Blogger Widgets

அறிவிப்பு

நிரந்தரமாக இன்பத்தை அனுபவித்தவனும் இல்லை. நிரந்தரமாகத் துன்பத்தில் உழன்றவனும் இல்லை.

ஆடம்பரம் ஆபத்து


ஒரு முறை மன்னன் நெப்போலியனுக்குச் (நம்ம நடிகரில்லீங்க)

செல்வந்தர்கள் ஒரு பெரிய விருந்து வைத்தார்கள்.

ஒரு பெண்மணி விலையுயர்ந்த நகைகளைத் தலை முதல்

பாதம் வரை அணிந்திருந்தாள்.

அந்தக் கூட்டத்திலேயே அதிகமான நகை அணிந்தவள் அவள்தான்.

எல்லோர் பார்வையும் அவளின் நகைகள் மீதே விழுந்தது.

நெப்போலியனும் அவளைப் பார்த்துவிட்டு

தன் மெய்க்காப்பாளனிடம்யார் இந்தப் பெண்?என்று கேட்டார்.

அதற்கு அவன் “இவர் புகையிலை வியாபாரியின் மனைவி”,

என்று பதிலளித்தான்.

மறுநாளே நெப்போலியன் “புகையிலை

தொடர்பான வியாபாரங்கள் அனைத்தும் அரசுடமை ஆக்கப்படும்என்று சட்டம் கொண்டு வந்தார்.

(எதுக்கு இந்த விளம்பரம்,அளவாக நகையைப் போட வேண்டியதுதானெ!),..


உடம்பு சரியில்லேன்னாலும் உங்களையெல்லாம்

நிம்மதியா இருக்க விடக்கூடாதுன்னுதான் இந்த

ஒரு சின்ன தத்துவமான கதை(ஹி,ஹி....)



கவிதையும் பேசும்


நடிகை:

----------------

அந்தப்

பிரபல நடிகையின்

பொன்மேனி

புழுக்கம் தாங்காமல்

வியர்த்துக்

கொட்டியது.......

காரணம்!

அவளைச் சுற்றி

ஆயிரமாயிரம் விசிறிகள்.

---------------------------


காதலியிடம்:

-------------

உன் நீள்முடியை

இங்கிருந்தே

என் நினைவுச் சீப்புகளால்

நீ(சீ)வி விட்டு

அதில் எத்தனை முறை நான்

எண்ண மலர்களைச்

செருகியிருக்கிறேன்!.

-------------------------------------

இருட்டில் உடன் வரா நிழல்கள்:

----(தலைப்பே ஒரு கவிதை மாதிரி இருக்கு

)-----

ரயில்கள் மட்டுமல்ல

மனிதர்களும் தான்

ஓடத் தொடங்குகிறார்கள்.!!கை இறங்கியவுடன்-நம்

கை இறங்கியவுடன்

------------------------------

மெல்லிசை மன்னர் M.S.V பற்றி

----------------------------

உன்னிடம்

அடகு வைக்கப்பட்ட

ஆயிரமாயிரம் காதுகள்

இன்னமும் மீட்கப்படாமலேயே

இருக்கின்றன.

(கவிஞர் வாலியின் “பொய்க்கால் குதிரைகள்கவிதைத் தொகுப்பிலிருந்து)

----------------------------------------

தன் காதலியை இன்னோரு ஆடவனுடன் கைகோர்க்கும் கல்யாணக் காட்சியினை பார்க்கும் காதலன் சொல்வது:

அன்றைக்குச் செத்து

விழுந்ததுதான்

இந்தக் காதல்!

தூக்கிக் கொண்டு

இன்னமும்

மரண ஊர்வலம்

நடத்துகிறேன்—

புதைக்க மனமில்லை,

எரிக்கவும் வழியில்லை!

(சதாசிவத்தின் “இன்னும் ஒரு மகரந்தம்கவிதைத் தொகுப்பிலிருந்து.)......................
அடுத்த பதிவில்...............


