Blogger Widgets

அறிவிப்பு

நிரந்தரமாக இன்பத்தை அனுபவித்தவனும் இல்லை. நிரந்தரமாகத் துன்பத்தில் உழன்றவனும் இல்லை.
Showing posts with label காவியம். Show all posts
Showing posts with label காவியம். Show all posts

இழந்துபோன இன்பங்கள்-பகுதி 1

இன்றைய வெளிநாட்டு மோக வாழ்க்கையில், நாம் ஒரு இயந்திர வாழ்க்கைதான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
நம் தமிழர்மரபுகள் பல மறக்கப்பட்டு விட்டன,ஏன் மறக்கடிக்கப்பட்டது என்றே சொல்லலாம்.
முந்தைய காலகட்டங்களில்  மக்கள் பலதுறைகளில் கைதேர்ந்தவர்களாய் இருந்தார்கள்.இப்போது இருக்கும் நாமோ ஒரு துறையினையே நல்ல முறையில் கற்று தேர்வதில்லை.அது போக நமக்கு அனுபவ அறிவும் போதவில்லை.






தாஜ்மஹாலின் இருண்ட பக்கங்கள்-வெளிவராத மர்மங்கள்.



ஷாஜஹானின் ஆட்சியின் கடைசிகாலகட்டம் அது.ஔரங்கசீப் ஆட்சி அரங்கேறியது.

தன் தந்தையை சிறை வைத்தார் ஔரங்கசீப்.

ஆக்ரா கோட்டையில் எட்டு ஆண்டுகள் சிறைவைக்கப்பட்ட ஷாஜகானுக்கு மாற்று உடைகளும், எழுதும் உபகரணங்களும் மறுக்கப்பட்ட காலம்.அவர் அணிந்திருந்த ஆபரணங்களும் அகற்றப்பட்டன.

பூனை இளைத்தால் எலிக்குக் கொண்டாட்டம்என்னும் முதுமொழிக்கேற்ப ஷாஜகானை


காவலாளிகள் கூட மரியாதைக் குறைவாக நடந்து கொண்டனர்.
மகனான ஔரங்கசீப் மதித்தால்தானே காவலர்கள் மதிப்பதற்கு.

வெறுப்பின் உச்சகட்டத்திற்கு போன ஷாஜகானுக்கு பாலைவனச்சோலையாக இருந்தது தன் மகளான ஜஹனாராதான்.மகன் மதிக்காது போனாலும் தன் மகள் ஜஹனாராவாவது தமக்கு சிறையில் உதவியாய் இருப்பது மகிழ்ச்சியளிப்பதாய் இருந்தது ஷாஜகானுக்கு.

பெரும்பாலான பொழுதை தொலைவில் தெரியும் தன் காதல்மனைவியின் கல்லறையான தாஜ்மஹாலையே கண்ணிமைக்காமல் பார்த்து தன் நிலை எண்ணி கவலையுற்று,நோய்வாய்ப்பட்டார்.


புனித குர் ஆன் படிப்பதற்குமட்டுமே ஷாஜஹானுக்கு ஔரங்கசீப் அனுமதித்தார்.

(மகன் தந்தைக்கு ஆற்றும் செயல்).

கடைசிகாலத்தில் மறுபடியும் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் விழுந்த ஷாஜஹானால்,படுக்கையை விட்டு எழுந்து நடமாட முடியவில்லை.

அந்த நிலையிலும் தன் சகோதரியின் வேண்டுகோளுக்கிணங்கி ஔரங்கசீப் ,ஆளுயர கண்ணாடி ஒன்றை ஷாஜஹான் தாஜ்மஹாலை பார்க்கவசதியாக வைப்பதற்கு ஔரங்கசீப் அனுமதித்தார்.

ஜனவரி 22,1666 அன்று ஷாஜஹானின் எழுபத்து நாலாம் வயதில்,ஜஹனாரா பேகம் தன் தந்தையின் சிறைக்குள் நுழையும் நேரம்



Animated Social Gadget - Blogger And Wordpress Tips