Blogger Widgets

அறிவிப்பு

நிரந்தரமாக இன்பத்தை அனுபவித்தவனும் இல்லை. நிரந்தரமாகத் துன்பத்தில் உழன்றவனும் இல்லை.
Showing posts with label வரலாறு. Show all posts
Showing posts with label வரலாறு. Show all posts

மரங்கள்-நம் மருத்துவர்கள்

இனி வரும் காலங்களில் ஒவ்வொரு மரங்களின் தன்மை,மருத்துவ குணங்கள் பற்றி பார்க்கலாம்.முதலாவதாய் வருவது அரச மரம்தான்.
”அரசு இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்பது நம் முன்னோர் மொழி.அரசமரத்தின் உதிர்ந்த இலைகளைக் கொண்டு ஒரு ஏக்கர் நிலத்தில் விளைச்சல் எடுக்கலாம்.ஒரு வருடத்திற்கு 1 டன் முதல் 4 டன் இலைகளை உதிர்க்கும் இந்த அரச மரம்,மழை மேகங்களை கவர்ந்திழுக்கும் தன்மை கொண்டவை.மேலும் அதிகளவு ஆக்ஸிஜன் வாயுவை தரும் மரமும் இதுவே
இதனால்தான் நம் முன்னோர்கள் இதனை கோவில்களில் நட்டு,108 தடவை சுற்றி வரச் செய்தார்கள்.அப்படி சுற்றி வரும்போது கார்பன் -டை -ஆக்ஸைடை அதிகளவு  உட்கிரகித்து கொண்டு,உடம்புக்குத் தேவையான பிராண வாயுவை நமக்கு அளிக்கிறது.
புத்தருக்கு ஞானம் அளித்த இந்த அரச எனும் போதி மரம்,விசுவாமித்திர முனிவருக்கும் காயத்ரீ ஞானம் பிறந்தது.கி,மு,288 காலங்களில் அசோகர் ஸ்ரீலங்கா மன்னருக்கு புத்த மதத்தின் பரிசாய் அனுப்பியிருக்கிறார்.இதனால் அரசமரத்தடியில் புத்ததுறவிகள் கூடும் மரபு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
காந்திஜியும்,நேருவும் அரச மரங்களை நட்டனர்,.இன்னும் கிராமங்களில் மக்கள் கூடும் சந்தைகளும்,விசேடங்களும் அரச மரத்தடியில்தான்.கிராமங்களில் அரச மரம் ஆணாகவும்,வேம்பு பெண்ணாகவும் சித்தரித்து திருமணம் செய்விப்பார்கள்.குழந்தை பேறு உண்டாக்கும் மருந்துகள்,சுற்றி வரும்போது ஏற்படும் வேதியல் மாற்றங்களால்,பிணி நீங்குதல்,மூல நோயை குணப்படுத்துதல்,என்று இதன் மருத்துவகுணங்கள் ஏராளம்.




தாஜ்மஹாலின் இருண்ட பக்கங்கள்-வெளிவராத மர்மங்கள்-2


முகலாயமன்னர் ஷாஜகானால் தனது காதல் மனைவி மும்தாஜ் நினைவாக கட்டபட்ட சமாதிதான் தற்போதைய உலக அதிசயங்களில் ஒன்றான ''தாஜ்மஹால்'' என்று வரலாறு தெரிவிக்கிறது. 
ஆனால் தாஜ்மஹால் என்பது ''தேஜாமஹாலயா'' என்றழைக்கப்பட்ட பழைய சிவன் கோவில்தான் என்கிற புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.   
    
 தாஜ்மஹால்  குறித்து தகவல்கள் அனைத்தும் உலகை ஏமாற்றியுள்ளது. தாஜ்மஹால் மும்தாஜின் சமாதி அல்ல அது புராதான சிவன்கோயில் என்று ஆதாரங்களுடன் கூறுகிறார் இந்தியாவின் வடமாநில வரலாற்று பேராசிரியர் பி.என்.ஓக். 
முன்பு ''தேஜாமஹாலயா'' என்கிற பெயரால் தாஜ்மஹால் அழைக்கப்பட்டுவந்தது என்று அவர் தெரிவிக்கிறார், ஜெய்ப்பூர் ராஜா ஜெய்சிங்குக்கு சொந்தமாக இருந்த சிவாலயத்தை ஷாஜகான் மன்னர் பிடுங்கிக்கொண்டார் என்றும் ஷாஜகான் மன்னரின் சொந்த வாழ்க்கை குறிப்பான ''பாத்ஷாநாமாவில்'',ஆக்ராவில் மிகவும் அழகான மாளிகையை மும்தாஜின் உடலை அடக்கம் செய்கின்றமைக்கு தேர்தெடுத்தது குறித்து குறிப்புகள் உள்ளன என்றும் பேராசிரியர் கூறியுள்ளார்.
இந்தியாவின் வடமாநில வரலாற்று பேராசிரியர் பி.என்.ஓக்.







