Blogger Widgets

அறிவிப்பு

நிரந்தரமாக இன்பத்தை அனுபவித்தவனும் இல்லை. நிரந்தரமாகத் துன்பத்தில் உழன்றவனும் இல்லை.
Showing posts with label மறக்கமுடியுமா?. Show all posts
Showing posts with label மறக்கமுடியுமா?. Show all posts

மரங்கள்-நம் மருத்துவர்கள்

இனி வரும் காலங்களில் ஒவ்வொரு மரங்களின் தன்மை,மருத்துவ குணங்கள் பற்றி பார்க்கலாம்.முதலாவதாய் வருவது அரச மரம்தான்.
”அரசு இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்பது நம் முன்னோர் மொழி.அரசமரத்தின் உதிர்ந்த இலைகளைக் கொண்டு ஒரு ஏக்கர் நிலத்தில் விளைச்சல் எடுக்கலாம்.ஒரு வருடத்திற்கு 1 டன் முதல் 4 டன் இலைகளை உதிர்க்கும் இந்த அரச மரம்,மழை மேகங்களை கவர்ந்திழுக்கும் தன்மை கொண்டவை.மேலும் அதிகளவு ஆக்ஸிஜன் வாயுவை தரும் மரமும் இதுவே
இதனால்தான் நம் முன்னோர்கள் இதனை கோவில்களில் நட்டு,108 தடவை சுற்றி வரச் செய்தார்கள்.அப்படி சுற்றி வரும்போது கார்பன் -டை -ஆக்ஸைடை அதிகளவு  உட்கிரகித்து கொண்டு,உடம்புக்குத் தேவையான பிராண வாயுவை நமக்கு அளிக்கிறது.
புத்தருக்கு ஞானம் அளித்த இந்த அரச எனும் போதி மரம்,விசுவாமித்திர முனிவருக்கும் காயத்ரீ ஞானம் பிறந்தது.கி,மு,288 காலங்களில் அசோகர் ஸ்ரீலங்கா மன்னருக்கு புத்த மதத்தின் பரிசாய் அனுப்பியிருக்கிறார்.இதனால் அரசமரத்தடியில் புத்ததுறவிகள் கூடும் மரபு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
காந்திஜியும்,நேருவும் அரச மரங்களை நட்டனர்,.இன்னும் கிராமங்களில் மக்கள் கூடும் சந்தைகளும்,விசேடங்களும் அரச மரத்தடியில்தான்.கிராமங்களில் அரச மரம் ஆணாகவும்,வேம்பு பெண்ணாகவும் சித்தரித்து திருமணம் செய்விப்பார்கள்.குழந்தை பேறு உண்டாக்கும் மருந்துகள்,சுற்றி வரும்போது ஏற்படும் வேதியல் மாற்றங்களால்,பிணி நீங்குதல்,மூல நோயை குணப்படுத்துதல்,என்று இதன் மருத்துவகுணங்கள் ஏராளம்.




பிறர் பார்வையில் என்னைப் பார்க்கிறேன்

ஒரு போலியான வாழ்க்கை  எல்லோரிடதிலும் உள்ளது.அதைப் பற்றி 
முகத்தில் அணிந்திருக்கும் அறிவு ஜீவி முகமூடியைக் களைந்து விட்டு, எந்த வித போலித்தனமுமில்லாமல் அர்த்தங்களற்று பேசித்திரிய மனது விரும்புகின்றது.நகர வாழ்க்கையின் வெம்மை என்னை கொஞ்ச கொஞ்சமாய் விழுங்கிக் கொண்டிருக்கிறது! நின்று நிதானித்து கடந்த சில நாட்களாய் நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று திரும்பிப் பார்த்தால் ஒன்று மட்டுமே புரிந்திருக்கின்றது. நான் வெறுமனே ஓடிக் கொண்டிருந்திருக்கின்றேன். இனிமேலும் வெறுமனே ஓடிக் கொண்டேதான் இருக்க வேண்டும் என்று நகரம் எனக்கு சொல்லிக் கொண்டே இருக்கின்றது. “மச்சான் நான் இப்போ மீட்டிங்ல இருக்கேண்டா அப்புறமா பேசறேன். சாரி” என்று சொல்லி விட்டு கொஞ்சம் கூட குற்ற உணர்வில்லாமல் மறுபடி வேலைகளுக்குள் மூழ்கி விட எனக்கு எளிதில் பழக்கப் பட்டு விட்டது. அன்றைய நாளின் மிகப்பெரிய சந்தோஷமாய் பயணித்த பேருந்தில் கூட்டமில்லாமலிருந்ததை சொல்லித் திரிந்து கொண்டிருக்கின்றேன்.யோசித்துப் பார்க்கையில் எல்லாமே அர்த்தமற்றதாய் தென்படுகின்றது. அலுவலகத்தினுள்ளே நுழையும் போதே ஒரு முகமூடி அணிந்து கொள்வது எல்லாருக்கும் அவசியமாகி விட்டது.. தன்னுடைய நடை, உடை, பேச்சு எல்லாவற்றிலுமே போலிப்பூச்சுக்களை தேடித் தேடி பூசிக் கொள்ளுகின்றோம். வேலைகளிற்கு நடுவில் ரிலாக்ஸ் செய்வதற்காக பேசும் பேச்சில் கூட நம்முடைய அறிவுத் திறமையை வெளிப்படுத்த தயார் செய்து கொண்டிருக்கின்றோம்.அமெரிக்கா, பில்கேட்ஸ், சேகுவேரா, மார்க்ஸ், ஈழத் தமிழர்கள், இந்து பேப்பர், ஷேக்ஸ்பியர் கவிதைகள், ஜாஸ் மியூசிக், மடோனா லேட்டஸ்ட் ஆல்பம் இவையனைத்தும் நம்முடைய அறிவை நிர்ணயிக்கும் அளவுகோல்களாகிப் போனது.பரந்து பட்டிருக்கும் கூட்டத்தில் இவை எல்லாவற்றையும்  பற்றிப் பேசத் தெரிந்தவன் “அறிவாளி” என்ற லேபிளை சுமப்பவனாய் மாறிப் போகின்றான்


என்ன விலை இந்த உயிர் ?

