Blogger Widgets

அறிவிப்பு

நிரந்தரமாக இன்பத்தை அனுபவித்தவனும் இல்லை. நிரந்தரமாகத் துன்பத்தில் உழன்றவனும் இல்லை.

சேது சமுத்திரம்,சீனாவின் படையெடுப்பு





ராமர் பாலம் விவகாரம் பிரச்சினைகள் நாளுக்குநாள் பெரும் பிரச்சினையாகலாம்.பழமை விரும்பியான கலைஞர் கருணாநிதி,தமிழினக் காவலனான இவர் தொடர்ந்து மௌனம் சாதித்து வருகிறார்.
ராமர் பாலம் இருப்பதற்கான செயற்கைக்கோள் புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் நாசா வெளியிட்டும் அமெரிக்காவின் கைப்பாவையான நம் பொம்மை பிரதமரும்,சோனியாவும் ஏனோ ஏற்க மறுக்கிறார்கள்.நம் நாட்டினர்கள் சொன்னால் நம்பாத இவர்கள்
இவர்களின் முதலாளிகளான அமெரிக்கா சொல்லியும் ஏற்க மாட்டேங்குறாங்க?


இந்த சாட்சி மட்டும் போதாதாம்.நீதிமன்றத்தில் ”ராமர் பாலம் இருந்ததற்கான சாட்சி இல்லை” என்று வாதிட்டிருக்கிறார்கள்.


இதற்காக ராமர் பாலம் கட்டிய வானரங்களும்,அணிலும் தான் வரவேண்டும் சாட்சி சொல்வதற்கு.இவர்கள்
ராமர் பாலத்தின் வரலாறு சிறு குழந்தைகளுக்குக் கூடத் தெரியும்.

நம் பிரதமர் மட்டும் சொன்னதையே சொல்வாரே”எனக்குத் தெரியாதே”!....
ராமரின் கால்தடம் பதித்த கல் கூட ராமேஷ்வரத்தில் இன்னமும் சுற்றுலா செல்பவர்கள் காணலாம்.
அவர் என்ன தனக்குத்தானே பாராட்டுவிழா நடத்தி தன் கால் சின்னத்தைப் பதித்து வைத்தாரா?


வெள்ளியங்கிரி மலைப்பயணம்




கடந்த இரு வாரங்களுக்கு முன் பௌர்ணமி அன்று நானும், எனது சில நண்பர்களும் இரவில்
திடீரென வெள்ளியங்கிரி மலை செல்லலாம் என்று முடிவெடுத்தாயிற்று.
நாங்கள் முடிவெடுத்து முடிவதற்குள் மணி 8.30 ஆகிவிட்டது.(ஒரு வழியா முடிவுக்கு வந்துட்டாங்க).
“சரி கிளம்புவோம்” என்று பேருந்து நிலையம் செல்ல முற்பட்டபோதுதான் அந்த நேரத்தில் அங்கே பேருந்து இருக்காது என்று தோன்றியது.
பிறகு இரு சக்கர வாகனத்தில் செல்லலாம் என்று கிளம்பியாச்சு.ஏற்கனவே நமக்கெல்லாம் பைக் ரைடிங் போவதில் விருப்பம்.அடுத்து பெட்ரோல்,டயர்களின் நிலை,காற்று ஆகியவற்றை பரிசோதித்துவிட்டு எல்லோரும் கிளம்பினோம்.
போகும் வழியிலேயே சாப்பிட்டுவிட்டு மீண்டும் கிளம்பி ஒரு வழியா உக்கடம் பைபாஸைத் தொட்டுவிட்டோம்.

அப்போது மணி 10 ஐத் தொட்டுவிட்டது.கோவை மக்களின் பரபரப்பு கொஞ்சம் குறைந்துவிட்டுப் போயிருந்தது.
உக்கடம் தாண்டி பேரூர் செல்லும் வழியில் காவல்துறையினர் சோதனைச் சாவடியில் காவலர்கள் இருவர் “குடி”மகன்களைக் கவனித்துக் கொண்டிருந்தனர்.நாங்க மொத்தம் மூன்று பேர் ஒரு வண்டியில் சென்றதால் ,ஒருவர் சோதனைச்சாவடிக்கு முன்னரே உள்ள உணவகத்தில் இறங்கி விட்டு,பின் இன்னோருவரை சோதனைச்சாவடி தாண்டி இறக்கிவிட்டுப் பின் மீண்டும் ,அந்த உணவகத்தில் உள்ளவரை அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது.
யார் இறங்குவது என்று முடிவானபோது “நானே இறங்குகிறேன்” என்று இறங்கிக்கொண்டேன்.பின் அந்த உணவகத்தில் நின்றவாறு சோதனைசாவடியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.
இப்படி செய்ததால்தான் காவலர்களிடமிருந்து தப்பித்தோம்(செஞ்சது தப்புத்தானுங்கோ),
அப்பவும் நல்ல டிப்டாப் ஆசாமி ஒருவர் காவலர்களிடம் போதையில் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார்.பிறகு “drink and drive ” என்று புகார் எழுதி ரூ 500/- ஐ வசூல்செய்து தன் கடமையை செவ்வனே செய்துமுடித்தார்கள் அந்த இரு காவலர்களும்.


