
கடந்த இரு வாரங்களுக்கு முன் பௌர்ணமி அன்று நானும், எனது சில நண்பர்களும் இரவில் திடீரென வெள்ளியங்கிரி மலை செல்லலாம் என்று முடிவெடுத்தாயிற்று.
நாங்கள் முடிவெடுத்து முடிவதற்குள் மணி 8.30 ஆகிவிட்டது.(ஒரு வழியா முடிவுக்கு வந்துட்டாங்க).
“சரி கிளம்புவோம்” என்று பேருந்து நிலையம் செல்ல முற்பட்டபோதுதான் அந்த நேரத்தில் அங்கே பேருந்து இருக்காது என்று தோன்றியது.
பிறகு இரு சக்கர வாகனத்தில் செல்லலாம் என்று கிளம்பியாச்சு.ஏற்கனவே நமக்கெல்லாம் பைக் ரைடிங் போவதில் விருப்பம்.அடுத்து பெட்ரோல்,டயர்களின் நிலை,காற்று ஆகியவற்றை பரிசோதித்துவிட்டு எல்லோரும் கிளம்பினோம்.
போகும் வழியிலேயே சாப்பிட்டுவிட்டு மீண்டும் கிளம்பி ஒரு வழியா உக்கடம் பைபாஸைத் தொட்டுவிட்டோம்.
அப்போது மணி 10 ஐத் தொட்டுவிட்டது.கோவை மக்களின் பரபரப்பு கொஞ்சம் குறைந்துவிட்டுப் போயிருந்தது.
உக்கடம் தாண்டி பேரூர் செல்லும் வழியில் காவல்துறையினர் சோதனைச் சாவடியில் காவலர்கள் இருவர் “குடி”மகன்களைக் கவனித்துக் கொண்டிருந்தனர்.நாங்க மொத்தம் மூன்று பேர் ஒரு வண்டியில் சென்றதால் ,ஒருவர் சோதனைச்சாவடிக்கு முன்னரே உள்ள உணவகத்தில் இறங்கி விட்டு,பின் இன்னோருவரை சோதனைச்சாவடி தாண்டி இறக்கிவிட்டுப் பின் மீண்டும் ,அந்த உணவகத்தில் உள்ளவரை அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது.
யார் இறங்குவது என்று முடிவானபோது “நானே இறங்குகிறேன்” என்று இறங்கிக்கொண்டேன்.பின் அந்த உணவகத்தில் நின்றவாறு சோதனைசாவடியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.
இப்படி செய்ததால்தான் காவலர்களிடமிருந்து தப்பித்தோம்(செஞ்சது தப்புத்தானுங்கோ),
அப்பவும் நல்ல டிப்டாப் ஆசாமி ஒருவர் காவலர்களிடம் போதையில் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார்.பிறகு “drink and drive ” என்று புகார் எழுதி ரூ 500/- ஐ வசூல்செய்து தன் கடமையை செவ்வனே செய்துமுடித்தார்கள் அந்த இரு காவலர்களும்.