Blogger Widgets

அறிவிப்பு

நிரந்தரமாக இன்பத்தை அனுபவித்தவனும் இல்லை. நிரந்தரமாகத் துன்பத்தில் உழன்றவனும் இல்லை.

கட்டபொம்மன் கோட்டை



சில மாதங்களுக்கு முன் நண்பர் ஒருவரின் திருமணத்திற்காக தூத்துக்குடிக்கு 8 பேர் சென்றோம்.திருமணம் முடிந்து வரும் வழியில் எதேச்சையாகத்தான் கட்டபொம்மன் கோட்டை நுழைவாயிலைப் பார்த்தோம்.

பின் அங்கு சென்று வரலாம் என்று எல்லோரும் சென்றோம்.



  1. வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு மண்டபத்திற்குள் நுழைவதற்கு முன்னர் நாம் ஐந்து வளைவுகளைத் தாண்டிச் செல்ல வேண்டும். முதலில் தெரிவது ஊமைத்துரை நுழைவாயில்.

2. இதைக் கடந்து மேலும் சற்று தூரம் பயணம் செய்து கொண்டிருக்கும் போது இரண்டாவது நுழைவாயில் தென்படுகின்றது. இதற்குப் பெயர் வெள்ளையத்தேவர் நுழைவாயில்.

3. இதைக் கடந்து மேலும் சற்று தூரம் சென்ற பின்னர் நம்மை வரவேற்பது தானாபதிப் பிள்ளை தோரணவாயில்.

4. இதற்கு அடுத்தார் போல் சற்று தூரத்தில் அமைந்திருப்பது சுந்தரலிங்கம் தோரணவாயில்.

5. இதனைக் கடந்து மேலும் பயணித்துக் கொண்டிருக்கும் போது நம்மை வரவேற்பது வீரசக்கம்மாள் தோரணவாயில்.


இந்த ஐந்து தோரண நுழைவாயில்களையும் கடந்து செல்லும் போது சற்று தூரத்திலிருந்தே வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவுக் கோட்டை தெரிகின்றது.

இவ்வளவு அழகாக ஒரு சிறு கோட்டை போல இந்த மண்டபம் இருக்கும் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.



வீரபாண்டிய கட்டபொம்மனைக் கைது செய்து தூக்கிலிட்ட பிறகு அவர் கட்டிய மாளிகை ஆங்கிலேய அதிகாரிகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அப்பகுதி பிறகு வெறும் மணல் மேடாகக் கிடந்தது. இந்த இடத்திற்குப் பக்கத்தில் அந்த சண்டையின் போது இறந்து போன பன்னிரண்டு ஆங்கிலேய வீரர்களுக்கும் ஆங்கிலேய அரசாங்கத்தால் கல்லறை கட்டப்பட்டது. அதில் அந்த ஆங்கிலேய வீரர்களின் பெயர்கள் குறிப்புக்கள் ஆகியவை சேர்க்கப்பட்டு இப்பகுதி ஆங்கிலேயர்கள் காலத்திலேயே நல்ல முறையில் பாதுகாக்கப்பட்டு வந்தது.

போகும் வழியும் குண்டும் குழியுமாக உள்ளது.


கால தாமதம் ஆனதால் அவர் தூக்கிலிடப்பட்ட இடத்துக்குச் செல்ல முடியவில்லை.



இன்றைய நிலையில் குறைந்த அளவிலேயே சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.


மேலும் கூட்டம் குறைவாக இருப்பதால் ,இளஞ்ஜோடிகள் பணத்தை கொடுத்து

அதிக அளவில் வருகின்றனர்.

இதை அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்..இல்லையெனில் ஒரு மாவீரன் கோட்டை லாட்ஜ் ஆக மாறிவிடும்...









வெங்காயத்தின் மகிமை.



