Blogger Widgets

அறிவிப்பு

நிரந்தரமாக இன்பத்தை அனுபவித்தவனும் இல்லை. நிரந்தரமாகத் துன்பத்தில் உழன்றவனும் இல்லை.

உக்காந்து யோசிப்பாங்களோ?



ஒருநாள், மிஸ்டர்.மொக்கை குளக்கரையில் அமர்ந்திருந்தார்.. குளத்தினுள்
செங்கற்களைத் தூக்கிப்போட்டுவிட்டு அது ஏற்படுத்தும் அலைகளை
ஆழக்கவனித்தவாறு
சிந்தித்துக்கொண்டிருந்தார்.
அவ்வழியே போன ஒருவர் இதுகுறித்து விசாரிக்க.. மொக்கையார் மொழிந்தார்..
புரட்சிகரமான ஆராய்ச்சி முயற்சியில் இருக்கிறேன்..
புரட்சிகரமான ஆராய்ச்சியா..? அடடே.. சபாஷ்..! அப்படியென்ன ஆராய்ச்சி
அது..?
நான் செவ்வக வடிவமான கற்களை குளத்தினுள் எறிகிறேன்.. ஆனால் அது வட்ட
வடிவமான
அலைகளை ஏற்படுத்துகிறதே.. எப்படி..? இதுகுறித்துதான் ஆராய்கிறேன்..!!!
_____________________________________________________*
*_________________*
*இந்தாப்பா ராப்பிச்சை.. ரெண்டு நாளா வீட்டுக்காரர் ஊர்லே இல்ல. ரசம்தான்
வச்சேன்.. வாங்கிட்டு போறியா..?
மவராசன் சமைச்சது இல்லியா.. சரி போடு தாயி.. போற உசுரு எப்படிப் போனா என்ன..?*
*_________________*
*ஒருவன் பழைய கட்டிடத்தினூடே சென்று கொண்டிருந்தான்..
அப்போது " அப்படியே நில்.. அசையாதே.." என்று ஒரு சத்தம். ஆனால் எங்கிருந்து
வந்தது எனத் தெரியவில்லை.. என்றாலும் அசையாமல் நிற்க, அவன் போகவிருந்த வழியில்
ஒரு சுவர் இடிந்து விழுந்தது. இவன் நிம்மதிப் பெருமூச்சு விட்டான்..
மற்றொரு நாள்.. பேர்ந்தில் ஏறப் போனபோது மீண்டும் அதே குரல்.. " இந்த பேருந்து
வேண்டாம்..". அவனும் அதைத் தவிர்த்து அடுத்த பேருந்தில் செல்லும்போது இவன்
சென்றிருக்கவேண்டிய பேருந்து கவிழ்ந்திருப்பதைப் பார்த்தான்..
மிகவும் ஆச்சரியத்துக்குள்ளானவனாய், யார் என்னை ஒவ்வொருமுறையும்
காப்பாற்றுவது..?" என நினைத்தான்..
அதற்கும் உடனடியாக பதில் வந்தது.." நான் உன்
காவல் தெய்வம்".
இவன் அடுத்தபடியாக கேட்டான்,,
"ஓ காவல் தெய்வமே... என் கல்யாணத்தப்ப எங்கே போய்த் தொலைஞ்சே..?"*
*_________________*
*நயாகரா நீர்வீழ்ச்சி அருகே சுற்றுலா பயணிகளிடம்..ஒரு வழிகாட்டி சொல்கிறார்...
"இதுவே உலகின் மிகப்பெரிய அருவி.. இதன் ஓசை அளவிட முடியாதது.. ஒரே நேரத்தில் 20
அதிவேக விமானங்கள் எழுப்பும் ஒலியைவிட அதிகமானது.. அம்மணிகளே.. சற்று அமைதியாக
இருங்கள்.. அருவியின் ஓசையை நன்கு கேட்கலாம்...!!!"*
*_________________*
**
*அமெரிக்கன் சொன்னான்.. எங்க நாட்டுல ஒருத்தன் கிட்டேருந்து கிட்னியை எடுத்து
இன்னொருத்தனுக்கு வைப்போம்.. அவன் 2 மாசத்துல வேலை செய்ய ஆரம்பிச்சுடுவான்...!
ரஷ்யன் சொன்னான்.. எங்க நாட்டுல ஒருத்தன் கிட்டேயிருந்து பாதி ஈரலை எடுத்து
இன்னொருத்தனுக்கு வைப்போம்.. ரெண்டு பேருமே 1 மாசத்திலே வேலை செய்ய
ஆரம்பிச்சுடுவாங்க.. தெரியுமா..?
இந்தியன் சொன்னான்.. பூ... இதென்ன பிரமாதம்..? நாங்க ஒண்ணுத்துக்கும் ஆகாத
ஒருத்தனை தூக்கி பார்லிமெண்ட்லே வைப்போம்.. உடனே மொத்த இந்தியாவும் அவன்
சொல்றபடி வேலை செய்ய ஆரம்பிச்சுடும்..! இதுக்கு என்ன சொல்லுறீங்க..?*
*_________________*
**
*ஒரு இந்திய விவசாயியும் பாகிஸ்தான் விவசாயியும் சந்தித்துக் கொண்டார்கள்..
இந்தியர் தன் வயலைச் சுற்றிக் காட்டினார்.. பாகிஸ்தானி சொன்னார்..
என்னுடைய வயலை காரில் சுற்றிப் பார்க்க ஒரு முழுநாள் தேவைப்படும்..
இந்தியர் சொன்னார்..
" என்கிட்டேயும் அது மாதிரி ஒரு ஓட்டைக் கார் இருந்தது. பழைய இரும்புக்கு
போட்டுட்டேன்,,!*