பாத்ஷாநாமாவில் பழமையான தாஜ்மாஹாலை ஒப்படைக்க கேட்டு மன்னர் ஷாஜகான், ஜெய்ப்பூர் மன்னர் ஜெய்சிங்கிற்கு ஆணை பிறப்பித்து உள்ள ஆவணம்.
ஆதியில் சிவன்கோயிலாக இருந்ததை கையளிக்கச் சொல்லி ஷாஜகான் மன்னரால் ஜெய்சிங் ராஜாவிற்கு அனுப்பட்ட இரு ஆணைகள் இன்னும் பத்திரமாகவே உள்ளன என்றும்,கைப்பற்றி கொள்கின்ற


சேது சமுத்திரம்,சீனாவின் படையெடுப்பு





ராமர் பாலம் விவகாரம் பிரச்சினைகள் நாளுக்குநாள் பெரும் பிரச்சினையாகலாம்.பழமை விரும்பியான கலைஞர் கருணாநிதி,தமிழினக் காவலனான இவர் தொடர்ந்து மௌனம் சாதித்து வருகிறார்.
ராமர் பாலம் இருப்பதற்கான செயற்கைக்கோள் புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் நாசா வெளியிட்டும் அமெரிக்காவின் கைப்பாவையான நம் பொம்மை பிரதமரும்,சோனியாவும் ஏனோ ஏற்க மறுக்கிறார்கள்.நம் நாட்டினர்கள் சொன்னால் நம்பாத இவர்கள்
இவர்களின் முதலாளிகளான அமெரிக்கா சொல்லியும் ஏற்க மாட்டேங்குறாங்க?


இந்த சாட்சி மட்டும் போதாதாம்.நீதிமன்றத்தில் ”ராமர் பாலம் இருந்ததற்கான சாட்சி இல்லை” என்று வாதிட்டிருக்கிறார்கள்.


இதற்காக ராமர் பாலம் கட்டிய வானரங்களும்,அணிலும் தான் வரவேண்டும் சாட்சி சொல்வதற்கு.இவர்கள்
ராமர் பாலத்தின் வரலாறு சிறு குழந்தைகளுக்குக் கூடத் தெரியும்.

நம் பிரதமர் மட்டும் சொன்னதையே சொல்வாரே”எனக்குத் தெரியாதே”!....
ராமரின் கால்தடம் பதித்த கல் கூட ராமேஷ்வரத்தில் இன்னமும் சுற்றுலா செல்பவர்கள் காணலாம்.
அவர் என்ன தனக்குத்தானே பாராட்டுவிழா நடத்தி தன் கால் சின்னத்தைப் பதித்து வைத்தாரா?


ஹிட்லரின் மறுபக்கமும் ,மரணமும்


சோவியத் ரஷ்யப்படைகள் ஜெர்மன் மீது படையெடுத்தது.ஜெர்மன் தலைநகரம் பெர்லின் மீது
சோவியத் படைகள் நிலைகொண்டு தன் வெற்றியை உறுதி செய்தது.
சோவியத் யூனியன் மீது மட்டும் ஹிட்லர் போர் தொடுக்காமல் இருந்திருந்தால் ஜெர்மனுக்கு
இந்த நிலைமை வந்திருக்காது.