  • தூக்கமில்லாமல் கஷ்டப்படும் குழந்தைகளுக்கு சிறிய வெங்காயத்தைத் தண்ணீரில் கொதிக்க வைத்து எடுத்த தண்ணீரில் இரண்டு ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கொடுக்க நல்ல தூக்கம் வரும்.
  • சிறு குழந்தைகளுக்கு உண்டாகும் டான்சில் வியாதிக்கு ஒரு சிறிய வெங்காயத்தை தோல் நீக்கி சிறிது உப்பு சேர்த்து மென்று சாப்பிட்டு, குளிர்ந்த தண்ணீரைச் சாப்பிடச் செய்வதன் மூலம் ஓரளவு குணம் கிடைக்கும்.
  • காது வலிக்கு வெங்காயத்தை நறுக்கி அதன் உள்ளே உள்ள குருத்தை இடித்துப் பிழிந்த சாறைச் சில துளிகள் எடுத்து லேசாகச் சுட வைத்து காதில் விட்டால் வலி, குத்தல் நிற்கும்.
  • அஜீரணத்தால் வாந்தி, பேதி அடிக்கடி மணிக்கு ஒரு தடவை உண்டானால் வெங்காயச்சாறு அரை அவுன்ஸ் வீதம் குளிர்ந்த நீரில் கலந்து அடிக்கடி கொடுத்துவர மப்பு குறைந்து ஜீரண சக்தி உண்டாகி வாந்தி, பேதி நிற்கும்.
  • விஷப்பூச்சிகளால் உண்டான வாந்திபேதியில் ஆரம்பத்திலேயே வெங்காயச்சாறு ஒவ்வொரு அவுன்ஸும், 2, 3 சிட்டிகை பெருங்காயத் தூளும் கலந்து அரை மணிக்கு ஒரு தடவை கொடுக்க குணமாகும். இந்த நிலையில் கை, கால் குளிர்ந்து ஜில்லிப்புடன் காணப்பட்டால் வெங்காயத்தின் சாற்றையே பாதங்களிலும் உள்ளங்கைகளிலும் தடவி சூடு வரும்படி தேய்க்க வேண்டும்.
  • தோல் நீக்கிய வெங்காயத்தைச் சிறு துண்டாக நறுக்கி குளிர்ந்த நீரில் நான்கு அல்லது ஐந்து தடவை அலம்பி தயிர் சேர்த்து தினம் மூன்று முறை உட்கொள்ள வயிற்றுக் கடுப்பு நீங்கும்.
  • மூக்கிலிருந்து ரத்தக்கசிவு ஏற்படும்போது வெங்காயத்தைக் கசக்கி முகர்ந்தால் உடன் ரத்தக்கசிவு நிற்கும். வெங்காயச்சாறு அல்லது வெங்காயச்சாறும் நல்லெண்ணெயும் சம அளவு கலக்கி அதன் சில துளிகளை யாவது வலிக்கும் சொத்தைப் பற்களில் வைத்தால் சிறிது நேரத்தில் பூச்சிகளும் இறந்து வலியும் நின்றுவிடும்.
  • வெங்காயச்சாறு அரை அவுன்ஸும், சுத்தமான தேன் கால் அவுன்ஸும் கலந்து காலை, மாலை 2 வேளை வீதம் 25 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் ஆண்களுக்கு வீர்யம் அதிகரிக்கும்.


உக்காந்து யோசிப்பாங்களோ?



