Blogger Widgets

அறிவிப்பு

நிரந்தரமாக இன்பத்தை அனுபவித்தவனும் இல்லை. நிரந்தரமாகத் துன்பத்தில் உழன்றவனும் இல்லை.

தகவல் அறியும் உரிமைச் சட்டம்


சோனியா காந்தி  கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் முறையாக அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக சென்றார். அங்கு அறுவை சிகிச்சை நடைபெற்றதாகக் கூறப்பட்டது. ஆனால் சோனியாவுக்கு என்ன நோய் என்றோ அவர் எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் என்றோ கூறப்படவில்லை.அதன் பின்னர் பிப்ரவரி 27ம் தேதி மீண்டும் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக சென்றார். அப்போது அமெரிக்கா வாழ் சீக்கியர்கள் அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
அப்போது சோனியாவின் மருத்துவ சிகிச்சைக்கான பணத்தை யார் கட்டியது என்று அமைச்சர் அம்பிகா சோனியிடம் கேட்கப்பட்டபோது, விரைவில் அறிவிக்கப்படும் என்றார். ஆனால் சொல்லவே இல்லை.

ஆனால் இப்போது  நரேந்திர மோடி  ரூ .1800 /- கோடி சோனியாவுக்கு செலவு செய்திருப்பதாக ஆதாரத்தைக் காண்பிக்கிறார் .எது உண்மைன்னு ஒண்ணுமே வெளங்கலியே ?
இந்த மாதிரியான தகவல்களை நாம்  பெற  உதவுவதே தகவல் அறியும் உரிமை சட்டமாகும் .
 


சொக்கத்தங்கம்யா இவங்க?


தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005ம் ஆண்டு இயற்றப்பட்டது. இச்சட்டத்தை சரியாக பயன்படுத்துவதன் மூலம் லஞ்சம் மற்றும் ஊழலை பெருமளவு கட்டுப்படுத்த முடியும்.
சட்டம் எதற்கு?
அரசு அலுவலகங்கள் பொது மக்களுக்கு தகவல் சொல்லக் கடமைப்பட்டிருந்தாலும் இச்சட்டம் இயற்றப்படுவதற்கு முன் நீங்கள் கேட்கும் தகவலை அவ்வளவு எளிதில் பெற இயலாது. நீங்கள் தகவல் கேட்டு அனுப்பும் கடிதம் குப்பைக்கு கூட செல்லும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இச்சட்டம் இயற்றப்பட்ட பிறகு தகவல் தர மறுத்தால் சட்டத்தை மீறுவதாகும். தண்டனை கிடைக்கும் என்ற அச்சத்தால் தகவல் கிடைக்கும் வாய்ப்பு உறுதியாகிறது.
எங்கிருந்து தகவல் பெறலாம்?
மத்திய மாநில அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசு நிதி பெறும் நிறுவனங்கள் ஆகியவற்றிலிருந்து தகவல் பெறலாம். தனியார் நிறுவனங்களுக்கு இச்சட்டம் பொருந்தாது.
என்ன தகவல் பெறலாம்?


நாசாவின் பயமும் :நமது பழமையான பலமும்

இந்தப் பதிவில் இரண்டு முக்கியமான விஷயங்கள் பதிவிடப்படுகின்றன.
1.திருநள்ளார் சனிஸ்வர பகவானும் ,நாசாவும் ,.
2.பாம்பு விஷம் மற்றும் அமுதம் பற்றியும் . 

சனி பகவான் 
இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு,உளவு என பல்வேறு காரங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் பொது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில்ஏற்படுவதில்லை.
இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை அளித்தது.

இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது.





நிஞ்சா -நிச்சயம் மாஞ்சாதான்



ஜப்பானிய வரலாற்றில், நிஞ்சா (சிநோபி) என்பவர்கள் ஆட்கொலை, உளவு மற்றும் மரபுசாரா போர்க்கலைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆவர்.






ஜப்பானியக் கலாசாரத்தில், நிஞ்சாக்கள் அபாயகரமான நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகக் பயிற்சி அளிக்கப்பட்டனர். அவர்களுடைய தோற்றம் சர்ச்சைக்கு உட்பட்டதாகவே உள்ளது.
இந்த கருத்து பற்றி நமக்கு யோசனை வேண்டாம் .

உலக அளவில் கவாஸாகி விற்பனை செய்து வரும் நிஞ்சா வரிசை ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. மேலும், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்கு தக்கவாறு நிஞ்சா வரிசை பைக்குகளில் அவ்வப்போது மாற்றங்களை செய்து அறிமுகப்படுத்தி வருகிறது.

அந்த வகையில், நிஞ்சா 650ஆர் பைக்கில் சில மாற்றங்களை செய்துள்ளது பஜாஜ் கீழ் செயல்படும் ஜப்பானிய நிறுவனமான கவாஸாகி. கூர்மையான முன்பக்க வடிவமைப்பு, புதிய பெட்ரோல் டேங்க், புதிய ஃபோம் இருக்கை மற்றும் பின்புற டேஞ்சர் விளக்குகள் 



சீனப் பெருஞ்சுவர் சேதம்


உலக அதிசயங்களின் பட்டியல்கள் புதிது, புதிதாக அவ்வப்போது வந்து கொண்டுதான் உள்ளன. ஆனாலும் என்றென்றும் உலக அதிசயமாக கருதப்படு வது சீன பெருஞ்சுவர்.



