Blogger Widgets

அறிவிப்பு

நிரந்தரமாக இன்பத்தை அனுபவித்தவனும் இல்லை. நிரந்தரமாகத் துன்பத்தில் உழன்றவனும் இல்லை.

நம்புங்கள், நாம் தமிழர்தாம்!!!!





தமிழர் திருநாளாம்

பொங்கல்!

சொல்லிக்கொள்கிறார்கள்,


இயந்திர வாழ்க்கையில்

மறந்தே போய்விட்டொம்,

மாட்டையும் பொங்கலையும்,




காலையில் குளித்து

புத்தாடையுடுத்தி போலிப்புன்னகையில்

வாழ்த்துக்கள் சொல்லிக்கொ(ல்)ள்கிறோம்,



கோவில் செல்வோம்!,

தொலைக்காட்சி முன்பே படுத்துக்கிடக்கிறோம்!

புதுப் படங்கள் பார்க்கப் போகிறோம்,

காலம் ஓடுது, நாமும் ஓடுரோம்!



நிற்பதற்க்கும் நேரமில்லை,

நிதானித்தும் பார்க்கப்போவதுமில்லை,

பந்தமும் பாசமும் பொய்யாகிப்போச்சு!


காதலர்தினமும், முட்டாள்கள் தினமும்

பண்டிகையாகிப்போயின!

பிட்ஸாவும், பிரெட்டும் ,

உணவாகிப்போனது!.


மாடு சொல்லுது”அம்மா”ன்னு

தமிழர் மழலைங்க சொல்றாங்க ”மம்மி”ன்னு,

சொன்னாத்தானே பெருமை!



ஆடுபுலி ஆட்டமும்,கில்லியும்

இப்போ கிரிக்கெட்டும்,செஸ்ஸுமா மாறிப்போச்சு!,


நாம் வாழுறது அக்கம் பக்கத்துகாரங்களுக்கும்,

உறவுகளுக்கும் தானே!

நம் வாழ்க்கை நமக்காக இல்லை,நாலு பேருக்காகத்தான்!



தமிழர் பண்டிகைகள் இனிமேல் வளரும்!

நாம் கலாச்சாரத்தில் பின்பற்றும்

மேற்க்கத்தியர்கள் நம்மைப்

பின்பற்றுவதால்!

நம்புங்கள் நாம் தமிழர்தாம்!,,,





நல்லவேளை நாம் மறக்கவில்லை,

பொங்கலும்,தீபாவளியும்,

மறந்திருப்போம்,,,,,,,,,

விடுமுறையும், போனஸும் இல்லாதிருந்தால்!.



2 comments:

  1. kandipa solgiren marathi enbathu manath uvaithal thai maranthu nattai pirinthu paithiyamagathan allaiya vendum valga'"""" thamiz""""

    ReplyDelete
  2. அன்பு நண்பர் மாயதிரையன் அவர்களுக்கு வணக்கம்

    கோவை திருப்பூர் பொள்ளாச்சி மற்றும் பல்லடம் ஆகிய ஊர்களில் இருந்து
    பதிவுலகிலும் முகநூல் மற்றும் டிவிட்டரில் எழுதி வரும் தாங்களும் தங்களின்
    நண்பர்களையும் குழுமத்தில் இணைக்கலாம்.

    விரைவில் கோவையில் கலந்துரையாடல் நடக்க உள்ளது...

    kovaibloggers@gmail.com என்கிற மெயில் முகவரியில் தங்கள் மெயில் முகவரியை பதிவு செய்யவும்

    உங்களின் தனிப்பட்ட ரகசியங்கள் காக்கப்படும்(புகைப்படம், தொலைபேசி எண்)


    குழுமத்திற்கான முதல் விதை இங்கே...

    http://www.kovaineram.com/2012/05/blog-post_16.html

    ReplyDelete

Animated Social Gadget - Blogger And Wordpress Tips