மாலைப் பொழுதின் மயக்கத்திலே


மாலைப் பொழுதின் மயக்கத்திலே
பகலவன் மறைந்தே பனி படறது பால்போலே,

பொழுதெல்லாம் இரை தேடி பொழுதோடு கூடு திரும்புது கொக்குகள்,

பசுங்கிளிகளும்,களவாடிய காக்கைகளும் ,
கதிரவன் முன்னே கருவேள் முள் கூட்டுக்கு திரும்பியாச்சு!

பொன்னொளி வீசியே
பொழுதெல்லாம் போச்சு,

கதிரவன் மறைந்து புதியதாய்
நிலா அவள் உதிக்கறாள்!இப்படியதோர் மாலைப் பொழுதிலே

மங்கையவள் மங்களாய் ஒளிகொண்ட
விளக்கதிலே திரி தீண்டுகிறாள்;

கழனி சென்ற களைப்புடனே தலைமேல் விறகோடு
இல்லம் சேர்ந்தாள் இல்லாள்;

பட்டணம் போன பன்னாடியைக்
காணலேன்னு வழி நோக்கி
காத்திருக்கும் மனைவிஒருத்தியவள்;

மண்சட்டியதிலே நெய்யும், கடுகும்
சேர்த்தே மணிக்குள் சோறாக்கி மணாளனுக்கும்,மகவுக்களுக்கும் பரிமாறும் தாயொருத்தி., .

மாட்டையும்,ஆட்டையும் கன்றுக்கு
பாலூட்டிவைத்து மிஞ்சியதை கறந்தே
இல்லம் வருகிறான் மறவனவன்!மாலையும் இராவும் இரண்டறக் கலந்தே மாலை மாண்டு இரவே வாகை சூடுது,

இவையெல்லாம் இனியதோர் கிராமத்து
மாலைப்பொழுதின் மயங்கும் பொன் நேரமது,







சைலென்ஸ் ப்ளீஸ்!



ஒரு முறை டெல்லி ரயில்வே ஸ்டேஷனில் டாக்ஸிபிடித்து ஏறினார்கள் இரண்டு இளைஞர்கள்.டாக்ஸி ட்ரைவரோ வயதான ஒரு சர்தார்ஜி. அவரைப் பார்த்ததும்
இளைஞர்களுக்குக் கிண்டல் செய்யும் எண்ணம் வந்தது.அவர்கள் கேட்ட,படித்த சர்தார்ஜிகளை கேலி செய்யும் ஜோக்குகள் நினைவுக்கு வந்தன.
அவரை வெறுப்பேற்ற வேண்டும் என்பதற்காக நிறைய சர்தார்ஜி ஜோக்குகளை வரும் வழியில் சொல்லிக்கொண்டே வந்தார்கள்.

ஆனால் சர்தார்ஜி ட்ரைவரோ ஒரு வார்த்தை கூடப் பதில் பேசவில்லை.
சில மணி நேரத்துக்குப் பிறகு அவர்கள் இறங்கும் இடம் வந்தது.
அதற்குள் சர்தார்ஜியை ஏகப்பட்ட கிண்டல் அடித்துவிட்டனர் அந்த இளைஞர்கள்.

மீட்டரைப் பார்த்துக் காசு கொடுத்ததும் அந்த சர்தார்ஜி ,இளைஞர்களிடம், இரண்டு ஐந்து ரூபாய் நாணயங்களைக் கொடுத்து,”தம்பி,நீங்க ரெண்டு பேரும் எங்களை நிறையக் கிண்டல் செய்தீங்க!,பரவாயில்லை, ஆனா எனக்காக ஒரே ஒரு காரியம் மட்டும் பண்ணுங்க!,இந்த அஞ்சு ரூபாய் காசை நீங்க பார்க்குற முதல் சர்தார்ஜி பிச்சைக்காரனுக்குப் போடுங்க ,,உங்களுக்குப் புண்ணியமாப்போகும்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார் சர்தார்ஜி.

