Blogger Widgets

அறிவிப்பு

நிரந்தரமாக இன்பத்தை அனுபவித்தவனும் இல்லை. நிரந்தரமாகத் துன்பத்தில் உழன்றவனும் இல்லை.

கவிதையும் பேசும்


நடிகை:

----------------

அந்தப்

பிரபல நடிகையின்

பொன்மேனி

புழுக்கம் தாங்காமல்

வியர்த்துக்

கொட்டியது.......

காரணம்!

அவளைச் சுற்றி

ஆயிரமாயிரம் விசிறிகள்.

---------------------------


காதலியிடம்:

-------------

உன் நீள்முடியை

இங்கிருந்தே

என் நினைவுச் சீப்புகளால்

நீ(சீ)வி விட்டு

அதில் எத்தனை முறை நான்

எண்ண மலர்களைச்

செருகியிருக்கிறேன்!.

-------------------------------------

இருட்டில் உடன் வரா நிழல்கள்:

----(தலைப்பே ஒரு கவிதை மாதிரி இருக்கு

)-----

ரயில்கள் மட்டுமல்ல

மனிதர்களும் தான்

ஓடத் தொடங்குகிறார்கள்.!!கை இறங்கியவுடன்-நம்

கை இறங்கியவுடன்

------------------------------

மெல்லிசை மன்னர் M.S.V பற்றி

----------------------------

உன்னிடம்

அடகு வைக்கப்பட்ட

ஆயிரமாயிரம் காதுகள்

இன்னமும் மீட்கப்படாமலேயே

இருக்கின்றன.

(கவிஞர் வாலியின் “பொய்க்கால் குதிரைகள்கவிதைத் தொகுப்பிலிருந்து)

----------------------------------------

தன் காதலியை இன்னோரு ஆடவனுடன் கைகோர்க்கும் கல்யாணக் காட்சியினை பார்க்கும் காதலன் சொல்வது:

அன்றைக்குச் செத்து

விழுந்ததுதான்

இந்தக் காதல்!

தூக்கிக் கொண்டு

இன்னமும்

மரண ஊர்வலம்

நடத்துகிறேன்—

புதைக்க மனமில்லை,

எரிக்கவும் வழியில்லை!

(சதாசிவத்தின் “இன்னும் ஒரு மகரந்தம்கவிதைத் தொகுப்பிலிருந்து.)......................
அடுத்த பதிவில்...............


0 comments:

Post a Comment

Animated Social Gadget - Blogger And Wordpress Tips