ஹிட்லரின் மறுபக்கமும் ,மரணமும்


சோவியத் ரஷ்யப்படைகள் ஜெர்மன் மீது படையெடுத்தது.ஜெர்மன் தலைநகரம் பெர்லின் மீது
சோவியத் படைகள் நிலைகொண்டு தன் வெற்றியை உறுதி செய்தது.
சோவியத் யூனியன் மீது மட்டும் ஹிட்லர் போர் தொடுக்காமல் இருந்திருந்தால் ஜெர்மனுக்கு
இந்த நிலைமை வந்திருக்காது.

1945 ஏப்ரல் 30 ஆம் தேதி அதிகாலை 2.30 மணி.ஹிட்லர் தன் மாளிகையில் உள்ள பாதாள அறையில்
தன் நண்பன் கோயபல்ஸ், மற்றும் தன் காதலி ஈவா பிரவுனுடன் பதுங்கியிருந்தார்.
தன் அறைக்கு அருகில் இருக்கும் தன் நண்பன் கோயபல்ஸை அழைத்தார் ஹிட்லர்.
ஹிட்லரின் அந்தரங்கச் செயலாளர் ப்ராஜூங்கேவுடன் இரண்டு முக்கிய ஆவணங்களை
தயார் செய்தார் ஹிட்லர்.
ஒன்று அவருடைய உயில்,மற்றொன்று அரசியல் ஏற்பாடு.உயிலை நிறைவேற்றும் பொறுப்பு மார்டின் போர்மன் என்பவரிடம் தரப்பட்டது.
1945-ம் ஆண்டு ஏப்ரல் 25-ந்தேதி பெர்லின் நகரை ரஷியப் படைகள் சூழ்ந்து கொண்டு விட்டன. விமானங்கள் குண்டு மாரிப்பொழிந்து கொண்டு இருந்தன. எந்த நேரத்திலும் ரஷியப் படைகள், பெர்லின் நகருக்குள் புகுந்து விடலாம் என்கிற நிலை. எதிரிகளிடம் யுத்தக் கைதியாகப் பிடிபட்டால் தன் நிலை என்னவாகும் என்பதை உணர்ந்தார் ஹிட்லர்.
எதிரிகளிடம் சிக்குவதற்குள் தற்கொலை செய்து கொள்வதே மேல் என்ற முடிவுக்கு வந்தார். தன் முடிவைக் காதலி ஈவாபிரவுனிடம்


சோனியா என்னும் அரக்கி,கருணா எனும் எட்டப்ப துரோகி



சேனல் 4 ஆல் வெளியிடப்பட்ட இலங்கையின் போர்க்குற்றங்கள் காணொளி பற்றி
என்ன சொல்ல?வார்த்தைகள் வரவில்லை,எழுதுவதற்கு. இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட போர்க்குற்ற காணொளி இதைவிடக் கொடுமையானது.

இதன் ஆரம்பம் எங்கே ஆரம்பித்தது,?

விடுதலைப்புலிகள் இயக்கம் 1975 ,மே 5 ஆம் நாள் தொடங்கப்பட்டது.இலங்கை விடுதலைக்குப் பிறகு மொழி,பல்கலைகழக இட ஒதுக்கீடு,தமிழர் பகுதியில் அரசுக் குடியேற்றங்கள் போன்ற காரணங்களால் தமிழர்களுக்கும்,சிங்களவர்களுக்கும் இடையே பிரச்சினை உருவெடுத்தது.
இலங்கை அரசுகளின் தமிழர் தொடர்பான கொள்கைகளால் விரக்தியுற்ற பல இளைஞர்களை கவர்ந்து வந்தது. தொடக்கத்தில் இலங்கை காவல் துறையினர், மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகள் போன்ற இலங்கை அரசின் மீது சிறிய அளவிலான தாக்குதல்களை நடத்தி வந்தனர்
.
1975 ஆம் ஆண்டு யாழ் நகர முதல்வர் ஆல்பிரெட் துரையப்பா சுட்டுக் கொலை செய்யப்பட்டது புலிகளால் செய்யப்பட்ட முக்கிய தாக்குதலாக கொள்ளப்படுகிறது.பின் 1984 ல் சிதறி இருந்த இயக்கமாக இருந்த தமிழர் இயக்கங்கள் ஒன்றானது.