அந்த இரண்டு பேருக்கும் ஒன்றும் புரியவில்லை,அவர்கள் அந்த நாணயங்களோடு செல்லும் இடங்களில் எல்லாம் பார்த்தார்கள்.
ஒரு சர்தார்ஜி பிச்சைக்காரர்களையும் பார்க்க முடியவில்லை,

அவர்களும் டெல்லியிலிருந்து கிளம்பும் நாள் வந்தது.
ரயில் நிலைய கார் ஸ்டேண்டில் அந்த சர்தார்ஜியைச் சந்தித்தனர்.
அந்த சர்தார்ஜி இளைஞர்களிடம் “என்ன தம்பி ! அந்த அஞ்சு ரூபாயை சர்தார்ஜிக்குப் பிச்சை போட்டீங்களா?”என்று கேட்டார்.
அதற்கு அவர்கள் “இல்லை,ஒரு சர்தார்ஜி பிச்சைக்காரர்களையும் எங்களால் பார்க்க முடியவில்லை”என்றனர்.

அந்த சர்தார்ஜி அவர்களிடம் “ அதான் தம்பி சர்தார்ஜிங்க! உலகம் முழுக்க எங்களைக் கிண்டல் செய்றாங்க!,ஆனா நாங்க அதெல்லாம் பொருட்படுத்தறதேயில்ல,
எங்களுக்குத் தெரிஞ்சதெல்லாம் உழைப்பு மட்டுந்தான்.ரோட்டோரக் கடை வைப்போம்,லாரி ஓட்டுவோம்,மூட்டை தூக்குவோம்,
ஆனா பிச்சை மட்டும் எடுக்க மாட்டோம்,டெல்லியில ஒரு சர்தார்ஜி பிச்சைக்காரனையும் பார்க்க முடியாது” என்றார் சர்தார்ஜி,
அந்த இரண்டு இளைஞர்களும் அவர்களின் செயலுக்கு வெட்கித் தலை குனிந்தனர். பின் மன்னிப்பு கேட்டு விட்டு பின் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.



அடுத்தவரைக் கிண்டல் செய்வது தவறான ஒரு செயல்,முடிந்தவரை அடுத்தவர்களின் மனம் நோகாமல் இன்வார்த்தைகளைப் பேசுவோம்.
அடுத்தவர்களின் ஏளனப் பேச்சைக் கேட்காமல்,நம் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அந்த காரியத்தை செய்தால் நிச்சயம் வெற்றிதான்.
அடுத்தவர்கள் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி.



முள்வே(வ)லி முகாம்



வீடும் வாசலும், மண்ணும் மக்களும்,ஊரும் உறவும் இழந்து,நெஞ்சில் துளி உயிரும்,சுவாசிக்க கொஞ்சம் காற்றும் தவிர கையிருப்பு எதுவும் இல்லாத தமிழ் ஈழத்து மக்களை

இலங்கை அரசு எப்படி நடத்துகின்றது என்பதைப் பற்றித்தான் இங்கு பதிவிடப்போகிறேன்.

நிராயுதபாணிகளான சொந்த தேசத்து மக்களை ஒரே இடத்தில் ,கொட்டடியில் போட்டு பூட்டிய கொடுமை இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது.

இதை கொடுங்கோலன் ராஜபக்‌ஷே பயங்கரவாதிகளை ஒழிப்பதற்கான போர்என்று காரணம் கூறியிருக்கிறான்.

அங்கு அடைக்கப்பட்ட தமிழர்களுக்கு உணவு தராமலும்,காயத்திற்கு மருந்து

தராமலும்,சத்தமின்றி

ஒரு யுத்தம் நடந்திருக்கிறது.

அதற்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தமிழர்களை வெளியில் விடுவித்தனர்,விட்டால் போதும் என்று வெளியேறிய தமிழர்கள்,அப்போது தங்களது சொந்த வீடுகளை இழந்திருந்தனர்.

விவசாய நிலங்கள் பிளாட் போடப்பட்டு விற்கப்பட்டிருந்தன.

மீன் பிடிக்க வலைகளும்,படகுகளும் சேதமாக்கப்பட்டிருந்தன.

இதற்கு முள்வேலி முகாமே நல்லதோ?” என்று நினைத்தார்கள் நம்மவர்கள்.