-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------



tamil cartoon

tamil cartoon
நேயர்களே, பால், பெட்ரோல், மின்சாரம், பேருந்து கட்டண விலையுயர்வு வாரத்தை முன்னிட்டு நம் குடிமகன் தொலைக்காட்சியில்…
அ. இலவசங்களை வாரி வாரி வழங்கி உழைத்து உண்ண நினைக்கும் தமிழக மக்களை சோம்பேறிகளை மாற்றியதில் யாருக்கு அதிக பங்கு? ஜெயலலிதாவுக்கா? கருணாநிதிக்கா? சாலமன் பாப்பையா தலைமையில் சிந்திக்க வைக்கும் பட்டிமன்றம். வரும் ஞாயிறு அன்று காலை 11.30 மணிக்கு.
ஆ. ஊழலில் விஞ்சி நிற்பது ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் குழுவா? கருணாநிதி, கனிமொழி, இராசா, சிதம்பரம் குழுவா? திண்டுக்கல் ஐ. லியோனி தலைமையில் சிரிக்க வைக்கும் பட்டிமன்றம். ஞாயிறு பிற்பகல் 2.00 மணிக்கு.
இந்நிகழ்ச்சிகளை உங்களுக்காக இணைந்து வழங்குபவர்கள்.
a. அபேஸ் இன்சூரன்ஸ் (சாகும் போதும் செத்த பிறகும்)
b. அய்த்தலக்கா பேங்க்
c. டாஸ்மாக் நற்பணி மன்றம்
d. பாய்சன் ரெஸ்டாரன்ட் a/c
e. மன்மோகன் சிங், சோனியா காந்தியின் பெட்ரோல் விலையேற்றம் Pvt Ltd., (ஸ்வீட் எடு, கொண்டாடு)
f. கொள்ளையன் பொறியியல் கல்லூரி.
நேயர்களே நிகழ்ச்சிகள் அனைத்தையும் பாருங்கள்! தெருத்தெருவாய் பிச்சையெடுங்கள்!


1 comment:

Animated Social Gadget - Blogger And Wordpress Tips