இந்திய ராணுவம் மூக்கை நுழைத்தது:

தமிழ்நாட்டில் ஈழத்திற்கு ஆதரவு பெருகியதால் இந்திய ராணுவம் யாழ்ப்பாணத்தில் உணவுப்பொட்டலங்களை வான்வழி வீசியதன் மூலம் இலங்கையின் உள்நாட்டுப் போரில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஒன்றிணைந்தனர் இரு நாட்டு ராணுவத்தினரும். 1987 ல் நடந்த ஒப்பந்தத்தின்படி ஈழப்போராளிகள் ஆயுதங்களை விட்டு சரணடைய இந்திய இலங்கை கூட்டுப் படைகள் அறிவித்தன.
ஆனால் போராளிகள் அதற்கு படியாமல், அக்டோபர் 8 ல் புலிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 8 இந்திய ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். ராஜீவ் காந்தி கொலை செய்யக் காரணமும் இந்த ராணுவத்தினரின் அத்துமீறலால்தான்.
இதன்பிறகு பல தாக்குதல்கள் நடைபெற்று ராணுவத்தினரும்,புலிகளும் ப்ல்லாயிரக்கணக்கானோர் மாண்டு போயினர்.

2005 தேர்தல் .இலங்கையின் வடகிழக்கில் புலிகளால் தேர்தல் புறக்கணிக்கப்பட்டதால் கொடுங்கோலன் ராஜபக்‌ஷே சிறிதளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிபராய் பொறுப்பேற்றார்,.புலிகள்
தேர்தலைப் புறக்கணித்ததால் தான் ராஜபக்‌ஷேவால் வெற்றி பெற முடிந்தது.தன் தலையில் தானே மண்ணை வாரித் தூற்றிக்கொண்டனர் புலிகள்.

இடைப்பட்ட காலங்களில் புலிகளின் சிறு சிறு தவறுகளால் வந்த வினைகள்தான் சேனல் 4 ன் இந்த வீடியோக் காட்சிகள்.
கருணா எனும் இந்த எட்டப்பன் புலிகளின் இயக்கத்திலிருந்து பிரிந்து


கத்ரீனா எங்கே?-க்ரவுனுக்கு அண்டர்,



தொலைக்காட்சிகளில் இப்பொழுதெல்லாம் விளம்பரங்களின் ஆக்கிரமிப்புதான்.
10 நிமிடத்துக்கு ஒரு முறை விளம்பரங்கள்தான்.சரி இருந்துட்டுப் போகட்டும்.

இதைவிடக் காமெடி தொலைபேசி வழி நேரடி ஒளிபரப்பில் நம்மாளுக அரைமணி
நேரம் காத்திருந்து ,சரி லைன் கெடச்சு ”ஹலோ!நான் இன்னார் பேசறேன்.”
அப்படீன்னு சொல்லி முடிப்பதற்குள் அவளும் தங்கிலீஸ்ல,
“ஹலோ!யார் பேசறீங்க,சரியா ”கேக்கலை,உங்க டி.வி. வால்யூமக் கம்மி
பண்ணுங்க!”,இது தொகுப்பாளினி.
நம்மாளும் அசடு வழிஞ்சுட்டே ”நாந்தான் பேசறேன்,நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க,உங்க
வாய்ஸ் ரொம்ப ஸ்வீட்டா இருக்கு”அப்படீங்குவார்.
அவ என்னமோ தெருவுல போற பன்னிக்குட்டிய சொன்னமாதிரி


ட்ராவிட் ஓய்வு முடிவு! நிர்பந்திக்கப்பட்டாரா?



ராகுல் ட்ராவிட் (THE GREAT WALL OF INDIAN CRICKET) ஓய்வு முடிவை இன்று

அறிவித்துவிட்டார்.ஏற்கனவே இவருடன் அறிமுகமான வெற்றிக் கேப்டனான தாதா சவ்ரவ் கங்குலி

சதம் அடித்துவிட்டுத் தன் ஓய்வு முடிவை அறிவித்தார்.