மேலும் வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களை கால்பதிக்கவே விடாமல் அலைக்கழித்தனர் இலங்கை அரசு அதிகாரிகள்.

பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் நிருபர் ஒருவர் ,ஆளுங்கட்சி எம்.பி.அப்துல்

காதரிடம்

இன்னும் தமிழர்களை ஏன் முள்வேலி முகாமுக்குள் அடைத்துவைத்திருக்கிறீர்கள்?”

என்று கேட்டதற்கு அவரின் பொறுப்பான பதில்விலங்குகளிடமிருந்து பாதுகாக்கவே அப்படி செய்துள்ளோம்என்று சொன்னாராம்.

(ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுததாம்).

பல நாட்களுக்கு முன் சோனியாகாந்தி சென்னைக்

கடற்கரையில் இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல்


உரிமைகளை வழங்க வலியுறுத்துவோம்என்று சொல்லியிருந்தது பற்றி ராஜபக்‌ஷேவின்

கைக்கூலியான லஷ்மண் யாப்பாவிடம் கேட்டதற்கு

அப்படியா சோனியா சொன்னார்,எங்ககிட்ட சொல்லவே இல்லஎன்று வடிவேலு

மாதிரி காமெடி செய்திருக்கிறார் இந்த மதிகெட்ட அமைச்சர்.

இயற்கைக்கு முன் இவர்களும் பதில் சொல்லும் காலமும்

வரும்.

மேலும் வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களை போருக்குப் பின் இலங்கைக்குள்

அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள்.இதில் உலக சுகாதார நிறுவனமும்,ஐ.நா,சபையும்

அடக்கம்.

யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் தூதரகத்தை அமைத்துவிட்டதாக முன்னாள் முதல்வரான கருணாநிதிக்கு பெருமையாகக் கடிதம் எழுதினார் நம் வெளியுறவுத்துறை அமைச்சர் S.M.கிருஷ்ணா.

இதில் இப்போது என்ன செய்து கிழிக்க இலங்கை சென்றார் என்று தெரியவில்லை.


சுமார் 30 ஆண்டுகாலப் போராட்டம் ,

மரண நாள் கண்ட முதியவர்கள்,பிள்ளைகளையும்,கற்பையும் இழந்த பெண்கள்,உடல் வற்றி எலும்பும் தோலுமாய் மரணத்தை நோக்கிய பிஞ்சுக்குழந்தைகள்,,,,,

கனவுகள் சிதைக்கப்பட்ட இளம்பெண்கள் மட்டுமே தமிழரிடம் அவர்களுக்கு வேண்டுமாம்.

சிங்களக் கருக்களை சுமக்கும் தமிழ் தாரகைகள்,

ஈழக்கனவுகளை இப்படியும் சிதைக்கிறார்களாம்.

உலகிற்கு நாகரிகத்தை உணர்த்திய தமிழர்கள் நாதியற்று போகிறோம்!.

போதும், இழந்தது,இழப்பதற்கு இனி உயிரைத்தவிர ஒன்றுமில்லை தமிழரிடம்.

இனி யாருக்கு வேண்டும் நாடும், நாடு கடந்ததும்?



உயிரா? காசா? ......... காசுதான்.



ரண்டு நண்பர்கள் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்கள்.
மிகவும் பரபரப்பானதொரு சாலையது.இவர்களோடு இன்னும் பலர் நடந்து சென்று கொண்டிருந்தார்கள்.

அப்போது அவர்களில் ஒருவன் திடீரென நின்று சற்று தொலைவில் உள்ள ஒரு புதர்ப்பக்கம் சென்றான்.
அங்கே ஒரு பூனைக்குட்டி ஒன்று முள்ளில் சிக்கி கத்திக்கொண்டிருந்தது.
அதனருகே சென்ற நண்பன்
புதரை விலக்கி அதனுள் சிக்கியிருந்த பூனைக்குட்டியை விடுவித்தான்.
பூனைக்குட்டி துள்ளிக் குதித்து ஓடியது.

