Blogger Widgets

அறிவிப்பு

நிரந்தரமாக இன்பத்தை அனுபவித்தவனும் இல்லை. நிரந்தரமாகத் துன்பத்தில் உழன்றவனும் இல்லை.

ட்ராவிட் ஓய்வு முடிவு! நிர்பந்திக்கப்பட்டாரா?



ராகுல் ட்ராவிட் (THE GREAT WALL OF INDIAN CRICKET) ஓய்வு முடிவை இன்று

அறிவித்துவிட்டார்.ஏற்கனவே இவருடன் அறிமுகமான வெற்றிக் கேப்டனான தாதா சவ்ரவ் கங்குலி

சதம் அடித்துவிட்டுத் தன் ஓய்வு முடிவை அறிவித்தார்.

இப்பொழுது ராகுல் ட்ராவிட்டும் தன் ஓய்வு பற்றி அறிவித்துவிட்டார்.

ஆட்ட்த்தில் வெற்றி தோல்வி வரும்,போகும்.ஆனால் சிறந்த வீரர்கள்


கிடைப்பது என்பது வருடக் கணக்கில் காத்திருக்க வேண்டும்,.

ஆஸ்த்ரேலியா தொடரில் சரியாக விளையாடவில்லைஎன்று

ச்ச்சின்,ட்ராவிட்,லஷ்மண் ஆகிய 3 சீனியர் வீரர்கள் மீதுதான்

இந்திய மீடியாக்களின் குற்றச்சாட்டு.

ஏன் இந்த 3 பேர் மட்டும்தான் வீரர்களா? மற்ற வீரர்களுக்கு விளையாடுவதைத் தவிர

வேறென்ன வேலை?

ஏன் இதே சீனியர் வீரர்கள் பல முறை அணியை வெற்றி பெறச் செய்திருக்கிறார்களே?

அப்போதெல்லாம் தலையில் வைத்துக் கொண்டாடிய இந்திய மீடியாக்கள்,


அவர்கள் சரியாக விளையாடாத நேரங்களில் அவர்களுக்கு ஆறுதல்,உற்சாகம்

தராவிடினும்,மன நெருக்கடி தராமலாவது இருக்க வேண்டும்.

ஓய்வு பெற வேண்டும், ஓய்வு பெற வேண்டும்என்று தொடர்ந்து செய்தி ஒளிபரப்பினார்கள்.

ஒருவரின் ஓய்வு முடிவு அந்த வீரரின் விருப்பமாக இருக்க வேண்டுமே தவிர,

மற்றவர்கள் நிர்பந்தம் செய்யக்கூடாது.

ராகுல் ட்ராவிட்டின் இந்த முடிவு அவரின் விருப்பம் இல்லை,.

மீடியாக்கள், மற்றும் கிரிக்கெட் நிர்வாகிகள் சிலரின் நிர்பந்தம்.

ஆனால் ராகுல் ட்ராவிட் தன் நிலைமையை வெளியே சொல்ல முடியாமல்

மௌனம் காக்கிறார்.உண்மையைச் சொல்ல்லாமா?,வேண்டாமா? என்றுதொடர்ந்து மதிற்மேற் பூனை

போல் இருக்கிறார் இந்த சுவர்.ஆனால் அவர் மௌனம் கலைத்தால் பலரின் முகமூடிகள் விலகும்.

அவரின் இந்த முடிவு சிலருக்கு மகிழ்ச்சியே,ஆனால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு

சோகமான ஒரு நிகழ்வு.

இந்த நேரத்தில் தன் ஓய்வு அறிவித்து உண்மையிலேயே தான் ஒரு

“சிறந்த சுவர்என்று நிரூபித்துவிட்டார்.


இருக்கும் போது அதன் அருமை புரியாமல் நாம் உதாசீனப் படுத்துகிறோம்,.பின் “அய்யோ!போச்சே!

என்று அழுது புரண்டால் மட்டும்,திரும்பி வரவா போகிறது.கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம்”.

ராகுல் ட்ராவிட்டின் விஷயத்திலும் அப்படித்தான் நடந்திருக்கிறது.

இனி ராகுல் ட்ராவிட் விளையாடப்போவதில்லை

.இனி யாராவது இப்படி கிடைப்பதும் அரிது.


சச்சின்,லஷ்மண் விஷயத்திலாவது,ஓய்வு முடிவு அவர்கள் எடுப்பதாக இருக்கட்டும்.அவர்களின் ஓய்வு

முடிவுக்கும் காரணமாக நம் மீடியாக்களும்,சில பணத்தாசை பிடித்த கிரிக்கெட் சங்க நிர்வாகிகளுமாக

இருக்கக் கூடாது.



0 comments:

Post a Comment

Animated Social Gadget - Blogger And Wordpress Tips