1945 ஏப்ரல் 30 ஆம் தேதி அதிகாலை 2.30 மணி.ஹிட்லர் தன் மாளிகையில் உள்ள பாதாள அறையில்
தன் நண்பன் கோயபல்ஸ், மற்றும் தன் காதலி ஈவா பிரவுனுடன் பதுங்கியிருந்தார்.
தன் அறைக்கு அருகில் இருக்கும் தன் நண்பன் கோயபல்ஸை அழைத்தார் ஹிட்லர்.
ஹிட்லரின் அந்தரங்கச் செயலாளர் ப்ராஜூங்கேவுடன் இரண்டு முக்கிய ஆவணங்களை
தயார் செய்தார் ஹிட்லர்.
ஒன்று அவருடைய உயில்,மற்றொன்று அரசியல் ஏற்பாடு.உயிலை நிறைவேற்றும் பொறுப்பு மார்டின் போர்மன் என்பவரிடம் தரப்பட்டது.
1945-ம் ஆண்டு ஏப்ரல் 25-ந்தேதி பெர்லின் நகரை ரஷியப் படைகள் சூழ்ந்து கொண்டு விட்டன. விமானங்கள் குண்டு மாரிப்பொழிந்து கொண்டு இருந்தன. எந்த நேரத்திலும் ரஷியப் படைகள், பெர்லின் நகருக்குள் புகுந்து விடலாம் என்கிற நிலை. எதிரிகளிடம் யுத்தக் கைதியாகப் பிடிபட்டால் தன் நிலை என்னவாகும் என்பதை உணர்ந்தார் ஹிட்லர்.
எதிரிகளிடம் சிக்குவதற்குள் தற்கொலை செய்து கொள்வதே மேல் என்ற முடிவுக்கு வந்தார். தன் முடிவைக் காதலி ஈவாபிரவுனிடம்


தாஜ்மஹாலின் இருண்ட பக்கங்கள்-வெளிவராத மர்மங்கள்.



ஷாஜஹானின் ஆட்சியின் கடைசிகாலகட்டம் அது.ஔரங்கசீப் ஆட்சி அரங்கேறியது.

தன் தந்தையை சிறை வைத்தார் ஔரங்கசீப்.

ஆக்ரா கோட்டையில் எட்டு ஆண்டுகள் சிறைவைக்கப்பட்ட ஷாஜகானுக்கு மாற்று உடைகளும், எழுதும் உபகரணங்களும் மறுக்கப்பட்ட காலம்.அவர் அணிந்திருந்த ஆபரணங்களும் அகற்றப்பட்டன.

பூனை இளைத்தால் எலிக்குக் கொண்டாட்டம்என்னும் முதுமொழிக்கேற்ப ஷாஜகானை


காவலாளிகள் கூட மரியாதைக் குறைவாக நடந்து கொண்டனர்.
மகனான ஔரங்கசீப் மதித்தால்தானே காவலர்கள் மதிப்பதற்கு.

வெறுப்பின் உச்சகட்டத்திற்கு போன ஷாஜகானுக்கு பாலைவனச்சோலையாக இருந்தது தன் மகளான ஜஹனாராதான்.மகன் மதிக்காது போனாலும் தன் மகள் ஜஹனாராவாவது தமக்கு சிறையில் உதவியாய் இருப்பது மகிழ்ச்சியளிப்பதாய் இருந்தது ஷாஜகானுக்கு.

பெரும்பாலான பொழுதை தொலைவில் தெரியும் தன் காதல்மனைவியின் கல்லறையான தாஜ்மஹாலையே கண்ணிமைக்காமல் பார்த்து தன் நிலை எண்ணி கவலையுற்று,நோய்வாய்ப்பட்டார்.


புனித குர் ஆன் படிப்பதற்குமட்டுமே ஷாஜஹானுக்கு ஔரங்கசீப் அனுமதித்தார்.

(மகன் தந்தைக்கு ஆற்றும் செயல்).

கடைசிகாலத்தில் மறுபடியும் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் விழுந்த ஷாஜஹானால்,படுக்கையை விட்டு எழுந்து நடமாட முடியவில்லை.

அந்த நிலையிலும் தன் சகோதரியின் வேண்டுகோளுக்கிணங்கி ஔரங்கசீப் ,ஆளுயர கண்ணாடி ஒன்றை ஷாஜஹான் தாஜ்மஹாலை பார்க்கவசதியாக வைப்பதற்கு ஔரங்கசீப் அனுமதித்தார்.

ஜனவரி 22,1666 அன்று ஷாஜஹானின் எழுபத்து நாலாம் வயதில்,ஜஹனாரா பேகம் தன் தந்தையின் சிறைக்குள் நுழையும் நேரம்



மனிதனைக் கெடுப்பவை இவைகள்!

மனிதர்களைக் கெடுப்பவை இவை மூன்றும் தான்:

1. மறதி

2. மடி (சோம்பல்)

3. துயில் (தூக்கம்)

முதலில்” “மறதியைப் பற்றி:

நான் யார்?என்ற ஞாபகம் இல்லாமை.அதனால்தான் உடம்பாகிய கூட்டை

தானாகவே எண்ணிக்கொண்டோம்.ஐம்புலன்களால் உலகை

அனுபவிக்க அலைகிறோம்.கணநேரம் தோன்றும் வானவில் போன்ற வாழ்க்கைக்கு

மனம் அலைகிறது,. நிரந்தரமற்றதை நிரந்தரமாக்க எண்ணுகிறோம்..