இதைப்பார்த்த இன்னோர் நண்பனுக்கு ஆச்சரியம்!
”இத்தனை பேர் சாலையில் நடந்து செல்கிறோம்,ஆனால் இந்
சந்தடியில் யாருக்குமே பூனைக்குட்டியின் சத்தம் கேட்கவில்லை, உனக்கு மட்டும் எப்படி கேட்டது?” என்று வினவினான்.



அதற்கு பூனைக்குட்டியை காப்பாற்றியவன் பலமாக சிரித்தான்,”என்ன இந்த பூனைக்குட்டியின் சத்தம் இந்த சந்தடியில் கேட்கவில்லையா?”என்று கூறிவிட்டு


”சரி இப்போது பார்” என்று சொல்லிக்
கொண்டே தன் சட்டைப்பையிலிருந்து கொஞ்சம் சில்லரைக் காசுகளை எடுத்து தரையில் போட்டான்.

அந்த சில்லரை சத்தம் கேட்டதும் நடந்து சென்று கொண்டிருந்த மற்றவர்களல்லாம் திரும்பிப் பார்த்தனர்.

பின் பூனைக்குட்டியைக் காப்பாற்றியவன்
மற்றவனிடம் சொன்னான்”காசு சத்தம் கேட்டதும் திரும்பிப் பார்த்தவர்கள் பூனைக்குட்டியின் சத்தத்திற்க்கு செவி சாய்க்கவில்லை பார்த்தாயா?
இதுதான் உலகம்.அவர்களுக்கு தேவைப்பட்டால் மட்டுமே திரும்பிப் பார்ப்பார்கள்,இல்லையெனில் காணாதது போல் சென்றுகொண்டே இருப்பார்கள்.உதவும் மனப்பான்மை கூட ஏதோ
ஒன்றை எதிர்பார்த்தே செய்கின்றனர்,”
என்று சலித்துக்கொண்டான்.





(ஒரு கதை சொல்லி ஊரைத் திருத்தலாம்னு முடிவு!
அதான்! இப்படி சும்மா ஒரு கதை.)

இனி வரும் பதிவுகள் சிலவற்றில் தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான மரங்கள் சிலவற்றின் சிறப்புகளை எழுதலாம் என்று உள்ளேன்,சரி அடுத்த பதிவில் பார்ப்போம்!



கொடாக் நிறுவனம் திவால்!

ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே, கையில் பிடித்து புகைப்படும் எடுக்கும் கருவியை பெருவாரியான மக்களிடம் எடுத்துச் சென்ற பெருமை கொடாக் நிறுவனத்துக்கு உண்டு.

கொடாக்கின் பெருமைகள்:


1880 ஆம் ஆண்டுகளில் ஜார்ஜ் ஈஸ்ட்மேன் அவர்களால் கொடாக் நிறுவனம் ஏற்படுத்தப்பட்ட பிறகு, இருபதாம் நூற்றாண்டில் மிகவும் அறியப்பட்ட வர்த்தகப் பெயர்களில் ஒன்றாக அது திகழ்ந்தது.


கொடாக் தருணங்கள் என்று கூறப்பட்ட பல லட்சம்
குடும்ப புகைப்படங்கள் உட்பட பல சரித்திர முக்கியத்துவம்
வாய்ந்த படங்கள் கொடாக் கேமராவில் எடுக்கப்பட்டுள்ளன.

மனிதன் நிலவில் முதலில் கால்பதித்த தருணத்தை பதிவு செய்ய நீல் ஆம்ஸ்ட்ராங் கொடாக் கேமராவைத்தான் பயன்படுத்தினார். 1892 ஆம் ஆண்டு ஈஸ்ட்மேன் கொடாக் எனும் நிறுவனம் உருவான பிறகு 1970 கள் வரை அமெரிக்க புகைப்பட சந்தையில் 90 சதவீதம் அந்த நிறுவனத்திடம் இருந்தது.

வீழ்ச்சிக்குக் காரணம்:


ஆனால் உலகளவில் புகைப்பட தொழில்நுட்பம் டிஜிட்டலுக்கு மாறிய பிறகு, அந்த மாற்றத்தை மிக மெதுவாகத்தான் கொடாக் ஏற்றுக் கொண்டது, அதுவேஅதன் வீழ்ச்சிக்கு வித்திட்டது.