இப்பொழுது ராகுல் ட்ராவிட்டும் தன் ஓய்வு பற்றி அறிவித்துவிட்டார்.

ஆட்ட்த்தில் வெற்றி தோல்வி வரும்,போகும்.ஆனால் சிறந்த வீரர்கள்


கிடைப்பது என்பது வருடக் கணக்கில் காத்திருக்க வேண்டும்,.

ஆஸ்த்ரேலியா தொடரில் சரியாக விளையாடவில்லைஎன்று

ச்ச்சின்,ட்ராவிட்,லஷ்மண் ஆகிய 3 சீனியர் வீரர்கள் மீதுதான்

இந்திய மீடியாக்களின் குற்றச்சாட்டு.

ஏன் இந்த 3 பேர் மட்டும்தான் வீரர்களா? மற்ற வீரர்களுக்கு விளையாடுவதைத் தவிர

வேறென்ன வேலை?

ஏன் இதே சீனியர் வீரர்கள் பல முறை அணியை வெற்றி பெறச் செய்திருக்கிறார்களே?

அப்போதெல்லாம் தலையில் வைத்துக் கொண்டாடிய இந்திய மீடியாக்கள்,


அவர்கள் சரியாக விளையாடாத நேரங்களில் அவர்களுக்கு ஆறுதல்,உற்சாகம்

தராவிடினும்,மன நெருக்கடி தராமலாவது இருக்க வேண்டும்.

ஓய்வு பெற வேண்டும், ஓய்வு பெற வேண்டும்என்று தொடர்ந்து செய்தி ஒளிபரப்பினார்கள்.

ஒருவரின் ஓய்வு முடிவு அந்த வீரரின் விருப்பமாக இருக்க வேண்டுமே தவிர,

மற்றவர்கள் நிர்பந்தம் செய்யக்கூடாது.

ராகுல் ட்ராவிட்டின் இந்த முடிவு அவரின் விருப்பம் இல்லை,.



டவுன் பஸ்




பல நாட்களாகவே இந்த அனுபவத்தைப் பதிவிடனும்
என்றிருந்தேன்,காலம் கிடைக்காத பணிதான் காரணம்.(வெட்டியாய் இருப்பதற்கு
இவ்வளவு பில்டப்னு சொல்றது கேக்குது).
நம்மில் பலருக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டிருக்க வேண்டும்.

பேருந்தில் பயணம் செல்வது என்பது ஒரு இனிமையான நிகழ்வுதான்.அதுவும் ஜன்னலோர
இருக்கையில் அமர்ந்து பயணிப்பது ,விவரிக்க முடியாத ஒரு இன்பத்தைத் தரும்.மரங்களும்,கரண்ட் கம்பங்களும் நம்மை விட்டு வேகமாய் விலகி செல்லும்.

நான் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த காலத்தில், நகரப் பேருந்துகள்தான் வரும் .நான் வசிக்கும்
கிராமத்திற்குபேருந்து வசதி கிடையாது.அருகிலுள்ள ஊருக்குத்தான் ஓரிரு நகரப்பேருந்துகள்
மட்டுமே வந்து செல்லும்.அது ஒரு கிராமத்துப் பேருந்து என்றுதான் சொல்லவேண்டும்.

எங்களூரிலிருந்து சுமார் 2கி.மீ. நடந்து சென்றுதான் அருகிலுள்ள ஊரில் பஸ் பிடித்துச் செல்லவேண்டும்,.
அதுவும் அந்தப் பேருந்து வரும் நேரத்தைவைத்துத் தான் மணி இவ்வளவு என்று
பிள்ளையார் மரத்தடி பெருசுக கணக்கிட்டுக் கொள்வார்கள்.

மதிய நேரம் தேர்வு எழுதச்செல்லும் நாட்களில் பஸ்ஸ்டாப்பை அடையும் முன்னரே பஸ்
வந்து நின்று கொண்டிருக்கும்.
ஓட்டுனரும்,நடத்துனரும் பிள்ளையார் கோவிலினுள் உட்கார்ந்துசாப்பிட்டுவிட்டு
செய்த்திதாள் படித்துக் கொண்டிருப்பார்கள்.அதற்குள் வரவேண்டியவர்கள்
வந்துவிட பேருந்தும் புகையைக் கக்கிகொண்டு புறப்படும்.

சீட்களில் பேர்
எழுதுவதும்,


Animated Social Gadget - Blogger And Wordpress Tips