நிலவில் இருந்து பார்த்தால் தெரியும் ஒரே மனித படைப்பு என்ற பெருமையும் இதற்கு உண்டு. நாட்டின் பாதுகாப்புக்காக பிரம்மாண்ட மதில் சுவர் எழுப்புவது என்பது சீனாவின் முதல் பேரரசர் கின் ஷி ஹுவாங்கின் ஐடியா. அவரது ஆட்சிக் காலத்தில்(கி.மு. 220-206) கட்டப்பட்டது.
இதன் சில பகுதிகள் மட்டுமே தற்போது சுவராக நீடிக்கிறது. அதன் பிறகு கி.மு. 5ம் நூற்றாண்டு முதல் கி.பி. 16ம் நூற்றாண்டு வரை யில் பல்வேறு மன்னர்களின் காலக் கட்டத்தில் கட்டப்ப ட்டது. இடியும் நிலையில் இருக்கும் பகு திகளும் அவ்வப்போது புதுப்பிக் கப்பட்டு வந்தது.
இவ்வாறு கிழக்கே ஹெபேய் மாகாணம் ஷாங்ஹாய்குவானில் தொடங்கி மேற்கில் லோப்நுர் வரையில் பிரதான சுவர், கிளைச் சுவர் என சுமார் 8,850 கி.மீ. தூரத்துக்கு பிரமாண்டமாய் நீள்கிறது. மொத்த சுவரும் கற்கள், பாறைகளைக் கொண்டே அமைக்கப்பட்டதாக கருதப்பட்டு வந்தது. ஓக் மரத்தை யும் கல் போல பயன்படுத்தி சுவர் கட்டியிருப்பது தொல்பொருள் ஆய்வில் தெரியவந்துள்ளது.
பெருஞ்சுவர் கட்டிய மன்னன் 
இதுபற்றி லயோனிங் கலாசார நினைவுச் சின்னங்கள் அமைப்பு மற்றும் மேப்பிங் துறை அதிகாரி கள் கூறியதாவது:


கப்பலை மறைய வைக்கும் முக்கோணம்


பல வருடங்களுக்கு முன் “பாக்யா” வார இதழைப் படித்துக்கொண்டிருந்த போது ஒரு செய்தி என்னை உற்றுநோக்க செய்தது.

அந்த செய்தி இதுதான்“கப்பலை மறைய வைக்கும் முக்கோணம்”
அந்தச் செய்தி ”பர்முடா ட்ரையாங்கிள்” எனும் முக்கோண நிலப்பகுதியைப் பற்றியது.

                               யுனைடட் ஸ்டேட்ஸின் கிழக்குப் பகுதியில், ஃப்ளோரிடா, பர்முடா மற்றும் ப்வொர்தோ ரிகோ ஆகியவற்றின் இடையே  அமைந்திருக்கிறது, அதிபயங்கரமான பயண அனுபவங்களை தரக் கூடிய இந்தப் பகுதி.

பொதுவாய் போக்குவரத்து அதிகம் இருக்கும் பகுதி தான் இது. இருந்தும் இதன் வழியே பயணம் செய்த சில கலங்கள் தடயம் எதுவுமின்றி காணாமல் போயிருக்கின்றன.


இதுவரை  நூற்றுக்கும் மேற்பட்ட கப்பல்களையும், விமானங்களையும் அதனுள் இருந்த மக்களுடன் சேர்ந்து  ஏப்பம் விட்டிருக்கிறது இது. திறமையான விமானிகளும் கப்பலோட்டிகளும் கூட மறைந்தவர்களுள் அடக்கம்.


சரி, அந்த கலங்கள் தொலைவதற்கு முன் என்ன நடந்தது?




பிறர் பார்வையில் என்னைப் பார்க்கிறேன்

ஒரு போலியான வாழ்க்கை  எல்லோரிடதிலும் உள்ளது.அதைப் பற்றி 
முகத்தில் அணிந்திருக்கும் அறிவு ஜீவி முகமூடியைக் களைந்து விட்டு, எந்த வித போலித்தனமுமில்லாமல் அர்த்தங்களற்று பேசித்திரிய மனது விரும்புகின்றது.நகர வாழ்க்கையின் வெம்மை என்னை கொஞ்ச கொஞ்சமாய் விழுங்கிக் கொண்டிருக்கிறது! நின்று நிதானித்து கடந்த சில நாட்களாய் நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று திரும்பிப் பார்த்தால் ஒன்று மட்டுமே புரிந்திருக்கின்றது. நான் வெறுமனே ஓடிக் கொண்டிருந்திருக்கின்றேன். இனிமேலும் வெறுமனே ஓடிக் கொண்டேதான் இருக்க வேண்டும் என்று நகரம் எனக்கு சொல்லிக் கொண்டே இருக்கின்றது. “மச்சான் நான் இப்போ மீட்டிங்ல இருக்கேண்டா அப்புறமா பேசறேன். சாரி” என்று சொல்லி விட்டு கொஞ்சம் கூட குற்ற உணர்வில்லாமல் மறுபடி வேலைகளுக்குள் மூழ்கி விட எனக்கு எளிதில் பழக்கப் பட்டு விட்டது. அன்றைய நாளின் மிகப்பெரிய சந்தோஷமாய் பயணித்த பேருந்தில் கூட்டமில்லாமலிருந்ததை சொல்லித் திரிந்து கொண்டிருக்கின்றேன்.யோசித்துப் பார்க்கையில் எல்லாமே அர்த்தமற்றதாய் தென்படுகின்றது. அலுவலகத்தினுள்ளே நுழையும் போதே ஒரு முகமூடி அணிந்து கொள்வது எல்லாருக்கும் அவசியமாகி விட்டது.. தன்னுடைய நடை, உடை, பேச்சு எல்லாவற்றிலுமே போலிப்பூச்சுக்களை தேடித் தேடி பூசிக் கொள்ளுகின்றோம். வேலைகளிற்கு நடுவில் ரிலாக்ஸ் செய்வதற்காக பேசும் பேச்சில் கூட நம்முடைய அறிவுத் திறமையை வெளிப்படுத்த தயார் செய்து கொண்டிருக்கின்றோம்.அமெரிக்கா, பில்கேட்ஸ், சேகுவேரா, மார்க்ஸ், ஈழத் தமிழர்கள், இந்து பேப்பர், ஷேக்ஸ்பியர் கவிதைகள், ஜாஸ் மியூசிக், மடோனா லேட்டஸ்ட் ஆல்பம் இவையனைத்தும் நம்முடைய அறிவை நிர்ணயிக்கும் அளவுகோல்களாகிப் போனது.பரந்து பட்டிருக்கும் கூட்டத்தில் இவை எல்லாவற்றையும்  பற்றிப் பேசத் தெரிந்தவன் “அறிவாளி” என்ற லேபிளை சுமப்பவனாய் மாறிப் போகின்றான்


என்ன விலை இந்த உயிர் ?