ஒருநாள், மிஸ்டர்.மொக்கை குளக்கரையில் அமர்ந்திருந்தார்.. குளத்தினுள்
செங்கற்களைத் தூக்கிப்போட்டுவிட்டு அது ஏற்படுத்தும் அலைகளை
ஆழக்கவனித்தவாறு
சிந்தித்துக்கொண்டிருந்தார்.
அவ்வழியே போன ஒருவர் இதுகுறித்து விசாரிக்க.. மொக்கையார் மொழிந்தார்..
புரட்சிகரமான ஆராய்ச்சி முயற்சியில் இருக்கிறேன்..
புரட்சிகரமான ஆராய்ச்சியா..? அடடே.. சபாஷ்..! அப்படியென்ன ஆராய்ச்சி
அது..?
நான் செவ்வக வடிவமான கற்களை குளத்தினுள் எறிகிறேன்.. ஆனால் அது வட்ட
வடிவமான
அலைகளை ஏற்படுத்துகிறதே.. எப்படி..? இதுகுறித்துதான் ஆராய்கிறேன்..!!!
_____________________________________________________*
*_________________*
*இந்தாப்பா ராப்பிச்சை.. ரெண்டு நாளா வீட்டுக்காரர் ஊர்லே இல்ல. ரசம்தான்
வச்சேன்.. வாங்கிட்டு போறியா..?
மவராசன் சமைச்சது இல்லியா.. சரி போடு தாயி.. போற உசுரு எப்படிப் போனா என்ன..?*
*_________________*
*ஒருவன் பழைய கட்டிடத்தினூடே சென்று கொண்டிருந்தான்..
அப்போது " அப்படியே நில்.. அசையாதே.." என்று ஒரு சத்தம். ஆனால் எங்கிருந்து
வந்தது எனத் தெரியவில்லை.. என்றாலும் அசையாமல் நிற்க, அவன் போகவிருந்த வழியில்
ஒரு சுவர் இடிந்து விழுந்தது. இவன் நிம்மதிப் பெருமூச்சு விட்டான்..
மற்றொரு நாள்.. பேர்ந்தில் ஏறப் போனபோது மீண்டும் அதே குரல்.. " இந்த பேருந்து
வேண்டாம்..". அவனும் அதைத் தவிர்த்து அடுத்த பேருந்தில் செல்லும்போது இவன்
சென்றிருக்கவேண்டிய பேருந்து கவிழ்ந்திருப்பதைப் பார்த்தான்..
மிகவும் ஆச்சரியத்துக்குள்ளானவனாய், யார் என்னை ஒவ்வொருமுறையும்
காப்பாற்றுவது..?" என நினைத்தான்..


கூகுள் தரும் புதிய வசதி


இந்திய இசை ரசிகர்களுக்காக GOOGLE புதிய இசைக்கான சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆம், பல்வேறு தேடல்களை எளிதாக்கிய கூகுள் இந்த முறை நீங்கள் விரும்பும் பாடல்களை எளிதாக தேடி கேட்டு மகிழ இசைக்கென தனியாக ஒரு தேடல் பொறியை வழங்குகிறது. தற்சமயம் இந்திப் பாடல்களை மட்டும் கேட்டு மகிழலாம். in.com,Saavn மற்றும் Saregamaஆகிய தளங்களுடன் இணைந்து இந்த சேவையினை வழங்குகிறது.


70 களில் வந்த திரைப்படங்களில் இருந்து இப்போதைய டெல்லிபெல்லி வரை இந்தி பாடல்கள் உள்ளது.தமிழில் மாவீரன்,ரோஜா,கர்ணன், உள்ளிட்ட சில படங்கள் மட்டுமே உள்ளன.தெலுங்கு படங்களும் ஒரு சில மட்டுமே உள்ளன.



இதற்கான காப்புரிமையின தனிப்பட்ட முறையிலும், பங்குதாரர்களின் மூலமாகவும் 1000 க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு பெற்றுள்ளது. கூடுதலான சேவைகளை இன்னும் வழங்கவில்லை.. எனினும் எல்லாத்துறைகளிலும் கலக்கும் கூகுள் மேலதிகமாக புதுமைகளை இதிலும் அறிமுகப்படுத்தும் என நம்புவோம்.

இணையதள முகவரி: http://www.google.co.in/music/





தலைவணங்குவோம்!

பாசத்திற்கு அடிமையாகாதவர்கள் இருக்க முடியாது.அப்படி ஒருவர் இருக்கிறார் என்றால் அவர் முற்றும் துறந்த முனிவராகத்தான் இருக்க முடியும்.
ஆனால் ஒரு அரசியல்வாதி அதுவும் ஒரு மாநிலத்தின் முதல்வர் அப்படி இருந்திருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா?
ஆம் அவர்தான் நம் கர்மவீர
ர் “காமராஜர்”.