ஆனால் டிஜிட்டல் தொழில்நுட்ப மாறுதலை அணைத்துக்கொள்வதில் அந்த நிறுவனம் மிகத் தாமதமாக செயல்பட்டது என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கடந்த 15 ஆண்டுகளில் கொடாக் நிறுவனத்தின் மதிப்பு 35 பில்லியன் டாலர்களிலிருந்து 150 மில்லியன் டாலர்களுக்கும் குறைவாக வீழ்ச்சியடைந்தது.
நிர்வாகத்தை மறுசீரமைக்கும் நடவடிக்கைகளை கொடாக் எடுத்துவரும் வேளையில், நிறுவனம் நிலைகுலையாமல் இருக்கும் நோக்கில் ஒரு பில்லியன் டாலர்கள் கடனை கொடாக் திரட்டியுள்ளது.
அண்மைய காலங்களில் தம்மிடமுள்ள காப்புரிமையின் மூலம் பயனடையும் செயல்பாடுகளிலும் கொடாக் இறங்கியது. அது தொடர்பில் ஆப்பிள், எச் டி சி மற்றும் சாம்சங் நிறுவனங்கள் மீது வழக்கும் தொடுத்தது.
தற்போது திவாலாவதிலிருந்து தமக்கு பாதுகாப்பு கிடைக்குமானால், 2013 ஆம் ஆண்டுக்குள், நிதிநெருக்கடியில் இருந்து மீண்டு தனது தொழிலை தொடர்ந்து மேற்கொள்ள முடியும் என கொடாக் நம்புகிறது.
தனது இலாபங்கள்
வீழ்ச்சியடைவதை தடுக்கும் நோக்கில், கடந்த சில காலமாக கேமரா தொழிலிலிருந்து கொடாக் விலகி, கம்ப்யூட்டர் பிரிண்டர்களில் கவனம் செலுத்தியது.

இந்த மாதத்தில் முற்பகுதியில் கொடாக் நிறுவனத்தின் பங்குகள் குறைந்தது ஒரு டாலருக்கு மேலான நிலையை எட்டாவிட்டால், அந்த நிறுவனத்தின் பங்குகள் தமது சந்தையிலிருந்து அகற்றப்படும் என்று நியூயார்க் பங்குச் சந்தை அறிவித்திருந்தது.

1980 களில் கொடாக் நிறுவனம் உச்சத்தில் இருந்த போது உலகளவில் அதில் 1,45,000 பேர் பணியில் இருந்தார்கள். ஆனால் தற்போது அதில் 19,000 ஊழியர்களே இருக்கும் நிலையில், அவர்களின் பலர் இந்த திவால் நிலையினால் வேலை இழக்க நேரிடும்.

உலகளவில் இருபதாம் நூற்றாண்டில் அனைவரின் வாழ்க்கையிலும்
மறக்க முடியாத நினைவுகளை பாதுகாத்து வைத்ததில் கொடாக்குக்கு ஒரு பங்கு
ள்ளது, ஏனென்றால் அந்த நிறுவனத்திடம்தான் அந்தப் பணி பெரும்பாலானவர்களால் ஒப்ப
டைக்கப்பட்டது என்று சுட்டிக்காட்டுகிறார் டொடரண்டோவிலுள்ள ரயர்ஸன்
பல்கலைகழகத்தில் புகைப்படத்துறை பேராசிரியராக இருக்கும் ராபர் பர்லி.


ஏற்கனவே சிட்டிகுரூப் நிறுவனத்திடமிருந்து 950 மில்லியன் டாலர்கள் கடனை கொடாக் ஏற்பாடு செய்துள்ளது. அமெரிக்காவின் பிரபல கேமரா தயாரிப்பு நிறுவனமான கொடாக் திவாலாவதிலிருந்து சட்டரீதியான பாதுகாப்பை கோரியுள்ளது.
(source:america daily)


Animated Social Gadget - Blogger And Wordpress Tips