ஒரு வாரத்திற்கு முன் நடந்த சம்பவமிது.
மாலை 5.30 மணி இருக்கும்.சூரியனின் அந்தி நேர ஒளிக்கீற்றுகள்
மரங்களின் வழியே சாலையில் மின்னிக் கொண்டிருந்த்து.
சாலையில் நானும் ,எனது நண்பரும் இரு சக்கர வாகனத்தில் வந்து
கொண்டிருந்தோம்.
பேருந்துகளும்,கனரக வாகனங்களும்,இன்னும் சில எமனின் ஏஜண்ட்டுகளும்
எங்களை விலக்கிக் கொண்டு முந்திச் சென்றன.
எந்தவொரு வாகனமும் மிதவேகமாகச் சென்றிருக்காது.எல்லாமே
மிகவேகம்தான்.
எங்களை கடந்து சென்ற ஒரு மினி ஆட்டோ ,சாலையில் ஒரு எட்டுப் போட்டு சென்றது.
“ஒருவேளை R.T.O பாத்துட்டு இருப்பாரோ?,இவனுக்கு லைசென்ஸ் கொடுப்பதற்கு?என்று கமெண்ட் அடித்துக்கொண்டு வந்தோம்,நானும்,நண்பரும்,
அப்பொழுதுதான் ஒரு பூனைக்குட்டியொன்றை சாலையில் கண்டோம்.
அது எக்குத்தப்பாக வந்து சாலையின் நடுவே வந்து மாட்டிக்கொணடது
புரிந்தது.

ஒருவேளை தன் விளையாட்டுப் புத்தியால் வந்து மாட்டியிருக்கலாம்,
இல்லை ஏதாவது துரத்தி,ன் உயிரைக் காப்பத்திகொள்வதற்காகக் கூட
இருக்கலாம்.
தன் தாயைத் தேடித் திரியலாம்,.
எதுவாக இருந்தாலும் வந்து மாட்டிக்கொண்ட்து.
நானும்,நண்பரும்


எதையும் தாங்குவோம் !

காற்றும் புகையும்




கலைத்துவிடுகின்றன ,



ஆயிரமாயிரம் கால்கள்



நடந்தாலும்


அன்பு தெய்வம்


 எப்படி அடையாளம் காண்கிறாய்
         எத்தனை வருடங்கள் ஆனாலும் ,
               எவ்வளவு தூரம் போனாலும் ,
                                     நீ மறக்கவில்லை,

                நண்பர்களும் ,சொந்தங்களும்
              மறந்து போன என்னை
               நீ மறக்கவில்லை !



கூழாங்கல்

ஒரு நாள் ஒருவன் அவன் வீட்டுப் பரணைச் சுத்தம் செய்து கொண்டிருந்தான். அப்போது அதுவரை அவன் கவனித்திராத ஒரு புத்தகத்தைக் கண்டெடுத்தான்.
அது ஒரு மிகப் பழைய புத்தகம். பக்கங்கள் மஞ்சள் படிந்து மடித்துப் போயிருந்தன. பக்கங்களைத் திருப்புகையில் மிகக் கவனம் தேவையிருந்தது. இல்லாவிட்டால் பக்கங்கள் உதிரத் தொடங்கின.
அவன் அந்தப் புத்தகம் மந்திர மாயங்களைப் பற்றியது என்று அறிந்து கொண்டான். எத்தனையோ முறை படிக்க முயன்றும் அவன் ஒரே ஒரு பத்தியில் உள்ள கருத்தை மட்டும் தெரிந்து கொள்ள முடிந்தது. மற்றவை அவனுக்குப் புரியவில்லை.


அந்தப் பத்தியில் கருங்கடற்கரையில் கிடக்கும் மாய சக்தி மிக்க ஒரு கறுப்புக் கூழாங்கல்லைப் பற்றிச் சொல்லப்பட்டிருந்தது. அந்தக் கல்லால் எதைத் தொட்டாலும் அதைத் தங்கமாக மாற்றி விடும். அந்தக் கல்லை எப்படிக் கண்டு கொள்வது


சேது சமுத்திரம்,சீனாவின் படையெடுப்பு





ராமர் பாலம் விவகாரம் பிரச்சினைகள் நாளுக்குநாள் பெரும் பிரச்சினையாகலாம்.பழமை விரும்பியான கலைஞர் கருணாநிதி,தமிழினக் காவலனான இவர் தொடர்ந்து மௌனம் சாதித்து வருகிறார்.
ராமர் பாலம் இருப்பதற்கான செயற்கைக்கோள் புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் நாசா வெளியிட்டும் அமெரிக்காவின் கைப்பாவையான நம் பொம்மை பிரதமரும்,சோனியாவும் ஏனோ ஏற்க மறுக்கிறார்கள்.நம் நாட்டினர்கள் சொன்னால் நம்பாத இவர்கள்
இவர்களின் முதலாளிகளான அமெரிக்கா சொல்லியும் ஏற்க மாட்டேங்குறாங்க?


இந்த சாட்சி மட்டும் போதாதாம்.நீதிமன்றத்தில் ”ராமர் பாலம் இருந்ததற்கான சாட்சி இல்லை” என்று வாதிட்டிருக்கிறார்கள்.


இதற்காக ராமர் பாலம் கட்டிய வானரங்களும்,அணிலும் தான் வரவேண்டும் சாட்சி சொல்வதற்கு.இவர்கள்
ராமர் பாலத்தின் வரலாறு சிறு குழந்தைகளுக்குக் கூடத் தெரியும்.