அப்போதைக்குக் கிடைக்கும் அற்ப சுகத்துக்காக பேராசையில் பெரிதாகப்

பாடுபட்டு அயர்ச்சி அடைகிறோம், ஆன்மாவை மறந்தோம்.இதிலெங்கே

இறைவனவனை நினைப்பது.அதனாலே சம்சாரத்தில் வீழ்கிறோம்,

ஆசை என்ற சங்கிலியால் பிண்ணிப் பிணைக்கப்பட்டுள்ளோம்.

ஆனால் மறதியும் வேண்டும்,ஆனாலும் மறதி மட்டும் இல்லையெனில் இன்று நம்மில் பலர்

பைத்தியமாக அலைய வேண்டியிருக்கும். மறதியே வாழ்க்கையாகக் கூடாது.

ஏனெனில்”” “அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சல்லவா?

அடுத்து “மடிஎன்னும் சோம்பல் பற்றி:

செயலில்லாமல் முடங்கிக் கிடத்தல் ஒருவனைக் கெடுக்கிறது. செயலூக்கமில்லா

நிலையும்,செத்த நிலையும் ஒன்றே.பொறுமை என்ற பெயரில்,

சகிப்புத்தன்மை என்ற சாக்கில், இன்றும் பலர் செயல்படாமல் தங்களின் திறமைக்கு

சாவு மணி அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.போதை வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

கேட்டால் சமாதான புறாக்களை பறக்க விடுவதாகச் சொல்லிக்கொண்டு சாம்ராஜ்யங்களைக் கோட்டை



ஆடம்பரம் ஆபத்து


ஒரு முறை மன்னன் நெப்போலியனுக்குச் (நம்ம நடிகரில்லீங்க)

செல்வந்தர்கள் ஒரு பெரிய விருந்து வைத்தார்கள்.

ஒரு பெண்மணி விலையுயர்ந்த நகைகளைத் தலை முதல்

பாதம் வரை அணிந்திருந்தாள்.

அந்தக் கூட்டத்திலேயே அதிகமான நகை அணிந்தவள் அவள்தான்.

எல்லோர் பார்வையும் அவளின் நகைகள் மீதே விழுந்தது.

நெப்போலியனும் அவளைப் பார்த்துவிட்டு

தன் மெய்க்காப்பாளனிடம்யார் இந்தப் பெண்?என்று கேட்டார்.

அதற்கு அவன் “இவர் புகையிலை வியாபாரியின் மனைவி”,

என்று பதிலளித்தான்.

மறுநாளே நெப்போலியன் “புகையிலை

தொடர்பான வியாபாரங்கள் அனைத்தும் அரசுடமை ஆக்கப்படும்என்று சட்டம் கொண்டு வந்தார்.

(எதுக்கு இந்த விளம்பரம்,அளவாக நகையைப் போட வேண்டியதுதானெ!),..


உடம்பு சரியில்லேன்னாலும் உங்களையெல்லாம்

நிம்மதியா இருக்க விடக்கூடாதுன்னுதான் இந்த

ஒரு சின்ன தத்துவமான கதை(ஹி,ஹி....)



மாலைப் பொழுதின் மயக்கத்திலே


மாலைப் பொழுதின் மயக்கத்திலே
பகலவன் மறைந்தே பனி படறது பால்போலே,

பொழுதெல்லாம் இரை தேடி பொழுதோடு கூடு திரும்புது கொக்குகள்,

பசுங்கிளிகளும்,களவாடிய காக்கைகளும் ,
கதிரவன் முன்னே கருவேள் முள் கூட்டுக்கு திரும்பியாச்சு!

பொன்னொளி வீசியே
பொழுதெல்லாம் போச்சு,

கதிரவன் மறைந்து புதியதாய்
நிலா அவள் உதிக்கறாள்!இப்படியதோர் மாலைப் பொழுதிலே

மங்கையவள் மங்களாய் ஒளிகொண்ட
விளக்கதிலே திரி தீண்டுகிறாள்;

கழனி சென்ற களைப்புடனே தலைமேல் விறகோடு
இல்லம் சேர்ந்தாள் இல்லாள்;

பட்டணம் போன பன்னாடியைக்
காணலேன்னு வழி நோக்கி
காத்திருக்கும் மனைவிஒருத்தியவள்;

மண்சட்டியதிலே நெய்யும், கடுகும்
சேர்த்தே மணிக்குள் சோறாக்கி மணாளனுக்கும்,மகவுக்களுக்கும் பரிமாறும் தாயொருத்தி., .

