சனிஸ்வர பகவானும் ,நாசாவும் ,.
2.பாம்பு விஷம் மற்றும் அமுதம் பற்றியும் . 

சனி பகவான் 
இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு,உளவு என பல்வேறு காரங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் பொது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில்ஏற்படுவதில்லை.
இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை அளித்தது.

இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது.




ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும் ஸ்தம்பித்துவிடுகின்றன. 

அப்படி நிகழ்வதற்கு என்ன காரணம் ???


        . இதன் காரணம் கண்டறிய நாசா ‘NASA’ விஞ்ஞானிகள் சிலர்  திருநள்ளாறு வந்து  ஆராய்ச்சி செய்தனர்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் சனிக்கிரகத்திலிருந்து கண்ணுக்குப் தெரியாத கருநீலக்கதிர்கள் அந்தக் கோயில் மீது விழுந்து கொண்டே இருக்கின்றன. இரண்டரை வருடங்களுக்கு வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும்-ஒவ்வொரு சனிப் பெயர்ச்சியின் போதும் இந்த கருநீலக்கதிர்களின் மிக அடர்த்தியாக இருக்கின்றன.  இதனால் விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைக் கோள்கள் இந்த கருநீலக்கதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும் போது ஸ்தம்பித்துவிடுகின்றன.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், இந்தக் கோவில்தான் இந்துக்களால் “சனிபகவான்”…தலம் என்று போற்றப்படுகிறது. நம்முடைய முன்னோர்கள் சனிகோளின் கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டு பிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் அதிகள் விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனிபெயர்ச்சி என்று அறிவிக்கும் திறமையை பிரமிக்கவைகிறது.
நாசா விஞ்ஞானிகளும்  ‘இது ஒரு அதிசயம் தான்’  என்று  ஏற்றுக்கொண்டனர்

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்துகொண்டே இருக்கிறது.
இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் பொது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும்போது ஸ்தம்பித்து விடுகின்றன. அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த விதபாதிப்பும் ஏற்படுவதில்லை.
 மனிதனை மீறிய சக்தி உண்டு என்பதை உணர்ந்தனர். அவர்களும் சனிபகவானை கையெடுத்து கும்பிட்டு உணர்ந்தனர். இன்று வரை விண்ணில் செயற்கைகோள்கள்
திருநள்ளாறு பகுதியை கடக்கும் பொது ஸ்தம்பித்து கொண்டே இருக்கிறது."

இந்த செய்தியை கேட்டு பிரமிக்காதவர்கள் நம்முடைய முன்னோர்களை நினைத்து கட்டயம் பிரமிக்கவேண்டும். நாம் பல செயற்கைகோள்கள் கொண்டு கண்டறியும் சனிகோளின் கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டு பிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் அதிகள் விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனிபெயர்ச்சி என்று அறிவிக்கும் திறமையை,நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட நம் முன்னோர்களை நினைத்து என்னால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.

இதை விஞ்சும் வகையில் இன்னொரு விசயம் 

நீங்கள் எதாவது சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே
நவகிரகங்களை நன்றாக கவனியுங்கள். அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளையும் நன்றாய் உற்று பாருங்கள்!!
உங்கள் அறிவியல் அறிவையும் கொஞ்சம் தட்டிவிடுங்கள்!!

எந்த கோள் எந்த நிறத்தில் இருக்கும் என்பதை நம் முன்னோர்கள் கட்டிவைத்திருக்கும் அந்த துணிகளில் கண்டறியுங்கள், பிரமித்து போவீர்கள் பெரியோர்களின் அறிவாற்றலை நினைத்து, இந்தஅறிவியலின் அதிசயத்தை அனைத்து தலைமுறையும் அறியவேண்டும், அதற்காக அவர்கள் நம்மை பின்பற்ற வைத்ததுதான் கடவுள் மார்க்கம் என்றே நான் எண்ணுகிறேன்...

எது எப்படியோ??? நமது முன்னோர்கள் நம்மை விட
கில்லாடிகள் !!!!

எப்படியா ??

அவர்கள் போட்ட புதிருக்கு இன்னும் விடை தெரியாமல்
அலைந்து கொண்டிருகிருகிறோம்.. அறிவியல் வளர்ச்சியோடு.
_________________________________________________________________________________
---------------------------------------------------------------------------------------------------------------------
பாம்பின் விஷம்!  இந்த பெயரைக் கேட்டவுடனேயே நம்மில் பலருக்கு நடுக்கம் ஏற்படுவது இயல்பு.ஆனால் இந்த பாம்பின் கொடிய நஞ்சு தான் மருத்துவத்தில் விஷமுறிவு மருந்தாகப் பயன்படுகிறது.இந்த விஷ மருந்து வெளிநாட்டு மருத்துவ ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டது.

பாம்பு என்றால் படையும் நடுங்கும். ஆனால் அந்த பாம்பில் இருந்து எடுக்கப்படும் விஷம் பலதரப்பட்ட பெரிய நோய்களை குணப்படுத்தக்கூடியது என ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து ஜப்பான் யமனாஷி பல்கலைக்கழக பேராசிரியர் காட்சூ சுசுகி-இனோயூ தலைமையில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டனர்.
அப்போது, பாம்பின் விஷம் மாரடைப்பு, வலிப்பு மற்றும் கேன்சர் போன்ற மிக கொடிய நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது என தெரிய வந்தது.
பாம்பின் விஷம் நச்சுத் தன்மை வாய்ந்தது. அதில் பலவிதமான புரோட்டீன்கள் உள்ளன. அவை இந்த நோய்களை உருவாக்கும் கிருமிகளை அழித்து குணப்படுத்துகின்றன என்று தெரிவித்துள்ளனர்.



