Blogger Widgets

அறிவிப்பு

நிரந்தரமாக இன்பத்தை அனுபவித்தவனும் இல்லை. நிரந்தரமாகத் துன்பத்தில் உழன்றவனும் இல்லை.

நாளை பொது வேலை நிறுத்தம்-தேவையா?



பொதுத்துறை நிறுவனங்களை தனியார் வசம் ஒப்படைக்கக்கூடாது,சில்லறை வர்த்தகத்தில்
நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிக்கக் கூடாது,மின்வெ(வே)ட்டு பிரச்சினை ,உள்ளிட்ட ப்ல்வேறு
கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம்
அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் தமிழகத்தில் பெரும்பாலான தொழிற்சங்கங்கள் கலந்துகொள்வதால் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் பெரும்பாலான ஆட்டோக்கள் ஓடாது என எதிர்பார்க்கப்படுகிறது. பஸ் போக்குவரத்தும் பாதிக்கப்படும் என்று தெரிகிறது.
கோவையைப் பொறுத்தவரை CODISSIA,AITUC, CITU, HMS, AIUTUC, TUCC, AICCTU, UTUC
உள்ளிட்ட தொழிற்சங்கள் முழு அடைப்புக்கு ஆதரவளித்துள்ளன.

தாஜ்மஹாலின் இருண்ட பக்கங்கள்-வெளிவராத மர்மங்கள்.



ஷாஜஹானின் ஆட்சியின் கடைசிகாலகட்டம் அது.ஔரங்கசீப் ஆட்சி அரங்கேறியது.

தன் தந்தையை சிறை வைத்தார் ஔரங்கசீப்.

ஆக்ரா கோட்டையில் எட்டு ஆண்டுகள் சிறைவைக்கப்பட்ட ஷாஜகானுக்கு மாற்று உடைகளும், எழுதும் உபகரணங்களும் மறுக்கப்பட்ட காலம்.அவர் அணிந்திருந்த ஆபரணங்களும் அகற்றப்பட்டன.

பூனை இளைத்தால் எலிக்குக் கொண்டாட்டம்என்னும் முதுமொழிக்கேற்ப ஷாஜகானை


காவலாளிகள் கூட மரியாதைக் குறைவாக நடந்து கொண்டனர்.
மகனான ஔரங்கசீப் மதித்தால்தானே காவலர்கள் மதிப்பதற்கு.

வெறுப்பின் உச்சகட்டத்திற்கு போன ஷாஜகானுக்கு பாலைவனச்சோலையாக இருந்தது தன் மகளான ஜஹனாராதான்.மகன் மதிக்காது போனாலும் தன் மகள் ஜஹனாராவாவது தமக்கு சிறையில் உதவியாய் இருப்பது மகிழ்ச்சியளிப்பதாய் இருந்தது ஷாஜகானுக்கு.

பெரும்பாலான பொழுதை தொலைவில் தெரியும் தன் காதல்மனைவியின் கல்லறையான தாஜ்மஹாலையே கண்ணிமைக்காமல் பார்த்து தன் நிலை எண்ணி கவலையுற்று,நோய்வாய்ப்பட்டார்.


புனித குர் ஆன் படிப்பதற்குமட்டுமே ஷாஜஹானுக்கு ஔரங்கசீப் அனுமதித்தார்.

(மகன் தந்தைக்கு ஆற்றும் செயல்).

கடைசிகாலத்தில் மறுபடியும் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் விழுந்த ஷாஜஹானால்,படுக்கையை விட்டு எழுந்து நடமாட முடியவில்லை.

அந்த நிலையிலும் தன் சகோதரியின் வேண்டுகோளுக்கிணங்கி ஔரங்கசீப் ,ஆளுயர கண்ணாடி ஒன்றை ஷாஜஹான் தாஜ்மஹாலை பார்க்கவசதியாக வைப்பதற்கு ஔரங்கசீப் அனுமதித்தார்.

ஜனவரி 22,1666 அன்று ஷாஜஹானின் எழுபத்து நாலாம் வயதில்,ஜஹனாரா பேகம் தன் தந்தையின் சிறைக்குள் நுழையும் நேரம்



மங்குனி அமைச்சர்?



1948 வாக்கில் நடந்த சம்பவம் இது:

ஒரு முறை ரயில்வே இலாகாவில் சரக்கு வேன்களுக்கு பற்றாக்குறை நிலவியது.
தகுதி அடிப்படையில் முன்னுரிமை வழங்க ரயில்வே அமைச்சகம் முடிவெடுத்தது.
ஒரு தனியார் நிறுவனம் 50 வேன்களுக்கு ஒப்புதல் கோரியது.
ஆனால் அதில் ஒரு சிக்கல்,அது 50 வேன்களுக்கு ஒரு வேனுக்கு
ரூ 1000/- வீதம் 50 ஆயிரம் தர வேண்டும்.

அந்த நிறுவனமும் லஞ்சப் பணத்தைக் கொடுக்க ஒப்புக் கொண்டு முன்பணமாக ரூ 22 ஆயிரம் அமைச்சருக்கு கொடுத்தது.
கோப்பில் அமைச்சரும் "Approved" என்று எழுதிக் கையொப்பமிட்டார்.
கையெழுத்தானதை அறிந்த அந்நிறுவனம் மீதிப்பணத்தை தராமல் போக்குக் காட்டியது.
இதையறிந்த நம் அமைச்சர் சும்மா விடுவாரா?