மாட்டையும்,ஆட்டையும் கன்றுக்கு
பாலூட்டிவைத்து மிஞ்சியதை கறந்தே
இல்லம் வருகிறான் மறவனவன்!மாலையும் இராவும் இரண்டறக் கலந்தே மாலை மாண்டு இரவே வாகை சூடுது,

இவையெல்லாம் இனியதோர் கிராமத்து
மாலைப்பொழுதின் மயங்கும் பொன் நேரமது,







கட்டபொம்மன் கோட்டை



சில மாதங்களுக்கு முன் நண்பர் ஒருவரின் திருமணத்திற்காக தூத்துக்குடிக்கு 8 பேர் சென்றோம்.திருமணம் முடிந்து வரும் வழியில் எதேச்சையாகத்தான் கட்டபொம்மன் கோட்டை நுழைவாயிலைப் பார்த்தோம்.

பின் அங்கு சென்று வரலாம் என்று எல்லோரும் சென்றோம்.



  1. வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு மண்டபத்திற்குள் நுழைவதற்கு முன்னர் நாம் ஐந்து வளைவுகளைத் தாண்டிச் செல்ல வேண்டும். முதலில் தெரிவது ஊமைத்துரை நுழைவாயில்.

2. இதைக் கடந்து மேலும் சற்று தூரம் பயணம் செய்து கொண்டிருக்கும் போது இரண்டாவது நுழைவாயில் தென்படுகின்றது. இதற்குப் பெயர் வெள்ளையத்தேவர் நுழைவாயில்.

3. இதைக் கடந்து மேலும் சற்று தூரம் சென்ற பின்னர் நம்மை வரவேற்பது தானாபதிப் பிள்ளை தோரணவாயில்.

4. இதற்கு அடுத்தார் போல் சற்று தூரத்தில் அமைந்திருப்பது சுந்தரலிங்கம் தோரணவாயில்.

5. இதனைக் கடந்து மேலும் பயணித்துக் கொண்டிருக்கும் போது நம்மை வரவேற்பது வீரசக்கம்மாள் தோரணவாயில்.


இந்த ஐந்து தோரண நுழைவாயில்களையும் கடந்து செல்லும் போது சற்று தூரத்திலிருந்தே வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவுக் கோட்டை தெரிகின்றது.

இவ்வளவு அழகாக ஒரு சிறு கோட்டை போல இந்த மண்டபம் இருக்கும் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.



வீரபாண்டிய கட்டபொம்மனைக் கைது செய்து தூக்கிலிட்ட பிறகு அவர் கட்டிய மாளிகை ஆங்கிலேய அதிகாரிகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அப்பகுதி பிறகு வெறும் மணல் மேடாகக் கிடந்தது. இந்த இடத்திற்குப் பக்கத்தில் அந்த சண்டையின் போது இறந்து போன பன்னிரண்டு ஆங்கிலேய வீரர்களுக்கும் ஆங்கிலேய அரசாங்கத்தால் கல்லறை கட்டப்பட்டது. அதில் அந்த ஆங்கிலேய வீரர்களின் பெயர்கள் குறிப்புக்கள் ஆகியவை சேர்க்கப்பட்டு இப்பகுதி ஆங்கிலேயர்கள் காலத்திலேயே நல்ல முறையில் பாதுகாக்கப்பட்டு வந்தது.

போகும் வழியும் குண்டும் குழியுமாக உள்ளது.


கால தாமதம் ஆனதால் அவர் தூக்கிலிடப்பட்ட இடத்துக்குச் செல்ல முடியவில்லை.



இன்றைய நிலையில் குறைந்த அளவிலேயே சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.


மேலும் கூட்டம் குறைவாக இருப்பதால் ,இளஞ்ஜோடிகள் பணத்தை கொடுத்து

அதிக அளவில் வருகின்றனர்.

இதை அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்..இல்லையெனில் ஒரு மாவீரன் கோட்டை லாட்ஜ் ஆக மாறிவிடும்...









Animated Social Gadget - Blogger And Wordpress Tips