Blogger Widgets

அறிவிப்பு

நிரந்தரமாக இன்பத்தை அனுபவித்தவனும் இல்லை. நிரந்தரமாகத் துன்பத்தில் உழன்றவனும் இல்லை.
Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

எதையும் தாங்குவோம் !

காற்றும் புகையும்




கலைத்துவிடுகின்றன ,



ஆயிரமாயிரம் கால்கள்



நடந்தாலும்


அன்பு தெய்வம்


 எப்படி அடையாளம் காண்கிறாய்
         எத்தனை வருடங்கள் ஆனாலும் ,
               எவ்வளவு தூரம் போனாலும் ,
                                     நீ மறக்கவில்லை,

                நண்பர்களும் ,சொந்தங்களும்
              மறந்து போன என்னை
               நீ மறக்கவில்லை !



அழகும் ஆபத்தும்


ஒரு கையால்

எழுதிக்கொண்டே

இன்னோரு கையால்

கூந்தலைக் கோதி

கொ(ல்லு)ள்ளும்

ஓவியம் நீ......

விரல்களில் சிக்கிக்

கொண்டு மீள

முடியாமல் தவிக்கும்

பேனாவைப் போல்

உன் விழியில்

அகப்பட்ட நானும்

தவிக்கிறேன்.....

தூண்டில் மீன் போல்.



நகைகள் அழகுதான்

நீ அணிந்திருப்பதால்








(பி.கு)சில தவிர்க்க முடியாத காரணத்தால் பதிவிட முடியவில்லை.

இதோ மீண்டும் வந்தாச்சு......இனி ஒரு பயலும் நிம்மதியா இருக்க முடியாது.




கவிதையும் பேசும்


நடிகை:

----------------

அந்தப்

பிரபல நடிகையின்

பொன்மேனி

புழுக்கம் தாங்காமல்

வியர்த்துக்

கொட்டியது.......

காரணம்!

அவளைச் சுற்றி

ஆயிரமாயிரம் விசிறிகள்.

---------------------------


காதலியிடம்:

-------------

உன் நீள்முடியை

இங்கிருந்தே

என் நினைவுச் சீப்புகளால்

நீ(சீ)வி விட்டு

அதில் எத்தனை முறை நான்

எண்ண மலர்களைச்

செருகியிருக்கிறேன்!.

-------------------------------------

இருட்டில் உடன் வரா நிழல்கள்:

----(தலைப்பே ஒரு கவிதை மாதிரி இருக்கு

)-----

ரயில்கள் மட்டுமல்ல

மனிதர்களும் தான்

ஓடத் தொடங்குகிறார்கள்.!!கை இறங்கியவுடன்-நம்

கை இறங்கியவுடன்

------------------------------

மெல்லிசை மன்னர் M.S.V பற்றி

----------------------------

உன்னிடம்

அடகு வைக்கப்பட்ட

ஆயிரமாயிரம் காதுகள்

இன்னமும் மீட்கப்படாமலேயே

இருக்கின்றன.

(கவிஞர் வாலியின் “பொய்க்கால் குதிரைகள்கவிதைத் தொகுப்பிலிருந்து)

----------------------------------------

தன் காதலியை இன்னோரு ஆடவனுடன் கைகோர்க்கும் கல்யாணக் காட்சியினை பார்க்கும் காதலன் சொல்வது:

அன்றைக்குச் செத்து

விழுந்ததுதான்

இந்தக் காதல்!

தூக்கிக் கொண்டு

இன்னமும்

மரண ஊர்வலம்

நடத்துகிறேன்—

புதைக்க மனமில்லை,

எரிக்கவும் வழியில்லை!

(சதாசிவத்தின் “இன்னும் ஒரு மகரந்தம்கவிதைத் தொகுப்பிலிருந்து.)......................
அடுத்த பதிவில்...............


மாலைப் பொழுதின் மயக்கத்திலே


மாலைப் பொழுதின் மயக்கத்திலே
பகலவன் மறைந்தே பனி படறது பால்போலே,

பொழுதெல்லாம் இரை தேடி பொழுதோடு கூடு திரும்புது கொக்குகள்,

பசுங்கிளிகளும்,களவாடிய காக்கைகளும் ,
கதிரவன் முன்னே கருவேள் முள் கூட்டுக்கு திரும்பியாச்சு!

