Blogger Widgets

அறிவிப்பு

நிரந்தரமாக இன்பத்தை அனுபவித்தவனும் இல்லை. நிரந்தரமாகத் துன்பத்தில் உழன்றவனும் இல்லை.

இழந்துபோன இன்பங்கள்-பகுதி 1

இன்றைய வெளிநாட்டு மோக வாழ்க்கையில், நாம் ஒரு இயந்திர வாழ்க்கைதான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
நம் தமிழர்மரபுகள் பல மறக்கப்பட்டு விட்டன,ஏன் மறக்கடிக்கப்பட்டது என்றே சொல்லலாம்.
முந்தைய காலகட்டங்களில்  மக்கள் பலதுறைகளில் கைதேர்ந்தவர்களாய் இருந்தார்கள்.இப்போது இருக்கும் நாமோ ஒரு துறையினையே நல்ல முறையில் கற்று தேர்வதில்லை.அது போக நமக்கு அனுபவ அறிவும் போதவில்லை.




உறவுகளுடன் பேசுவது கூட இல்லை.
அப்படியும் யாராவது நம் வீட்டிற்கு வந்தால்,ஓரிரு வார்த்தைகளில் பதில்,
சாப்பிடக் கூட கூப்பிடுவதில்லை.
செல்லிடபேசியினை வைத்துக் கொண்டு ஒன்றும் செய்யாமலே “லாக்”
எடுப்பது,பின் மீண்டும் சட்டைப் பையில் வைத்துக் கொள்வது.
ஆங்கில மோகத்தில் தமிழைக்  கூட இழந்து கொண்டிருக்கிறோம்.சோம்பேறிகளாய்த் திரிகிறோம்.
கோவில் விழா,தீபாவளி,பொங்கல் என்றால் முன்பெல்லாம் அந்த பரபரப்பு ஒரு வாரத்திற்கு முன்னேயே தொற்றிக்கொள்ளும்,.
அந்த ஒரு வாரம் கூட ஒரு வருடம் மாதிரி நகரும்.
ஆனால் இப்போது ?
ஒரு நாள் விடுமுறை என்று தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டு படுத்திருக்கிறோம்.



இப்படி எத்தனை இல்லைகள்.என்ன காரணம்........அடுத்த பதிவில்....


0 comments:

Post a Comment

Animated Social Gadget - Blogger And Wordpress Tips