நம் பிரதமர் மட்டும் சொன்னதையே சொல்வாரே”எனக்குத் தெரியாதே”!....
ராமரின் கால்தடம் பதித்த கல் கூட ராமேஷ்வரத்தில் இன்னமும் சுற்றுலா செல்பவர்கள் காணலாம்.
அவர் என்ன தனக்குத்தானே பாராட்டுவிழா நடத்தி தன் கால் சின்னத்தைப் பதித்து வைத்தாரா?


வெள்ளியங்கிரி மலைப்பயணம்




கடந்த இரு வாரங்களுக்கு முன் பௌர்ணமி அன்று நானும், எனது சில நண்பர்களும் இரவில்
திடீரென வெள்ளியங்கிரி மலை செல்லலாம் என்று முடிவெடுத்தாயிற்று.
நாங்கள் முடிவெடுத்து முடிவதற்குள் மணி 8.30 ஆகிவிட்டது.(ஒரு வழியா முடிவுக்கு வந்துட்டாங்க).
“சரி கிளம்புவோம்” என்று பேருந்து நிலையம் செல்ல முற்பட்டபோதுதான் அந்த நேரத்தில் அங்கே பேருந்து இருக்காது என்று தோன்றியது.
பிறகு இரு சக்கர வாகனத்தில் செல்லலாம் என்று கிளம்பியாச்சு.ஏற்கனவே நமக்கெல்லாம் பைக் ரைடிங் போவதில் விருப்பம்.அடுத்து பெட்ரோல்,டயர்களின் நிலை,காற்று ஆகியவற்றை பரிசோதித்துவிட்டு எல்லோரும் கிளம்பினோம்.
போகும் வழியிலேயே சாப்பிட்டுவிட்டு மீண்டும் கிளம்பி ஒரு வழியா உக்கடம் பைபாஸைத் தொட்டுவிட்டோம்.

அப்போது மணி 10 ஐத் தொட்டுவிட்டது.கோவை மக்களின் பரபரப்பு கொஞ்சம் குறைந்துவிட்டுப் போயிருந்தது.
உக்கடம் தாண்டி பேரூர் செல்லும் வழியில் காவல்துறையினர் சோதனைச் சாவடியில் காவலர்கள் இருவர் “குடி”மகன்களைக் கவனித்துக் கொண்டிருந்தனர்.நாங்க மொத்தம் மூன்று பேர் ஒரு வண்டியில் சென்றதால் ,ஒருவர் சோதனைச்சாவடிக்கு முன்னரே உள்ள உணவகத்தில் இறங்கி விட்டு,பின் இன்னோருவரை சோதனைச்சாவடி தாண்டி இறக்கிவிட்டுப் பின் மீண்டும் ,அந்த உணவகத்தில் உள்ளவரை அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது.
யார் இறங்குவது என்று முடிவானபோது “நானே இறங்குகிறேன்” என்று இறங்கிக்கொண்டேன்.பின் அந்த உணவகத்தில் நின்றவாறு சோதனைசாவடியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.
இப்படி செய்ததால்தான் காவலர்களிடமிருந்து தப்பித்தோம்(செஞ்சது தப்புத்தானுங்கோ),
அப்பவும் நல்ல டிப்டாப் ஆசாமி ஒருவர் காவலர்களிடம் போதையில் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார்.பிறகு “drink and drive ” என்று புகார் எழுதி ரூ 500/- ஐ வசூல்செய்து தன் கடமையை செவ்வனே செய்துமுடித்தார்கள் அந்த இரு காவலர்களும்.


ஹிட்லரின் மறுபக்கமும் ,மரணமும்


சோவியத் ரஷ்யப்படைகள் ஜெர்மன் மீது படையெடுத்தது.ஜெர்மன் தலைநகரம் பெர்லின் மீது
சோவியத் படைகள் நிலைகொண்டு தன் வெற்றியை உறுதி செய்தது.
சோவியத் யூனியன் மீது மட்டும் ஹிட்லர் போர் தொடுக்காமல் இருந்திருந்தால் ஜெர்மனுக்கு
இந்த நிலைமை வந்திருக்காது.

1945 ஏப்ரல் 30 ஆம் தேதி அதிகாலை 2.30 மணி.ஹிட்லர் தன் மாளிகையில் உள்ள பாதாள அறையில்
தன் நண்பன் கோயபல்ஸ், மற்றும் தன் காதலி ஈவா பிரவுனுடன் பதுங்கியிருந்தார்.
தன் அறைக்கு அருகில் இருக்கும் தன் நண்பன் கோயபல்ஸை அழைத்தார் ஹிட்லர்.
ஹிட்லரின் அந்தரங்கச் செயலாளர் ப்ராஜூங்கேவுடன் இரண்டு முக்கிய ஆவணங்களை
தயார் செய்தார் ஹிட்லர்.
ஒன்று அவருடைய உயில்,மற்றொன்று அரசியல் ஏற்பாடு.உயிலை நிறைவேற்றும் பொறுப்பு மார்டின் போர்மன் என்பவரிடம் தரப்பட்டது.
1945-ம் ஆண்டு ஏப்ரல் 25-ந்தேதி பெர்லின் நகரை ரஷியப் படைகள் சூழ்ந்து கொண்டு விட்டன. விமானங்கள் குண்டு மாரிப்பொழிந்து கொண்டு இருந்தன. எந்த நேரத்திலும் ரஷியப் படைகள், பெர்லின் நகருக்குள் புகுந்து விடலாம் என்கிற நிலை. எதிரிகளிடம் யுத்தக் கைதியாகப் பிடிபட்டால் தன் நிலை என்னவாகும் என்பதை உணர்ந்தார் ஹிட்லர்.
எதிரிகளிடம் சிக்குவதற்குள் தற்கொலை செய்து கொள்வதே மேல் என்ற முடிவுக்கு வந்தார். தன் முடிவைக் காதலி ஈவாபிரவுனிடம்


சோனியா என்னும் அரக்கி,கருணா எனும் எட்டப்ப துரோகி



சேனல் 4 ஆல் வெளியிடப்பட்ட இலங்கையின் போர்க்குற்றங்கள் காணொளி பற்றி
என்ன சொல்ல?வார்த்தைகள் வரவில்லை,எழுதுவதற்கு. இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட போர்க்குற்ற காணொளி இதைவிடக் கொடுமையானது.

