Blogger Widgets

அறிவிப்பு

நிரந்தரமாக இன்பத்தை அனுபவித்தவனும் இல்லை. நிரந்தரமாகத் துன்பத்தில் உழன்றவனும் இல்லை.
Showing posts with label தத்துவங்கள். Show all posts
Showing posts with label தத்துவங்கள். Show all posts

கண்ணதாசனின் ரகசியங்‌கள்


வெள்ளம் பெருகும் நதிகளும் ஒருமுறை வறண்டு விடுகிறது.குளங்கள் கோடையில் வற்றி மழைக்காலத்தில் நிரம்புகின்றன.
நிலங்கள் வறண்ட பின்தான் பசுமையடைகின்றன.
மரங்கள் இலையுதிர்ந்து பின் தளிர் விடுகின்றன.
இறைவனின் நியதியில் நிரந்தரமாக வாழ்ந்து கொண்டிருப்பது மலை ஒன்றுதான்.
அதுவும் வளர்வதாகவும், அமிழ்வதாகவும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
இறைவன் மனிதனையும் அப்படித்தான் வைக்கிறான்.

நிரந்தரமாக இன்பத்தை அனுபவித்தவனும் இல்லை. நிரந்தரமாகத் துன்பத்தில் உழன்றவனும் இல்லை.
முதற்கட்டம் வரவு என்றால், அடுத்தக் கட்டம் செலவு.
முதற்கட்டம் இன்பமென்றால், அடுத்தக்கட்டம் துன்பம்.
முதற்கட்டமே துன்பமென்றால், அடுத்த கட்டம் இன்பம் இறைவனது தராசில் இரண்டு தட்டுக்களும் ஏறி ஏறி இறங்குகின்றன.



கூழாங்கல்

ஒரு நாள் ஒருவன் அவன் வீட்டுப் பரணைச் சுத்தம் செய்து கொண்டிருந்தான். அப்போது அதுவரை அவன் கவனித்திராத ஒரு புத்தகத்தைக் கண்டெடுத்தான்.
அது ஒரு மிகப் பழைய புத்தகம். பக்கங்கள் மஞ்சள் படிந்து மடித்துப் போயிருந்தன. பக்கங்களைத் திருப்புகையில் மிகக் கவனம் தேவையிருந்தது. இல்லாவிட்டால் பக்கங்கள் உதிரத் தொடங்கின.
அவன் அந்தப் புத்தகம் மந்திர மாயங்களைப் பற்றியது என்று அறிந்து கொண்டான். எத்தனையோ முறை படிக்க முயன்றும் அவன் ஒரே ஒரு பத்தியில் உள்ள கருத்தை மட்டும் தெரிந்து கொள்ள முடிந்தது. மற்றவை அவனுக்குப் புரியவில்லை.


அந்தப் பத்தியில் கருங்கடற்கரையில் கிடக்கும் மாய சக்தி மிக்க ஒரு கறுப்புக் கூழாங்கல்லைப் பற்றிச் சொல்லப்பட்டிருந்தது. அந்தக் கல்லால் எதைத் தொட்டாலும் அதைத் தங்கமாக மாற்றி விடும். அந்தக் கல்லை எப்படிக் கண்டு கொள்வது


மங்குனி அமைச்சர்?



1948 வாக்கில் நடந்த சம்பவம் இது:

ஒரு முறை ரயில்வே இலாகாவில் சரக்கு வேன்களுக்கு பற்றாக்குறை நிலவியது.
தகுதி அடிப்படையில் முன்னுரிமை வழங்க ரயில்வே அமைச்சகம் முடிவெடுத்தது.
ஒரு தனியார் நிறுவனம் 50 வேன்களுக்கு ஒப்புதல் கோரியது.
ஆனால் அதில் ஒரு சிக்கல்,அது 50 வேன்களுக்கு ஒரு வேனுக்கு
ரூ 1000/- வீதம் 50 ஆயிரம் தர வேண்டும்.

அந்த நிறுவனமும் லஞ்சப் பணத்தைக் கொடுக்க ஒப்புக் கொண்டு முன்பணமாக ரூ 22 ஆயிரம் அமைச்சருக்கு கொடுத்தது.
கோப்பில் அமைச்சரும் "Approved" என்று எழுதிக் கையொப்பமிட்டார்.
கையெழுத்தானதை அறிந்த அந்நிறுவனம் மீதிப்பணத்தை தராமல் போக்குக் காட்டியது.
இதையறிந்த நம் அமைச்சர் சும்மா விடுவாரா?


அழகும் ஆபத்தும்


ஒரு கையால்

எழுதிக்கொண்டே

இன்னோரு கையால்

கூந்தலைக் கோதி

கொ(ல்லு)ள்ளும்

ஓவியம் நீ......

