Blogger Widgets

அறிவிப்பு

நிரந்தரமாக இன்பத்தை அனுபவித்தவனும் இல்லை. நிரந்தரமாகத் துன்பத்தில் உழன்றவனும் இல்லை.
Showing posts with label உரிமை. Show all posts
Showing posts with label உரிமை. Show all posts

IPL வருக! ஈழம் சாக!







இந்த வருட ipl வெகு விமரிசையாக ஆரம்பித்துவிட்டது.


நாட்டில் இருந்த எல்லா பிரச்சினைகளும் இதனால் தீர்ந்துவிட்டது,


எப்படியென்றால்

ஈழத்துக்காக மாணவர் போராட்டம் கைவிடப்பட்டது,

ஸ்டெர்லைட் ஆலை விவகாரப் போராட்டமும் கைவிடப்பட்டது,.



மகாராஷ்ட்ராவில் எவ்வளவு பஞ்சம் இருந்தாலும் ,கிரிக்கெட் மைதானத்திற்கு தண்ணீர் கொடுத்தே தீர்வார்கள்.!

இதனால் வருமானமும் கணிசமாகக் கிடைக்கும்.


இது ”Indian premier league” என்பது சந்தேகமாக இருக்கிறது.

”இலங்கை,ஆஸ்திரேலியா ப்ரீமியர் லீக்” என்று பெயர் மாற்றியிருக்கலாம்.


தகவல் அறியும் உரிமைச் சட்டம்


சோனியா காந்தி  கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் முறையாக அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக சென்றார். அங்கு அறுவை சிகிச்சை நடைபெற்றதாகக் கூறப்பட்டது. ஆனால் சோனியாவுக்கு என்ன நோய் என்றோ அவர் எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் என்றோ கூறப்படவில்லை.அதன் பின்னர் பிப்ரவரி 27ம் தேதி மீண்டும் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக சென்றார். அப்போது அமெரிக்கா வாழ் சீக்கியர்கள் அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
அப்போது சோனியாவின் மருத்துவ சிகிச்சைக்கான பணத்தை யார் கட்டியது என்று அமைச்சர் அம்பிகா சோனியிடம் கேட்கப்பட்டபோது, விரைவில் அறிவிக்கப்படும் என்றார். ஆனால் சொல்லவே இல்லை.

ஆனால் இப்போது  நரேந்திர மோடி  ரூ .1800 /- கோடி சோனியாவுக்கு செலவு செய்திருப்பதாக ஆதாரத்தைக் காண்பிக்கிறார் .எது உண்மைன்னு ஒண்ணுமே வெளங்கலியே ?
இந்த மாதிரியான தகவல்களை நாம்  பெற  உதவுவதே தகவல் அறியும் உரிமை சட்டமாகும் .
 


சொக்கத்தங்கம்யா இவங்க?


தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005ம் ஆண்டு இயற்றப்பட்டது. இச்சட்டத்தை சரியாக பயன்படுத்துவதன் மூலம் லஞ்சம் மற்றும் ஊழலை பெருமளவு கட்டுப்படுத்த முடியும்.
சட்டம் எதற்கு?
அரசு அலுவலகங்கள் பொது மக்களுக்கு தகவல் சொல்லக் கடமைப்பட்டிருந்தாலும் இச்சட்டம் இயற்றப்படுவதற்கு முன் நீங்கள் கேட்கும் தகவலை அவ்வளவு எளிதில் பெற இயலாது. நீங்கள் தகவல் கேட்டு அனுப்பும் கடிதம் குப்பைக்கு கூட செல்லும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இச்சட்டம் இயற்றப்பட்ட பிறகு தகவல் தர மறுத்தால் சட்டத்தை மீறுவதாகும். தண்டனை கிடைக்கும் என்ற அச்சத்தால் தகவல் கிடைக்கும் வாய்ப்பு உறுதியாகிறது.
எங்கிருந்து தகவல் பெறலாம்?
மத்திய மாநில அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசு நிதி பெறும் நிறுவனங்கள் ஆகியவற்றிலிருந்து தகவல் பெறலாம். தனியார் நிறுவனங்களுக்கு இச்சட்டம் பொருந்தாது.
என்ன தகவல் பெறலாம்?


Animated Social Gadget - Blogger And Wordpress Tips