இதன் ஆரம்பம் எங்கே ஆரம்பித்தது,?

விடுதலைப்புலிகள் இயக்கம் 1975 ,மே 5 ஆம் நாள் தொடங்கப்பட்டது.இலங்கை விடுதலைக்குப் பிறகு மொழி,பல்கலைகழக இட ஒதுக்கீடு,தமிழர் பகுதியில் அரசுக் குடியேற்றங்கள் போன்ற காரணங்களால் தமிழர்களுக்கும்,சிங்களவர்களுக்கும் இடையே பிரச்சினை உருவெடுத்தது.
இலங்கை அரசுகளின் தமிழர் தொடர்பான கொள்கைகளால் விரக்தியுற்ற பல இளைஞர்களை கவர்ந்து வந்தது. தொடக்கத்தில் இலங்கை காவல் துறையினர், மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகள் போன்ற இலங்கை அரசின் மீது சிறிய அளவிலான தாக்குதல்களை நடத்தி வந்தனர்
.
1975 ஆம் ஆண்டு யாழ் நகர முதல்வர் ஆல்பிரெட் துரையப்பா சுட்டுக் கொலை செய்யப்பட்டது புலிகளால் செய்யப்பட்ட முக்கிய தாக்குதலாக கொள்ளப்படுகிறது.பின் 1984 ல் சிதறி இருந்த இயக்கமாக இருந்த தமிழர் இயக்கங்கள் ஒன்றானது.

இந்திய ராணுவம் மூக்கை நுழைத்தது:

தமிழ்நாட்டில் ஈழத்திற்கு ஆதரவு பெருகியதால் இந்திய ராணுவம் யாழ்ப்பாணத்தில் உணவுப்பொட்டலங்களை வான்வழி வீசியதன் மூலம் இலங்கையின் உள்நாட்டுப் போரில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஒன்றிணைந்தனர் இரு நாட்டு ராணுவத்தினரும். 1987 ல் நடந்த ஒப்பந்தத்தின்படி ஈழப்போராளிகள் ஆயுதங்களை விட்டு சரணடைய இந்திய இலங்கை கூட்டுப் படைகள் அறிவித்தன.
ஆனால் போராளிகள் அதற்கு படியாமல், அக்டோபர் 8 ல் புலிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 8 இந்திய ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். ராஜீவ் காந்தி கொலை செய்யக் காரணமும் இந்த ராணுவத்தினரின் அத்துமீறலால்தான்.
இதன்பிறகு பல தாக்குதல்கள் நடைபெற்று ராணுவத்தினரும்,புலிகளும் ப்ல்லாயிரக்கணக்கானோர் மாண்டு போயினர்.

2005 தேர்தல் .இலங்கையின் வடகிழக்கில் புலிகளால் தேர்தல் புறக்கணிக்கப்பட்டதால் கொடுங்கோலன் ராஜபக்‌ஷே சிறிதளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிபராய் பொறுப்பேற்றார்,.புலிகள்
தேர்தலைப் புறக்கணித்ததால் தான் ராஜபக்‌ஷேவால் வெற்றி பெற முடிந்தது.தன் தலையில் தானே மண்ணை வாரித் தூற்றிக்கொண்டனர் புலிகள்.

இடைப்பட்ட காலங்களில் புலிகளின் சிறு சிறு தவறுகளால் வந்த வினைகள்தான் சேனல் 4 ன் இந்த வீடியோக் காட்சிகள்.
கருணா எனும் இந்த எட்டப்பன் புலிகளின் இயக்கத்திலிருந்து பிரிந்து


கத்ரீனா எங்கே?-க்ரவுனுக்கு அண்டர்,



தொலைக்காட்சிகளில் இப்பொழுதெல்லாம் விளம்பரங்களின் ஆக்கிரமிப்புதான்.
10 நிமிடத்துக்கு ஒரு முறை விளம்பரங்கள்தான்.சரி இருந்துட்டுப் போகட்டும்.

இதைவிடக் காமெடி தொலைபேசி வழி நேரடி ஒளிபரப்பில் நம்மாளுக அரைமணி
நேரம் காத்திருந்து ,சரி லைன் கெடச்சு ”ஹலோ!நான் இன்னார் பேசறேன்.”
அப்படீன்னு சொல்லி முடிப்பதற்குள் அவளும் தங்கிலீஸ்ல,
“ஹலோ!யார் பேசறீங்க,சரியா ”கேக்கலை,உங்க டி.வி. வால்யூமக் கம்மி
பண்ணுங்க!”,இது தொகுப்பாளினி.
நம்மாளும் அசடு வழிஞ்சுட்டே ”நாந்தான் பேசறேன்,நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க,உங்க
வாய்ஸ் ரொம்ப ஸ்வீட்டா இருக்கு”அப்படீங்குவார்.
அவ என்னமோ தெருவுல போற பன்னிக்குட்டிய சொன்னமாதிரி


ட்ராவிட் ஓய்வு முடிவு! நிர்பந்திக்கப்பட்டாரா?



ராகுல் ட்ராவிட் (THE GREAT WALL OF INDIAN CRICKET) ஓய்வு முடிவை இன்று

அறிவித்துவிட்டார்.ஏற்கனவே இவருடன் அறிமுகமான வெற்றிக் கேப்டனான தாதா சவ்ரவ் கங்குலி

சதம் அடித்துவிட்டுத் தன் ஓய்வு முடிவை அறிவித்தார்.

இப்பொழுது ராகுல் ட்ராவிட்டும் தன் ஓய்வு பற்றி அறிவித்துவிட்டார்.