காமராஜர் முதல்வராய் இருந்த சமயம்,அவரின் தாயார் சிவகாமி அம்மையார் தெருவில் உள்ள ஒரு குழாயில் சென்று தண்ணீர் பிடிப்பார்.எழுபது வயதிற்கும் அதிகமான ஒரு தாய்,அதுவும் முதல்வரின் அம்மா தெருக்குழாயில் சென்று தண்ணீர் எடுப்பதைப் பார்த்த அதிகாரிகள் அந்த அம்மாவின் வீட்டிற்கு ஒரு குடிநீர் குழாய் அமைத்துக் கொடுத்தார்கள்.

ஒரு நாள் காமராஜர் தன் தாயாரைப் பார்க்க விருதுநகர் வீட்டிற்கு சென்றார்.புதிதாக குடிநீர்க் குழாய் அமைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தார்.
‘அம்மா யாரிந்தக் குழாயை வச்சா?’ என்று கேட்டார்.
‘என்னால உடம்புக்கு முடியல...அதனால முனிசி்பாலிட்டிக்காரங்க வச்சாங்க’ என்று அவரின் அம்மா கூறினார்.

காமராஜர் உடனே அவர்களுக்கு போன் பண்ணி அவர்களை வரச் சொன்னார்.
‘என்ன இது....?என் அம்மாவிற்கு மட்டும் தனி வசதி.இதை உடனே அகற்றி விடுங்கள். இனி இதுபோல் நடக்கக் கூடாது’ என்று எச்சரித்தார்.


அதோடு’அம்மா.... நமது ஊரில் நம்மைப்போன்ற சாதாரண மக்கள் எப்படி தண்ணீர் பிடிக்கிறார்களோ அப்படித்தான் நாமும் ஊர்க்குழாயில் தண்ணீர் பிடிக்கவேண்டும்’ என்று தாயாருக்கே பாச உத்தரவு போட்டார்.



கோடிகோடியாய் பணம் சேர்க்கும் இன்றைய அரசியல்வாதிகளிடம் காமராஜர் குன்றென நிமிர்ந்து நிற்கிறார்.காமராஜரின் பாச உணர்வும்,தியாக மனப்பான்மையும்,கடமையில் எள்ளளவும் தவறாத பண்புள்ளம் கொண்ட இவரைப் போன்றவரை இனி நாடு காணுமோ?


சிரிப்பு வருது


இங்கே நாம் பார்க்கப் போறது கலக்கலான எஸ்.எம்.எஸ் களின் தொகுப்பு

1) அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?
ஒரு பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை....
அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை....

2) நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே மிகப் பெரிய எதிரி.....
காந்தி சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்....
இப்ப சொல்லுங்க... மாமா சொல்றத கேக்குறதா? இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா?

3) காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?......
சீனாவுல தான் பிறந்தது.....
ஏனெனில் Anything made in China is NO GURANTEE & NO WARRANTY.

4) ஒரு முறை நியூட்டன் அவருக்கு 17 வயதில் வகுப்பறையில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பாம்பு அவருடைய கால் விரலில் கடித்துவிட்டது. அப்போதும் அவர் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார். ஆசிரியர் இது பற்றி கேட்கும்போது, " பாம்பு என் காலில்தான் கடித்தது, என்னுடைய Mind 'ல் அல்ல" என்கிறார். இதைத்தான் நாம் "வெட்டி ஸீன்" போடுவது என்கிறோம்....

5) நபர் - 1: ஹோடேலில் சாப்பிட்டுவிட்டுப் பார்க்கிறேன், கையில் காசு இல்லை.....
நபர் - 2: அய்யய்யோ... அப்புறம் என்ன பண்ணுனீங்க?..
நபர் - 1: அப்புறம் பாக்கெட்'ல இருந்து எடுத்துக் கொடுத்துட்டேன்....


Animated Social Gadget - Blogger And Wordpress Tips