அழகும் ஆபத்தும்


ஒரு கையால்

எழுதிக்கொண்டே

இன்னோரு கையால்

கூந்தலைக் கோதி

கொ(ல்லு)ள்ளும்

ஓவியம் நீ......

விரல்களில் சிக்கிக்

கொண்டு மீள

முடியாமல் தவிக்கும்

பேனாவைப் போல்

உன் விழியில்

அகப்பட்ட நானும்

தவிக்கிறேன்.....

தூண்டில் மீன் போல்.



நகைகள் அழகுதான்

நீ அணிந்திருப்பதால்








(பி.கு)சில தவிர்க்க முடியாத காரணத்தால் பதிவிட முடியவில்லை.

இதோ மீண்டும் வந்தாச்சு......இனி ஒரு பயலும் நிம்மதியா இருக்க முடியாது.




உன்னால நான் கெட்ட,என்னால நீ கெட்ட-ஒரு அரசியல் நாடகம்.








(இது ஒரு கோபமான ஒரு அப்பாவித் தமிழனின் மனக் குமுறல்கள்)
நேற்றிலிருந்து விஜயகாந்த் ஒரு பரபரப்பானதொரு மனிதராய் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுதும் புகழ் பெற்றுவிட்டார்.
அனைவரையும் அவரைப் பற்றி பேசவைத்து, “நான் ஒரு எதிர்க்கட்சித் தலைவர் இருக்கிறேன்” என்று தன்னை அடையாளம் காட்டிக் கொண்டார்.

நேற்று சட்டசபைக் கூட்டத்திலே எதிர்த்து கேள்வி கேட்டதற்காக ஒன்றுமில்லாத ஒரு சிறு பிரச்சினையை பூதாகரமாய் ஏற்படுத்திவிட்டார் சபாநாயகர்(கட்சி பாகுபாடற்ற ,பொதுவான ஒரு அ.தி.மு.க.காரர்,எல்லாக் கட்சிக்கும் பொதுவானவராம்,நம்புங்க!).

அ.தி.மு.க. அமைச்சர்கள் கை நீட்டி பேசியதால்தான் விஜயகாந்தும் கை நீட்டிப் பேசியுள்ளார்.
இதை அந்த காட்சியில் முழுதும் கவனித்தால் தெரியும்.
ஆனால் ஜெயா தொலைக்காட்சியில் விஜயகாந்த் வரும் காட்சியை மட்டுமே திரும்ப திரும்ப ஒளிபரப்புகிறார்கள்.



மனிதனைக் கெடுப்பவை இவைகள்!

மனிதர்களைக் கெடுப்பவை இவை மூன்றும் தான்:

1. மறதி

2. மடி (சோம்பல்)

3. துயில் (தூக்கம்)

முதலில்” “மறதியைப் பற்றி:

நான் யார்?என்ற ஞாபகம் இல்லாமை.அதனால்தான் உடம்பாகிய கூட்டை

தானாகவே எண்ணிக்கொண்டோம்.ஐம்புலன்களால் உலகை

அனுபவிக்க அலைகிறோம்.கணநேரம் தோன்றும் வானவில் போன்ற வாழ்க்கைக்கு

மனம் அலைகிறது,. நிரந்தரமற்றதை நிரந்தரமாக்க எண்ணுகிறோம்..

அப்போதைக்குக் கிடைக்கும் அற்ப சுகத்துக்காக பேராசையில் பெரிதாகப்

பாடுபட்டு அயர்ச்சி அடைகிறோம், ஆன்மாவை மறந்தோம்.இதிலெங்கே

இறைவனவனை நினைப்பது.அதனாலே சம்சாரத்தில் வீழ்கிறோம்,

ஆசை என்ற சங்கிலியால் பிண்ணிப் பிணைக்கப்பட்டுள்ளோம்.

ஆனால் மறதியும் வேண்டும்,ஆனாலும் மறதி மட்டும் இல்லையெனில் இன்று நம்மில் பலர்

பைத்தியமாக அலைய வேண்டியிருக்கும். மறதியே வாழ்க்கையாகக் கூடாது.

ஏனெனில்”” “அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சல்லவா?

அடுத்து “மடிஎன்னும் சோம்பல் பற்றி:

செயலில்லாமல் முடங்கிக் கிடத்தல் ஒருவனைக் கெடுக்கிறது. செயலூக்கமில்லா

நிலையும்,செத்த நிலையும் ஒன்றே.பொறுமை என்ற பெயரில்,

சகிப்புத்தன்மை என்ற சாக்கில், இன்றும் பலர் செயல்படாமல் தங்களின் திறமைக்கு

சாவு மணி அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.போதை வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

கேட்டால் சமாதான புறாக்களை பறக்க விடுவதாகச் சொல்லிக்கொண்டு சாம்ராஜ்யங்களைக் கோட்டை



Animated Social Gadget - Blogger And Wordpress Tips