ஆட்ட்த்தில் வெற்றி தோல்வி வரும்,போகும்.ஆனால் சிறந்த வீரர்கள்


கிடைப்பது என்பது வருடக் கணக்கில் காத்திருக்க வேண்டும்,.

ஆஸ்த்ரேலியா தொடரில் சரியாக விளையாடவில்லைஎன்று

ச்ச்சின்,ட்ராவிட்,லஷ்மண் ஆகிய 3 சீனியர் வீரர்கள் மீதுதான்

இந்திய மீடியாக்களின் குற்றச்சாட்டு.

ஏன் இந்த 3 பேர் மட்டும்தான் வீரர்களா? மற்ற வீரர்களுக்கு விளையாடுவதைத் தவிர

வேறென்ன வேலை?

ஏன் இதே சீனியர் வீரர்கள் பல முறை அணியை வெற்றி பெறச் செய்திருக்கிறார்களே?

அப்போதெல்லாம் தலையில் வைத்துக் கொண்டாடிய இந்திய மீடியாக்கள்,


அவர்கள் சரியாக விளையாடாத நேரங்களில் அவர்களுக்கு ஆறுதல்,உற்சாகம்

தராவிடினும்,மன நெருக்கடி தராமலாவது இருக்க வேண்டும்.

ஓய்வு பெற வேண்டும், ஓய்வு பெற வேண்டும்என்று தொடர்ந்து செய்தி ஒளிபரப்பினார்கள்.

ஒருவரின் ஓய்வு முடிவு அந்த வீரரின் விருப்பமாக இருக்க வேண்டுமே தவிர,

மற்றவர்கள் நிர்பந்தம் செய்யக்கூடாது.

ராகுல் ட்ராவிட்டின் இந்த முடிவு அவரின் விருப்பம் இல்லை,.



டவுன் பஸ்




பல நாட்களாகவே இந்த அனுபவத்தைப் பதிவிடனும்
என்றிருந்தேன்,காலம் கிடைக்காத பணிதான் காரணம்.(வெட்டியாய் இருப்பதற்கு
இவ்வளவு பில்டப்னு சொல்றது கேக்குது).
நம்மில் பலருக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டிருக்க வேண்டும்.

பேருந்தில் பயணம் செல்வது என்பது ஒரு இனிமையான நிகழ்வுதான்.அதுவும் ஜன்னலோர
இருக்கையில் அமர்ந்து பயணிப்பது ,விவரிக்க முடியாத ஒரு இன்பத்தைத் தரும்.மரங்களும்,கரண்ட் கம்பங்களும் நம்மை விட்டு வேகமாய் விலகி செல்லும்.

நான் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த காலத்தில், நகரப் பேருந்துகள்தான் வரும் .நான் வசிக்கும்
கிராமத்திற்குபேருந்து வசதி கிடையாது.அருகிலுள்ள ஊருக்குத்தான் ஓரிரு நகரப்பேருந்துகள்
மட்டுமே வந்து செல்லும்.அது ஒரு கிராமத்துப் பேருந்து என்றுதான் சொல்லவேண்டும்.

எங்களூரிலிருந்து சுமார் 2கி.மீ. நடந்து சென்றுதான் அருகிலுள்ள ஊரில் பஸ் பிடித்துச் செல்லவேண்டும்,.
அதுவும் அந்தப் பேருந்து வரும் நேரத்தைவைத்துத் தான் மணி இவ்வளவு என்று
பிள்ளையார் மரத்தடி பெருசுக கணக்கிட்டுக் கொள்வார்கள்.

மதிய நேரம் தேர்வு எழுதச்செல்லும் நாட்களில் பஸ்ஸ்டாப்பை அடையும் முன்னரே பஸ்
வந்து நின்று கொண்டிருக்கும்.
ஓட்டுனரும்,நடத்துனரும் பிள்ளையார் கோவிலினுள் உட்கார்ந்துசாப்பிட்டுவிட்டு
செய்த்திதாள் படித்துக் கொண்டிருப்பார்கள்.அதற்குள் வரவேண்டியவர்கள்
வந்துவிட பேருந்தும் புகையைக் கக்கிகொண்டு புறப்படும்.

சீட்களில் பேர்
எழுதுவதும்,


நாளை பொது வேலை நிறுத்தம்-தேவையா?



பொதுத்துறை நிறுவனங்களை தனியார் வசம் ஒப்படைக்கக்கூடாது,சில்லறை வர்த்தகத்தில்
நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிக்கக் கூடாது,மின்வெ(வே)ட்டு பிரச்சினை ,உள்ளிட்ட ப்ல்வேறு
கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம்
அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் தமிழகத்தில் பெரும்பாலான தொழிற்சங்கங்கள் கலந்துகொள்வதால் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் பெரும்பாலான ஆட்டோக்கள் ஓடாது என எதிர்பார்க்கப்படுகிறது. பஸ் போக்குவரத்தும் பாதிக்கப்படும் என்று தெரிகிறது.
கோவையைப் பொறுத்தவரை CODISSIA,AITUC, CITU, HMS, AIUTUC, TUCC, AICCTU, UTUC
உள்ளிட்ட தொழிற்சங்கள் முழு அடைப்புக்கு ஆதரவளித்துள்ளன.

தாஜ்மஹாலின் இருண்ட பக்கங்கள்-வெளிவராத மர்மங்கள்.



ஷாஜஹானின் ஆட்சியின் கடைசிகாலகட்டம் அது.ஔரங்கசீப் ஆட்சி அரங்கேறியது.

தன் தந்தையை சிறை வைத்தார் ஔரங்கசீப்.

ஆக்ரா கோட்டையில் எட்டு ஆண்டுகள் சிறைவைக்கப்பட்ட ஷாஜகானுக்கு மாற்று உடைகளும், எழுதும் உபகரணங்களும் மறுக்கப்பட்ட காலம்.அவர் அணிந்திருந்த ஆபரணங்களும் அகற்றப்பட்டன.