நீலகண்டன் 

ஆனால் நமது நாட்டில் பழங்காலத்திலேயே இந்த முறை பழக்கத்தில் இருந்திருக்க வேண்டும்,ஏனெனில் அமுதம் கிடைத்தது இந்த மாதிரியான் ஒரு நிகழ்விலிருந்துதான்.



         தேவர்களும், அசுரர்களும் திருமாலின் ஆலோசனைப்படி மந்திரமலை மத்தாகவும், வாசுகி என்னும் ஆயிரம் தலை பாம்பை கயிறாகவும் கொண்டு பாற்கடலை அமுதம் வேண்டிக்கடைந்தனர். திருமால் ஆமை உருவம் கொண்டு மந்திரமலையின் அடியை முதுகாலும், கைகளாலும் தாங்கினார். ஆனாலும் கடைதல் தொடர்ந்து நடைபெற்று வரவே ஒருக்குறிப்பிட்டக் காலத்திற்கு பின்னர் வாசுகி என்ற பாம்பு வலிதாளாமல் அதன் ஆயிரம் தலை வழியே கடுமையான, கொடுமையான ஆலகால விஷத்தைத் துப்பியது, அவ்விஷமானது அனைத்து இடங்களிலும் பரவ அது கண்ட திருமால் அதை அடக்க சென்றார். ஆனால் அவ்விஷத்தின் கடுமை அவரது மேனியைக் கருக்கியது, அதனால் அவர் ஓடினார். பின்னர் அனைத்து தேவர் குழாமும் கைலை சென்று நந்திதேவரின் அனுமதியுடன் சிவனை தரிசித்தனர். திருமாலின் மாறுவேடத்தைக் கண்ட சிவபெருமான் அவரிடம் இந்தக் கோலத்திற்கான காரணம் வேண்ட அனைவரும் பாற்கடல் விஷயத்தைக் கூறினார். பார்வதி தேவியும் அவர்களைக் காக்குமாறுக் கூறினார். பின்னர் சுந்தரர் கொண்டு வந்த விஷத்தை உண்டார். அது தொண்டைக் குழிக்குள் சென்றதும் அதை அங்கேயே நிறுத்தினார். ஆகவே அவரது பெயர் நீலகண்டன், சீசகண்டர் என்றாயிற்று. இதற்குப் பின்னர் சிவபெருமானின் அனுமதியுடன் பாற்கடலைக் கடைய அதிலிருந்து அமுதமும், இன்னபிற பொருள்களும் வந்தது. திருமால் மோகினியாகி அசுரர்களை வஞ்சித்து தேவர்களுக்கு அமுதம் கொடுத்தார். அதன்பின் அவரவர் அவரவரர் பதவியில் சென்று அமர்ந்தனர்,      


   இந்த நிகழ்வானது கிட்டதட்ட விஷத்திலிருந்துதான் அமுதம் கிடைத்தது போல நமக்கு காட்டுகிறது,ஆனால் நாம் அதை இதுவரைக்கும் அதைப்பற்றி யாரும் நினைத்துகூடப் பார்ப்பதில்லை.இதற்கும் முன்னர் சொன்ன தகவலுக்கும் இப்பொழுது சம்பந்தம் உள்ளது தெரிகிறதா?




 நம் முன்னோர்கள் சொல்ல வந்த விஷயங்கள் யாவும் இலைமறை காயாகவே சொல்லப்பட்டிருக்கும்.எனவே இந்த அமுதம் கடைந்த நிகழ்வும் இப்படித்தான்,பாம்பின் விஷத்தில் அமுதம் இருக்கிறது,இதனை யாராவது வேதியலாளர்கள் படித்துவிட்டு முயன்று பாருங்கள்.


எகிப்து பாம்புக் கடவுள் 
அளவு முறைகள் இம்மியளவு மாறினாலும் பலன் கிடைக்காது.      ரசமணிகள்  செய்வதிலும் அளவு முறைகள் முக்கியம் .




அப்படி முயன்று எதேனும் அமுதம் மாதிரியான அதிசயத்தைக் கண்டுபிடியுங்கள்.


ம்! நம் நாட்டில் முன்னோர்கள் சொன்னதை எல்லாம் பழைய பஞ்சாங்கம் என்று புறந்தள்ளிவிடுகிறோம்.


இதுவரை அவர்கள் எதற்காக சொன்னார்கள் என்று ஒரு கனம் யோசித்துப் பார்த்ததுண்டா?   நம் முன்னோர்கள் சொன்ன கருத்துகளை ஒரு வெளிநாட்டினர் சொன்னால் அதையே வேதவாக்காக எடுத்துக் கொண்டு கண்மூடித்தனமாக பின்பற்றுகிறோம்.

ஆனால்  நம் முன்னோர்கள் ஏன்?எதற்கு? சொன்னார்கள் என்று ஒரே ஒரு நிமிடம் யோசித்துப்பாருஙள்.நம்மிடம் உள்ள ப்ழங்கால கலைகளும் சரி,மருத்துவ முறைகளையும் சரி வெளிநாட்டினர் காப்புரிமை பெற்றுக்கொண்டிருக்கின்றனர்.அதனால் நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்,

இனி எஞ்சியுள்ள பழமையானவைகளையாவது காப்போம்!பழைய விஷயங்கள் ஒவ்வொன்றிலும் அறிவியல் நிகழ்வுகள் உள்ளது.


இன்னுமொரு பதிவில் சிதம்பர ரகசியம் ,
உலகின் காந்த மையப் பகுதி எது?.
யோசியுங்கள் ......................................................
wait and see.



0 comments:

Post a Comment

Animated Social Gadget - Blogger And Wordpress Tips