ஒரு வாரத்திற்கு முன் நடந்த சம்பவமிது.
மாலை 5.30 மணி இருக்கும்.சூரியனின் அந்தி நேர ஒளிக்கீற்றுகள்
மரங்களின் வழியே சாலையில் மின்னிக் கொண்டிருந்த்து.
சாலையில் நானும் ,எனது நண்பரும் இரு சக்கர வாகனத்தில் வந்து
கொண்டிருந்தோம்.
பேருந்துகளும்,கனரக வாகனங்களும்,இன்னும் சில எமனின் ஏஜண்ட்டுகளும்
எங்களை விலக்கிக் கொண்டு முந்திச் சென்றன.
எந்தவொரு வாகனமும் மிதவேகமாகச் சென்றிருக்காது.எல்லாமே
மிகவேகம்தான்.
எங்களை கடந்து சென்ற ஒரு மினி ஆட்டோ ,சாலையில் ஒரு எட்டுப் போட்டு சென்றது.
“ஒருவேளை R.T.O பாத்துட்டு இருப்பாரோ?,இவனுக்கு லைசென்ஸ் கொடுப்பதற்கு?என்று கமெண்ட் அடித்துக்கொண்டு வந்தோம்,நானும்,நண்பரும்,
அப்பொழுதுதான் ஒரு பூனைக்குட்டியொன்றை சாலையில் கண்டோம்.
அது எக்குத்தப்பாக வந்து சாலையின் நடுவே வந்து மாட்டிக்கொணடது
புரிந்தது.

ஒருவேளை தன் விளையாட்டுப் புத்தியால் வந்து மாட்டியிருக்கலாம்,
இல்லை ஏதாவது துரத்தி,ன் உயிரைக் காப்பத்திகொள்வதற்காகக் கூட
இருக்கலாம்.
தன் தாயைத் தேடித் திரியலாம்,.
எதுவாக இருந்தாலும் வந்து மாட்டிக்கொண்ட்து.
நானும்,நண்பரும்


எதையும் தாங்குவோம் !

காற்றும் புகையும்




கலைத்துவிடுகின்றன ,



ஆயிரமாயிரம் கால்கள்



நடந்தாலும்


டவுன் பஸ்




பல நாட்களாகவே இந்த அனுபவத்தைப் பதிவிடனும்
என்றிருந்தேன்,காலம் கிடைக்காத பணிதான் காரணம்.(வெட்டியாய் இருப்பதற்கு
இவ்வளவு பில்டப்னு சொல்றது கேக்குது).
நம்மில் பலருக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டிருக்க வேண்டும்.

பேருந்தில் பயணம் செல்வது என்பது ஒரு இனிமையான நிகழ்வுதான்.அதுவும் ஜன்னலோர
இருக்கையில் அமர்ந்து பயணிப்பது ,விவரிக்க முடியாத ஒரு இன்பத்தைத் தரும்.மரங்களும்,கரண்ட் கம்பங்களும் நம்மை விட்டு வேகமாய் விலகி செல்லும்.

நான் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த காலத்தில், நகரப் பேருந்துகள்தான் வரும் .நான் வசிக்கும்
கிராமத்திற்குபேருந்து வசதி கிடையாது.அருகிலுள்ள ஊருக்குத்தான் ஓரிரு நகரப்பேருந்துகள்
மட்டுமே வந்து செல்லும்.அது ஒரு கிராமத்துப் பேருந்து என்றுதான் சொல்லவேண்டும்.

எங்களூரிலிருந்து சுமார் 2கி.மீ. நடந்து சென்றுதான் அருகிலுள்ள ஊரில் பஸ் பிடித்துச் செல்லவேண்டும்,.
அதுவும் அந்தப் பேருந்து வரும் நேரத்தைவைத்துத் தான் மணி இவ்வளவு என்று
பிள்ளையார் மரத்தடி பெருசுக கணக்கிட்டுக் கொள்வார்கள்.

மதிய நேரம் தேர்வு எழுதச்செல்லும் நாட்களில் பஸ்ஸ்டாப்பை அடையும் முன்னரே பஸ்
வந்து நின்று கொண்டிருக்கும்.
ஓட்டுனரும்,நடத்துனரும் பிள்ளையார் கோவிலினுள் உட்கார்ந்துசாப்பிட்டுவிட்டு
செய்த்திதாள் படித்துக் கொண்டிருப்பார்கள்.அதற்குள் வரவேண்டியவர்கள்
வந்துவிட பேருந்தும் புகையைக் கக்கிகொண்டு புறப்படும்.

சீட்களில் பேர்
எழுதுவதும்,


Animated Social Gadget - Blogger And Wordpress Tips