பூனை இளைத்தால் எலிக்குக் கொண்டாட்டம்என்னும் முதுமொழிக்கேற்ப ஷாஜகானை


காவலாளிகள் கூட மரியாதைக் குறைவாக நடந்து கொண்டனர்.
மகனான ஔரங்கசீப் மதித்தால்தானே காவலர்கள் மதிப்பதற்கு.

வெறுப்பின் உச்சகட்டத்திற்கு போன ஷாஜகானுக்கு பாலைவனச்சோலையாக இருந்தது தன் மகளான ஜஹனாராதான்.மகன் மதிக்காது போனாலும் தன் மகள் ஜஹனாராவாவது தமக்கு சிறையில் உதவியாய் இருப்பது மகிழ்ச்சியளிப்பதாய் இருந்தது ஷாஜகானுக்கு.

பெரும்பாலான பொழுதை தொலைவில் தெரியும் தன் காதல்மனைவியின் கல்லறையான தாஜ்மஹாலையே கண்ணிமைக்காமல் பார்த்து தன் நிலை எண்ணி கவலையுற்று,நோய்வாய்ப்பட்டார்.


புனித குர் ஆன் படிப்பதற்குமட்டுமே ஷாஜஹானுக்கு ஔரங்கசீப் அனுமதித்தார்.

(மகன் தந்தைக்கு ஆற்றும் செயல்).

கடைசிகாலத்தில் மறுபடியும் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் விழுந்த ஷாஜஹானால்,படுக்கையை விட்டு எழுந்து நடமாட முடியவில்லை.

அந்த நிலையிலும் தன் சகோதரியின் வேண்டுகோளுக்கிணங்கி ஔரங்கசீப் ,ஆளுயர கண்ணாடி ஒன்றை ஷாஜஹான் தாஜ்மஹாலை பார்க்கவசதியாக வைப்பதற்கு ஔரங்கசீப் அனுமதித்தார்.

ஜனவரி 22,1666 அன்று ஷாஜஹானின் எழுபத்து நாலாம் வயதில்,ஜஹனாரா பேகம் தன் தந்தையின் சிறைக்குள் நுழையும் நேரம்



மங்குனி அமைச்சர்?



1948 வாக்கில் நடந்த சம்பவம் இது:

ஒரு முறை ரயில்வே இலாகாவில் சரக்கு வேன்களுக்கு பற்றாக்குறை நிலவியது.
தகுதி அடிப்படையில் முன்னுரிமை வழங்க ரயில்வே அமைச்சகம் முடிவெடுத்தது.
ஒரு தனியார் நிறுவனம் 50 வேன்களுக்கு ஒப்புதல் கோரியது.
ஆனால் அதில் ஒரு சிக்கல்,அது 50 வேன்களுக்கு ஒரு வேனுக்கு
ரூ 1000/- வீதம் 50 ஆயிரம் தர வேண்டும்.

அந்த நிறுவனமும் லஞ்சப் பணத்தைக் கொடுக்க ஒப்புக் கொண்டு முன்பணமாக ரூ 22 ஆயிரம் அமைச்சருக்கு கொடுத்தது.
கோப்பில் அமைச்சரும் "Approved" என்று எழுதிக் கையொப்பமிட்டார்.
கையெழுத்தானதை அறிந்த அந்நிறுவனம் மீதிப்பணத்தை தராமல் போக்குக் காட்டியது.
இதையறிந்த நம் அமைச்சர் சும்மா விடுவாரா?


அழகும் ஆபத்தும்


ஒரு கையால்

எழுதிக்கொண்டே

இன்னோரு கையால்

கூந்தலைக் கோதி

கொ(ல்லு)ள்ளும்

ஓவியம் நீ......

விரல்களில் சிக்கிக்

கொண்டு மீள

முடியாமல் தவிக்கும்

பேனாவைப் போல்

உன் விழியில்

அகப்பட்ட நானும்

தவிக்கிறேன்.....

தூண்டில் மீன் போல்.



நகைகள் அழகுதான்

நீ அணிந்திருப்பதால்








(பி.கு)சில தவிர்க்க முடியாத காரணத்தால் பதிவிட முடியவில்லை.

இதோ மீண்டும் வந்தாச்சு......இனி ஒரு பயலும் நிம்மதியா இருக்க முடியாது.




உன்னால நான் கெட்ட,என்னால நீ கெட்ட-ஒரு அரசியல் நாடகம்.








(இது ஒரு கோபமான ஒரு அப்பாவித் தமிழனின் மனக் குமுறல்கள்)
நேற்றிலிருந்து விஜயகாந்த் ஒரு பரபரப்பானதொரு மனிதராய் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுதும் புகழ் பெற்றுவிட்டார்.
அனைவரையும் அவரைப் பற்றி பேசவைத்து, “நான் ஒரு எதிர்க்கட்சித் தலைவர் இருக்கிறேன்” என்று தன்னை அடையாளம் காட்டிக் கொண்டார்.

நேற்று சட்டசபைக் கூட்டத்திலே எதிர்த்து கேள்வி கேட்டதற்காக ஒன்றுமில்லாத ஒரு சிறு பிரச்சினையை பூதாகரமாய் ஏற்படுத்திவிட்டார் சபாநாயகர்(கட்சி பாகுபாடற்ற ,பொதுவான ஒரு அ.தி.மு.க.காரர்,எல்லாக் கட்சிக்கும் பொதுவானவராம்,நம்புங்க!).

அ.தி.மு.க. அமைச்சர்கள் கை நீட்டி பேசியதால்தான் விஜயகாந்தும் கை நீட்டிப் பேசியுள்ளார்.
இதை அந்த காட்சியில் முழுதும் கவனித்தால் தெரியும்.
ஆனால் ஜெயா தொலைக்காட்சியில் விஜயகாந்த் வரும் காட்சியை மட்டுமே திரும்ப திரும்ப ஒளிபரப்புகிறார்கள்.



மனிதனைக் கெடுப்பவை இவைகள்!