விரல்களில் சிக்கிக்

கொண்டு மீள

முடியாமல் தவிக்கும்

பேனாவைப் போல்

உன் விழியில்

அகப்பட்ட நானும்

தவிக்கிறேன்.....

தூண்டில் மீன் போல்.



நகைகள் அழகுதான்

நீ அணிந்திருப்பதால்








(பி.கு)சில தவிர்க்க முடியாத காரணத்தால் பதிவிட முடியவில்லை.

இதோ மீண்டும் வந்தாச்சு......இனி ஒரு பயலும் நிம்மதியா இருக்க முடியாது.




மனிதனைக் கெடுப்பவை இவைகள்!

மனிதர்களைக் கெடுப்பவை இவை மூன்றும் தான்:

1. மறதி

2. மடி (சோம்பல்)

3. துயில் (தூக்கம்)

முதலில்” “மறதியைப் பற்றி:

நான் யார்?என்ற ஞாபகம் இல்லாமை.அதனால்தான் உடம்பாகிய கூட்டை

தானாகவே எண்ணிக்கொண்டோம்.ஐம்புலன்களால் உலகை

அனுபவிக்க அலைகிறோம்.கணநேரம் தோன்றும் வானவில் போன்ற வாழ்க்கைக்கு

மனம் அலைகிறது,. நிரந்தரமற்றதை நிரந்தரமாக்க எண்ணுகிறோம்..

அப்போதைக்குக் கிடைக்கும் அற்ப சுகத்துக்காக பேராசையில் பெரிதாகப்

பாடுபட்டு அயர்ச்சி அடைகிறோம், ஆன்மாவை மறந்தோம்.இதிலெங்கே

இறைவனவனை நினைப்பது.அதனாலே சம்சாரத்தில் வீழ்கிறோம்,

ஆசை என்ற சங்கிலியால் பிண்ணிப் பிணைக்கப்பட்டுள்ளோம்.

ஆனால் மறதியும் வேண்டும்,ஆனாலும் மறதி மட்டும் இல்லையெனில் இன்று நம்மில் பலர்

பைத்தியமாக அலைய வேண்டியிருக்கும். மறதியே வாழ்க்கையாகக் கூடாது.

ஏனெனில்”” “அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சல்லவா?

அடுத்து “மடிஎன்னும் சோம்பல் பற்றி:

செயலில்லாமல் முடங்கிக் கிடத்தல் ஒருவனைக் கெடுக்கிறது. செயலூக்கமில்லா

நிலையும்,செத்த நிலையும் ஒன்றே.பொறுமை என்ற பெயரில்,

சகிப்புத்தன்மை என்ற சாக்கில், இன்றும் பலர் செயல்படாமல் தங்களின் திறமைக்கு

சாவு மணி அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.போதை வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

கேட்டால் சமாதான புறாக்களை பறக்க விடுவதாகச் சொல்லிக்கொண்டு சாம்ராஜ்யங்களைக் கோட்டை



ஆடம்பரம் ஆபத்து


ஒரு முறை மன்னன் நெப்போலியனுக்குச் (நம்ம நடிகரில்லீங்க)

செல்வந்தர்கள் ஒரு பெரிய விருந்து வைத்தார்கள்.

ஒரு பெண்மணி விலையுயர்ந்த நகைகளைத் தலை முதல்

பாதம் வரை அணிந்திருந்தாள்.

அந்தக் கூட்டத்திலேயே அதிகமான நகை அணிந்தவள் அவள்தான்.

எல்லோர் பார்வையும் அவளின் நகைகள் மீதே விழுந்தது.

நெப்போலியனும் அவளைப் பார்த்துவிட்டு

தன் மெய்க்காப்பாளனிடம்யார் இந்தப் பெண்?என்று கேட்டார்.

அதற்கு அவன் “இவர் புகையிலை வியாபாரியின் மனைவி”,

என்று பதிலளித்தான்.

மறுநாளே நெப்போலியன் “புகையிலை

தொடர்பான வியாபாரங்கள் அனைத்தும் அரசுடமை ஆக்கப்படும்என்று சட்டம் கொண்டு வந்தார்.

(எதுக்கு இந்த விளம்பரம்,அளவாக நகையைப் போட வேண்டியதுதானெ!),..


உடம்பு சரியில்லேன்னாலும் உங்களையெல்லாம்

நிம்மதியா இருக்க விடக்கூடாதுன்னுதான் இந்த

ஒரு சின்ன தத்துவமான கதை(ஹி,ஹி....)



Animated Social Gadget - Blogger And Wordpress Tips