பொன்னொளி வீசியே
பொழுதெல்லாம் போச்சு,

கதிரவன் மறைந்து புதியதாய்
நிலா அவள் உதிக்கறாள்!இப்படியதோர் மாலைப் பொழுதிலே

மங்கையவள் மங்களாய் ஒளிகொண்ட
விளக்கதிலே திரி தீண்டுகிறாள்;

கழனி சென்ற களைப்புடனே தலைமேல் விறகோடு
இல்லம் சேர்ந்தாள் இல்லாள்;

பட்டணம் போன பன்னாடியைக்
காணலேன்னு வழி நோக்கி
காத்திருக்கும் மனைவிஒருத்தியவள்;

மண்சட்டியதிலே நெய்யும், கடுகும்
சேர்த்தே மணிக்குள் சோறாக்கி மணாளனுக்கும்,மகவுக்களுக்கும் பரிமாறும் தாயொருத்தி., .

மாட்டையும்,ஆட்டையும் கன்றுக்கு
பாலூட்டிவைத்து மிஞ்சியதை கறந்தே
இல்லம் வருகிறான் மறவனவன்!மாலையும் இராவும் இரண்டறக் கலந்தே மாலை மாண்டு இரவே வாகை சூடுது,

இவையெல்லாம் இனியதோர் கிராமத்து
மாலைப்பொழுதின் மயங்கும் பொன் நேரமது,







நம்புங்கள், நாம் தமிழர்தாம்!!!!





தமிழர் திருநாளாம்

பொங்கல்!

சொல்லிக்கொள்கிறார்கள்,


இயந்திர வாழ்க்கையில்

மறந்தே போய்விட்டொம்,

மாட்டையும் பொங்கலையும்,




காலையில் குளித்து

புத்தாடையுடுத்தி போலிப்புன்னகையில்

வாழ்த்துக்கள் சொல்லிக்கொ(ல்)ள்கிறோம்,



கோவில் செல்வோம்!,

தொலைக்காட்சி முன்பே படுத்துக்கிடக்கிறோம்!

புதுப் படங்கள் பார்க்கப் போகிறோம்,

காலம் ஓடுது, நாமும் ஓடுரோம்!



நிற்பதற்க்கும் நேரமில்லை,

நிதானித்தும் பார்க்கப்போவதுமில்லை,

பந்தமும் பாசமும் பொய்யாகிப்போச்சு!


காதலர்தினமும், முட்டாள்கள் தினமும்

பண்டிகையாகிப்போயின!

பிட்ஸாவும், பிரெட்டும் ,

உணவாகிப்போனது!.


மாடு சொல்லுது”அம்மா”ன்னு

தமிழர் மழலைங்க சொல்றாங்க ”மம்மி”ன்னு,

சொன்னாத்தானே பெருமை!



ஆடுபுலி ஆட்டமும்,கில்லியும்

இப்போ கிரிக்கெட்டும்,செஸ்ஸுமா மாறிப்போச்சு!,


நாம் வாழுறது அக்கம் பக்கத்துகாரங்களுக்கும்,

உறவுகளுக்கும் தானே!

நம் வாழ்க்கை நமக்காக இல்லை,நாலு பேருக்காகத்தான்!



தமிழர் பண்டிகைகள் இனிமேல் வளரும்!

நாம் கலாச்சாரத்தில் பின்பற்றும்

மேற்க்கத்தியர்கள் நம்மைப்

பின்பற்றுவதால்!

நம்புங்கள் நாம் தமிழர்தாம்!,,,





நல்லவேளை நாம் மறக்கவில்லை,

பொங்கலும்,தீபாவளியும்,

மறந்திருப்போம்,,,,,,,,,

விடுமுறையும், போனஸும் இல்லாதிருந்தால்!.



பெளர்ணமி நிலா



ஏனடி பெண்ணே

இப்படி வெட்கப்பட்டு,


ஒரு கண் வழியே,

விழி வைத்து

எட்டிப் பார்க்கின்றாய்!!!!


’’தென்னங்கீற்று வழி நிலவுப்பெண்’’
!!!!!!!!


மண் மீதும்,வழியெங்கும்


உயிர்கள் மீதும்,பயிர்கள் மேலும்


தேசமெங்கும் என்று

எதன் மீதும் படிந்திருக்கும்


பாதரசம்,


”பெளர்ணமி நிலவொளி”! ! !






படித்ததில் பிடித்தது.


எங்கேயோ படித்தது!!


இலங்கையில் மட்டும் எண்ணெய் வளம்

இருந்திருந்தால் அமெரிக்காவால்

ஈழம் உருவாக்கப்பட்டிருக்கும்.


Animated Social Gadget - Blogger And Wordpress Tips