மனிதர்களைக் கெடுப்பவை இவை மூன்றும் தான்:

1. மறதி

2. மடி (சோம்பல்)

3. துயில் (தூக்கம்)

முதலில்” “மறதியைப் பற்றி:

நான் யார்?என்ற ஞாபகம் இல்லாமை.அதனால்தான் உடம்பாகிய கூட்டை

தானாகவே எண்ணிக்கொண்டோம்.ஐம்புலன்களால் உலகை

அனுபவிக்க அலைகிறோம்.கணநேரம் தோன்றும் வானவில் போன்ற வாழ்க்கைக்கு

மனம் அலைகிறது,. நிரந்தரமற்றதை நிரந்தரமாக்க எண்ணுகிறோம்..

அப்போதைக்குக் கிடைக்கும் அற்ப சுகத்துக்காக பேராசையில் பெரிதாகப்

பாடுபட்டு அயர்ச்சி அடைகிறோம், ஆன்மாவை மறந்தோம்.இதிலெங்கே

இறைவனவனை நினைப்பது.அதனாலே சம்சாரத்தில் வீழ்கிறோம்,

ஆசை என்ற சங்கிலியால் பிண்ணிப் பிணைக்கப்பட்டுள்ளோம்.

ஆனால் மறதியும் வேண்டும்,ஆனாலும் மறதி மட்டும் இல்லையெனில் இன்று நம்மில் பலர்

பைத்தியமாக அலைய வேண்டியிருக்கும். மறதியே வாழ்க்கையாகக் கூடாது.

ஏனெனில்”” “அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சல்லவா?

அடுத்து “மடிஎன்னும் சோம்பல் பற்றி:

செயலில்லாமல் முடங்கிக் கிடத்தல் ஒருவனைக் கெடுக்கிறது. செயலூக்கமில்லா

நிலையும்,செத்த நிலையும் ஒன்றே.பொறுமை என்ற பெயரில்,

சகிப்புத்தன்மை என்ற சாக்கில், இன்றும் பலர் செயல்படாமல் தங்களின் திறமைக்கு

சாவு மணி அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.போதை வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

கேட்டால் சமாதான புறாக்களை பறக்க விடுவதாகச் சொல்லிக்கொண்டு சாம்ராஜ்யங்களைக் கோட்டை



ஆடம்பரம் ஆபத்து


ஒரு முறை மன்னன் நெப்போலியனுக்குச் (நம்ம நடிகரில்லீங்க)

செல்வந்தர்கள் ஒரு பெரிய விருந்து வைத்தார்கள்.

ஒரு பெண்மணி விலையுயர்ந்த நகைகளைத் தலை முதல்

பாதம் வரை அணிந்திருந்தாள்.

அந்தக் கூட்டத்திலேயே அதிகமான நகை அணிந்தவள் அவள்தான்.

எல்லோர் பார்வையும் அவளின் நகைகள் மீதே விழுந்தது.

நெப்போலியனும் அவளைப் பார்த்துவிட்டு

தன் மெய்க்காப்பாளனிடம்யார் இந்தப் பெண்?என்று கேட்டார்.

அதற்கு அவன் “இவர் புகையிலை வியாபாரியின் மனைவி”,

என்று பதிலளித்தான்.

மறுநாளே நெப்போலியன் “புகையிலை

தொடர்பான வியாபாரங்கள் அனைத்தும் அரசுடமை ஆக்கப்படும்என்று சட்டம் கொண்டு வந்தார்.

(எதுக்கு இந்த விளம்பரம்,அளவாக நகையைப் போட வேண்டியதுதானெ!),..


உடம்பு சரியில்லேன்னாலும் உங்களையெல்லாம்

நிம்மதியா இருக்க விடக்கூடாதுன்னுதான் இந்த

ஒரு சின்ன தத்துவமான கதை(ஹி,ஹி....)



கவிதையும் பேசும்


நடிகை:

----------------

அந்தப்

பிரபல நடிகையின்

பொன்மேனி

புழுக்கம் தாங்காமல்

வியர்த்துக்

கொட்டியது.......

காரணம்!

அவளைச் சுற்றி

ஆயிரமாயிரம் விசிறிகள்.

---------------------------


காதலியிடம்:

-------------

உன் நீள்முடியை

இங்கிருந்தே

என் நினைவுச் சீப்புகளால்

நீ(சீ)வி விட்டு

அதில் எத்தனை முறை நான்

எண்ண மலர்களைச்

செருகியிருக்கிறேன்!.

-------------------------------------

இருட்டில் உடன் வரா நிழல்கள்:

----(தலைப்பே ஒரு கவிதை மாதிரி இருக்கு

)-----

ரயில்கள் மட்டுமல்ல

மனிதர்களும் தான்

ஓடத் தொடங்குகிறார்கள்.!!கை இறங்கியவுடன்-நம்

கை இறங்கியவுடன்

------------------------------

மெல்லிசை மன்னர் M.S.V பற்றி

----------------------------

உன்னிடம்

அடகு வைக்கப்பட்ட

ஆயிரமாயிரம் காதுகள்

இன்னமும் மீட்கப்படாமலேயே

இருக்கின்றன.

(கவிஞர் வாலியின் “பொய்க்கால் குதிரைகள்கவிதைத் தொகுப்பிலிருந்து)

----------------------------------------

தன் காதலியை இன்னோரு ஆடவனுடன் கைகோர்க்கும் கல்யாணக் காட்சியினை பார்க்கும் காதலன் சொல்வது:

அன்றைக்குச் செத்து

விழுந்ததுதான்

இந்தக் காதல்!

தூக்கிக் கொண்டு

இன்னமும்

மரண ஊர்வலம்

நடத்துகிறேன்—

புதைக்க மனமில்லை,

எரிக்கவும் வழியில்லை!

(சதாசிவத்தின் “இன்னும் ஒரு மகரந்தம்கவிதைத் தொகுப்பிலிருந்து.)......................
அடுத்த பதிவில்...............


Animated Social Gadget - Blogger And Wordpress Tips